India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

இரவு நேரத்தில் போதுமான தூக்கம் இல்லையெனில் அது குழந்தையின்மை பிரச்னைக்கு காரணமாகலாம் என்கின்றன ஆய்வு முடிவுகள். சரியாக தூங்காத போது, தூக்கம்-விழிப்புக்கு காரணமான மெலடோனின், கார்டிசோல் ஹார்மோன்களின் சமநிலை பாதிக்கிறது. இதனால் ஆண், பெண் இருபாலருக்கும் பாலியல் ஹார்மோன்கள் சுரப்பு பாதிக்கப்படுகிறது. மேலும், தூக்கம் குறைவதால் ஏற்படும் உடல் பாதிப்புகளால் ஆண்களின் உடல் செயல்திறனும் குறையக்கூடும்.

தனக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவிக்க ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரி, மாதம்பட்டி ரங்கராஜ் HC-ல் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையில், ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு DNA சோதனை செய்ய வேண்டும் என ரங்கராஜ் தரப்பில் வாதிடப்பட்டது. மேலும் DNA பரிசோதனையில் தான் தந்தை என்று தெரிய வந்தால் குழந்தையை கவனிக்கும் பொறுப்பை முழுவதும் ஏற்க தயாராக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரண விஷயம் என்று நீங்கள் அலட்சியமாக செய்யும் சில விஷயங்கள், உங்கள் எதிர்காலத்துக்கே ஆபத்தாக வந்தால் என்ன செய்வீர்கள்? ஆம், கவனமாக இல்லையெனில் உண்ணும் உணவு முதல் அணியும் ஆடை வரை பல பழக்கங்கள் ஆண்மைக் குறைவுக்கு காரணமாகலாம் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். அவற்றில் சிலவற்றை மேலே படங்களாக தொகுத்து வழங்குகிறோம். அவற்றை தவிர்த்து ஆரோக்கிய வாழ்க்கை வாழுங்கள். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணலாமே!

டெல்லி கார் வெடிப்பில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு PM மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். டெல்லி சம்பவம் குறித்து அமித்ஷா மற்றும் அதிகாரிகளிடம் தொடர்ந்து கேட்டறிந்து வருவதாகவும் அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் உடல்நலம் பெறுவார்கள் என்ற நம்பிக்கையுள்ளதாகவும் மோடி கூறியுள்ளார்.

இன்று மாலை 6.52 மணிக்கு டெல்லியே பேரதிர்ச்சியில் ஸ்தம்பித்தது. செங்கோட்டை பகுதியில் கார் குண்டு வெடித்துச் சிதறியதில் உடல் சிதறி 10 பேர் பலியானது பெரும் துயரம். சம்பவ இடத்தின் போட்டோஸ் வெளியாகி காண்போரின் நெஞ்சை உலுக்குகின்றன. அதன்மூலம், கோர நிகழ்வின் தீவிரத்தையும் அங்கிருந்தவர்களின் மரண ஓலத்தையும் நம்மால் எளிதில் உணர முடிகிறது. உறவுகளை இழந்து தவிப்பவர்களை என்ன சொல்லி தேற்றுவது?

டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். கார் வெடிப்பில் பல அப்பாவி மக்கள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும், மிகுந்த வேதனையையும் அளிப்பதாக அவர் தனது X தளத்தில் தெரிவித்துள்ளார். மேலும் அந்த இடத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் உண்மையிலேயே மனதை சுக்குநூறாக நொறுக்கிவிட்டதாகவும் கூறியுள்ளார்.

ப்ரோ நீங்க இந்த மொபைல்லாம் யூஸ் பண்ணியிருக்கீங்களா? ஸ்மார்ட்போனுக்கு முன்பு இந்த போன்கள் தான் கெத்தா, மாஸா இருந்துச்சு. 2000-களில் வெளிவந்த இந்த கிளாஸிக் போன்களுக்கு இப்பவும் நல்ல வரவேற்பு இருக்கு. ஏராளமான டிசைன்ஸ், புதுபுது ஆப்ஷன்ஸ் என மிரட்டிய போன்களை, மேலே போட்டோஸாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்களுக்கு பிடித்த போன் எது? கமெண்ட்ல சொல்லுங்க.

<<18247000>>நடிகை த்ரிஷா<<>> வீட்டை தொடர்ந்து பழம்பெரும் நடிகை சச்சு வீட்டிற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டதாக இ-மெயில் மூலம் போலீஸுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து, சச்சு வீட்டில் குவிந்த போலீஸார், மோப்ப நாய், நிபுணர்கள் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரியவந்துள்ளது.

டெல்லி கார் வெடிப்பு குறித்து அனைத்து கோணங்களிலும் விசாரிக்கப்படும் என அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் செங்கோட்டை அருகே வெடித்தது ஹூண்டாய் I20 என்றும், சம்பவ இடத்தில் இருந்து கைப்பற்றப்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.