India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான பாஜக கூட்டணியில் பாமக இணைந்துள்ளது. இந்த நிலையில், பிரதமர் மோடி சேலத்தில் இன்று நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அப்போது பாமக போட்டியிடும் தொகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பாஜக கூட்டணியில் தற்போது பாமக, அமமுக, ஐஜேகே, புதிய நீதிக் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன.
இன்று (மார்ச் 19) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில், இன்று அதிகாரபூர்வ அறிவிப்பை ராமதாஸ் வெளியிடுகிறார் ➤ நீண்ட இழுபறிக்கு பின்னர் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதி ஒப்பந்தம் கையெழுத்தானது ➤ அதிமுகவின் கொடி, சின்னத்தை ஓபிஎஸ் பயன்படுத்த தடை விதித்தது சென்னை உயர்நீதிமன்றம் ➤ ஆளுநர் பதவியை ராஜினாமா செய்தார் தமிழிசை ➤ மக்களவைத் தேர்தல் பரப்புரையை மார்ச் 22ஆம் தேதி திருச்சியில் முதல்வர் ஸ்டாலின் துவங்குகிறார்.
வீட்டிலிருந்து (Work From Home) வேலை செய்யும் ஊழியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாது என டெல் நிறுவனம் அறிவித்துள்ளது. கணினி, மடிக்கணினி & மின்னணு உதிரி சாதனங்களை உற்பத்தி செய்யும் முன்னணி நிறுவனமான டெல், தனது ஊழியர்களை ஹைப்ரிட் – ரிமோட் என இரு பிரிவுகளாக வகைப்படுத்தியுள்ளது. இதில் ஹைப்ரிட் ஊழியர்களை வாரத்தில் 3 நாள்களுக்கு அலுவலகத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் பாஜக வெற்றி பெறாது என பிரதமர் மோடிக்கு தெரியும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். மதுரையில் பேசிய அவர், “வெற்றி பெறும் திமுக கூட்டணிக்கு நெருக்கடியை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே தேர்தல் ஆணையம் மூலம் தேர்தல் தேதி அறிவித்துள்ளனர். மிகக் குறைந்த கால அவகாசத்தை வழங்கியுள்ளனர். தேர்தல் ஆணையமே மோடியின் பிடியில் உள்ளது” எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் நாளை மறுநாள் அறிவிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலில் திமுக 21 இடங்களில் நேரடியாக போட்டியிடுகிறது. குறிப்பாக அதிமுக வலுவாக உள்ளதாக கூறப்படும் கொங்கு மண்டலத்தில் பல தொகுதிகளில் களம் காண்கிறது. எனவே அதிமுகவுக்கு சவாலை ஏற்படுத்தும் வகையில் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மோடி கலந்துகொண்ட சாலை பேரணியை காயத்ரி ரகுராம் விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவையில் இன்று வாகனப் பேரணியில் கலந்துகொண்டார். சுமார் 2.5 கிமீ தொலைவுக்கு இந்த வாகனப் பேரணி நடந்தது. இதில் பெரிய அளவுக்கு கூட்டம் இல்லை என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படுகிறது. இது குறித்து X-ல் பதிவிட்டுள்ள காயத்ரி ரகுராம், கூட்டம் இல்லாமல் பிரதமர் ரோடு ஷோ நடத்தியதாக விமர்சித்துள்ளார்
மக்களவைத் தேர்தல் பரபரப்பு தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது. அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என எதிர்பார்த்த சூழலில், பாஜக கூட்டணியில் இணைவதாக அறிவித்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அதிமுக, அடுத்தக்கட்ட நடவடிக்கையில் தீவிரம் காட்டியுள்ளது. குறிப்பாக, தேமுதிகவை தங்கள் பக்கம் இழுக்க நினைக்கும் அதிமுக, அந்தக் கட்சிக்கு கூடுதல் தொகுதிகளை ஒதுக்கவும் முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் அஸ்தமனமான சனி பகவான் இன்று (மார்ச் 18) கும்ப ராசியில் உதயமாகியுள்ளார். இதனால் மேஷம், ரிஷபம், மிதுனம், சிம்மம் ஆகிய ராசியினருக்கு பண மழை கொட்டப்போகிறது. புதிய முதலீடுகள், வியாபாரத்தில் லாபம், நீண்ட நாள் நிலுவையில் உள்ள கடன் பாக்கி வசூலாவது, பல நாள் கனவு கைகூடுவது, வெளிநாடுகளில் பணி வாய்ப்பு போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
பாஜக – பாமக கூட்டணி உறுதியான நிலையில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் நாளை காலை அறிவிக்க உள்ளார். இன்று தைலாபுரத்தில் நடைபெற்ற பாமக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில், பாஜக கூட்டணியில் இணைவது தொடர்பாக நிர்வாகிகளிடம் பேசி இறுதி முடிவெடுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் பாமகவுக்கு 10 முதல் 14 தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை இடமும் வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது.
Sorry, no posts matched your criteria.