News July 11, 2024

நீட் தேர்வு வழக்கு ஒத்திவைப்பு

image

கடந்த மே 5ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், விசாரணையை வருகிற 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

News July 11, 2024

கேரள சட்டப்பேரவைத் தேர்தலை குறிவைத்து பிரியங்கா போட்டி?

image

வயநாடு எம்பி பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால், அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடவுள்ளார். மேலோட்டமாக இதை பார்த்தால், எம்பியாகும் நோக்கில் அவர் போட்டியிடுவது போல தெரியும் என்றும், ஆனால் இதன் பின்னணி கேரள சட்டப்பேரவைத் தேர்தலே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வதே இதன்நோக்கம் என தெரிவிக்கின்றனர்.

News July 11, 2024

இயக்குநரால் காணாமல் போன நடிகை?

image

கடந்த 1990-களில் விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடித்த மந்த்ரா, இயக்குநர் ஒருவரால் தனது சினிமா வாழ்க்கையே பாழாய் போனதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2003ல் மகேஷ்பாபு நடித்த நிஜம் தெலுங்கு படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், படத்தின் இயக்குநர் கதை கூறிய விதமும் படமாக்கியதும் வேறு மாதிரி இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News July 11, 2024

நடைமுறை சிக்கல் உள்ளது: முத்துசாமி

image

தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது என்றும், அதில் நடைமுறை சிக்கல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும், மதுப் பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

News July 11, 2024

வேள்பாரி நாவலின் சிறப்பம்சம் (1)

image

விகடன் இதழில் வாரந்தோறும் வெளியான ‘வேள்பாரி’ கதை பின்னாளில் நாவலாக அச்சிடப்பட்டது. அதனை மையப்படுத்தி 3 பாகங்களாக திரைப்படம் இயக்க இருப்பதாக ஷங்கர் அறிவித்துள்ளார். அப்படி இந்த நாவலில் என்ன சிறப்பு? இந்த அறிவிப்பு ஏன் கவனம் பெறுகிறது? தமிழின் பெரும்பாலான வரலாற்று புதினங்கள், பேரரசர்களை மையப்படுத்தியே எழுதப்பட்டுள்ளன. ஆனால், வேள்பாரி நாவல் குறுநில மன்னன் பாரியை மையப்படுத்தியது.

News July 11, 2024

வேள்பாரி நாவலின் சிறப்பம்சம் (3)

image

சேரர், சோழர், பாண்டியர் என்ற மூன்று பேரரசுகளின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிய குறுநில மன்னன்தான் வேள்பாரி. பறம்பு மலைப்பகுதியை ஆட்சி செய்த பாரி, மூன்று அரசுகளின் படைகள் சூழ்ந்தபோது தடுப்பு அரண்கள் அமைத்து போரிட்டவர். அவரது வாழ்க்கையைப் பற்றியும் பறம்பு மக்களின் வாழ்க்கை முறைப் பற்றியும் நாவலாக விரிந்த கதை இனி திரைப்படமாகவும் குதூகலிக்கப் போகிறது.

News July 11, 2024

வேள்பாரி நாவலின் சிறப்பம்சம் (2)

image

பொன்னியின் செல்வன் நாவலை மணிரத்னம் திரைப்படமாக்கியதற்கு பின்னர் வரலாற்று புனித திரைப்படங்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அதற்கு தீனி போடும் வகையில் சிறப்பான கதையம்சம் கொண்ட படம்தான் வேள்பாரி. காதல், கலாசாரம், போர் யுத்திகள், அரசாட்சி என்று பல வகையான தமிழர் நாகரிகம் பற்றி வேள்பாரி நாவல் விளக்கமாக விவரிக்கிறது. மேலும், ஷங்கரின் பிரம்மாண்டம் இதில் சேர்வதால் எதிர்பார்ப்பு அதிகரிக்கித்துள்ளது

News July 11, 2024

தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு

image

தமிழகத்தில் நாளை (12.07.2024) மற்றும் நாளை மறுநாள் (13.07.2024) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இரண்டு நாள்களும் நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஆங்காங்கே கனமழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. 14ஆம் தேதியில் இருந்து 17ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை பெய்யக்கூடும்.

News July 11, 2024

எஸ்.ஆர்.சேகரிடம் சிபிசிஐடி விசாரணை

image

மக்களவை தேர்தலுக்கு முன் தாம்பரம் ரயில் நிலையத்தில் ₹4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இந்த வழக்கில், பாஜக மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் சென்னையில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்தில் ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டது. இந்நிலையில், இன்று ஆஜரான எஸ்.ஆர்.சேகரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முன்னதாக கோவையில் உள்ள அவரது வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 11, 2024

சசிகலா, ஓபிஎஸ் குறித்து பேசாத இபிஎஸ்

image

நாடாளுமன்றத் தேர்தல் தோல்வி தொடர்பான அதிமுகவின் கருத்து கேட்பு கூட்டங்களில் ஓபிஎஸ் குறித்தோ, சசிகலா குறித்தோ, யாருமே பேசவில்லை என்று தகவல் வெளியாகியிருக்கிறது. வலுவான கூட்டணி அமையாததுதான் தோல்விக்கு காரணம் என்று பேசிய சிவகங்கை நிர்வாகிகள் கூட அவர்கள் இருவர் குறித்து பேசவில்லை. அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று இருவரும் அழைப்பு விடுத்துவரும் நிலையில் இபிஎஸ் தொடர்ந்து புறக்கணித்து வருகிறார்.

error: Content is protected !!