India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பாஜக கூட்டணியில் பாமக கடந்த முறை 7 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில், தற்போது கூடுதலாக 3 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தைலாபுரம் தோட்டத்திற்கு அண்ணாமலை 6 மணி வந்தார். ஆனால், காலை 7.30 மணி வரை நல்ல நேரம் இல்லை. இதனால், இருகட்சிகளின் தலைவர்களும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் பேசிய நிலையில், சரியாக காலை 7.47 மணிக்கு நல்ல நேரத்தில் தொகுதி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டதால் ரோஹித் ரசிகர்களின் கோபம் அதிகரித்துள்ளது. சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில் ரோஹித் பற்றிய கேள்விகளை ஹர்திக் மற்றும் பயிற்சியாளர் பௌச்சர் இருவரும் தவிர்த்துவிட்டனர். இதனால் ரசிகர்கள் இன்னும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், ஹர்திக்கிற்கு எதிராக #RIPHARDIKPANDYA என்ற ஹேஷ்டேக்கை ரோஹித் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
மார்ச் 24 ஆம் தேதி இபிஎஸ் திருச்சியில் தனது தேர்தல் பரப்புரையைத் தொடங்குகிறார். மார்ச் 24 – 31 வரை தனது முதற்கட்ட பரப்புரையை மேற்கொள்கிறார். மார்ச் 24 – திருச்சி, மார்ச் 25 – தூத்துக்குடி, நெல்லை, மார்ச் 27 -குமரி, தென்காசி, மார்ச் 28 – விருதுநகர், ராமநாதபுரம், மார்ச் 29 – காஞ்சி, ஸ்ரீபெரும்புதூர், மார்ச் 30 – புதுச்சேரி, கடலூர், மார்ச் 31 – சிதம்பரம், நாகையில் பரப்புரையை மேற்கொள்கிறார்.
கேரளாவின் கொச்சியில் அமைந்துள்ள திருக்கயில் மகாதேவன் கோவிலுக்கு விலங்குகள் நல வாரியமான பீட்டா அமைப்பும், நடிகை பிரியாமணியும் இணைந்து இயந்திர யானையை வழங்கியுள்ளனர். இந்த கோவிலில் உயிருள்ள யானையை பயன்படுத்துவதற்குப் பதிலாக இயந்திர யானையை பயன்படுத்த உள்ளதாக கோவில் நிர்வாகம் சமீபத்தில் அறிவித்தது. இதை பாராட்டும் விதமாக தற்போது ‘மகாதேவன்’ என்ற இயந்திர யானையை பரிசளித்துள்ளனர்.
பொன்முடிக்கு தண்டனை விதித்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றம் ரத்து செய்யவில்லை, இடைக்காலமாக நிறுத்தி வைத்துள்ளது என அதிமுக வழக்கறிஞர் அணி கூறியுள்ளது. குற்றமற்றவர் என்று தீர்ப்பளிக்கப்படவில்லை என்பதால் ஆளுநர் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைப்பது சட்ட ரீதியாக ஏற்கத்தக்கதல்ல. அவ்வாறு பதவிப் பிரமாணம் செய்தால், அதற்கு எதிராக நாங்கள் வழக்கு தொடருவோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக பாஜக கூட்டணியில் ஐக்கியமாகியுள்ளது. சற்றுமுன் பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன் தைலாபுரம் தோட்டத்திற்கு வந்து, பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணி உடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின் 10 மக்களவைத் தொகுதி, ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கான ஒப்பந்தத்தில் இரு கட்சிகளின் தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்கு பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009ல் வெற்றி பெற்ற காங்., 2014ல் தனித்துபோட்டியிட்டு தோல்வியடைந்தது. 2019ல் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது.
இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் லண்டனில் குடியேற உள்ளதாக கூறப்படுகிறது. இரண்டாவது குழந்தை பிறந்தபின் அனுஷ்கா நீண்ட நாள்களாக லண்டனிலேயே தங்கியுள்ளார். குழந்தைகளுக்காக அவர்கள் அங்கு குடியேற விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக பெரும் தொகை செலவழித்து குடியுரிமை பெற உள்ளார்களாம். கிரிக்கெட் போட்டிகளுக்காக மட்டும் கோலி இந்தியா வருவார் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக மூவேந்தர் புலிப்படை அமைப்பு, மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்கம் நேற்று இரவு அறிவித்துள்ளன. இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து இரு அமைப்பின் தலைவர்களும் ஆதரவு கடிதத்தை அளித்தனர். தற்போது அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம், புரட்சி பாரதம், SDPI, அகில இந்திய ஃபார்வாட் பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவும் இக்கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளது.
பெங்களூருவில் 75 சமையல் கலைஞர்கள் இணைந்து உலகின் மிகவும் நீளமான தோசையை உருவாக்கி, கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். MTR ஃபுட்ஸ் நிறுவனத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு. 123.03 அடி நீளம் கொண்ட தோசையை உருவாக்கினர். 110 முறை தோல்வியை தழுவிய சமையல் கலைஞர்கள் பல்வேறு திட்டமிடலுக்கு பின்னர் இதனை சாதித்துள்ளனர். இதற்கு முன்னர், 54 அடி நீளமான தோசையே, உலகின் நீளமான தோசையாக சாதனை பட்டியலில் இடம்பெற்றிருந்தது.
Sorry, no posts matched your criteria.