India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் மேலும் 1.48 லட்சம் மகளிருக்கு வரும் 15ஆம் தேதி முதல், மாதந்தோறும் ₹1000 வழங்கப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நிகழ்ந்த மக்களுடன் முதல்வர் திட்டத்தின் 2ஆவது கட்ட தொடக்க விழாவில் பேசிய அவர், மகளிர் உரிமைத் தொகை கேட்டு மேல்முறையீடு செய்தவர்களில் 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நடைபெறும் திருமணங்கள் சுமார் ₹10.7 லட்சம் கோடி அளவுக்கான பொருளாதாரம் உள்ளடக்கியுள்ளதாக ‘ஜெஃப்ரீஸ்’ என்ற மூலதன சந்தை நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது உணவு மற்றும் மளிகைப் பொருள் சந்தை வணிகத்தின் ₹56.5 லட்சம் கோடியுடன் ஒப்பிடுகையில், 2ஆவது பெரிய நுகர்வுச் சந்தையாகும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் ஒரு கோடி திருமணங்கள் நடைபெறுகின்றன.

‘இந்தியன்’ படம் ரஜினிக்காக உருவாக்கப்பட்டதாக, அப்படத்தின் உதவி இயக்குநரான வசந்தபாலன் தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ‘காதலன்’ படப்பிடிப்பின் போது, ஷங்கரை சந்தித்த ரஜினி தனக்கு ஒரு கதையை தயார் செய்ய கேட்டதாகவும், அதற்காக ‘பெரிய மனுஷன்’ என்ற கதையை ஷங்கர் உருவாக்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஆனால், கால்ஷீட் பிரச்னையால் அப்படத்தில் ரஜினி நடிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு கடும் கண்டனம் தெரிவித்த தொல் திருமாவளவன், அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் வரை அங்கேயே இருந்தார். அனைத்து காரியங்களும் முடிந்தபிறகே அவர் புறப்பட்டுச் சென்றார். இதை சுட்டிக்காட்டிய அரசியல் பிரமுகர்கள், தலித் சமூக தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலையால் கொந்தளிப்பான சூழல் நிலவியதாகவும், திருமாவளவன் வரவில்லையெனில், நிலைமை கைமீறியிருக்கும் எனத் தெரிவித்துள்ளனர்.

மக்களவைத் தேர்தல் முடிவு வெளிவந்ததும் தமிழக அமைச்சரவை மாற்றப்படலாம் என முதலில் கூறப்பட்டது. ஆனால் பல நாள்களான பின்னரும் அமைச்சரவை மாற்றப்படவில்லை. இந்நிலையில், இந்த மாத கடைசியில் முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா செல்ல இருப்பதாகவும், அதற்கு முன்பு தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இது உறுதிப்படுத்தப்படவில்லை.

அதிமுக தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் என, அமைச்சர் ரகுபதி அழைப்பு விடுத்துள்ளார். அவ்வாறு உண்மையான தொண்டர்கள் வந்தால், திமுக 2 மடங்கு வலிமையாகிவிடும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், அதிமுக நிர்வாகிகள் இபிஎஸ்க்கு நெருக்கடி கொடுப்பதால், அக்கட்சி தற்போது ஆபத்தான கட்டத்தில் உள்ளதாகவும், கொங்கு மண்டலத்தை சேர்ந்த நிர்வாகிகளே, அவருக்கு நெருக்கடி கொடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

கடந்த மே 5ல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. அதைத்தொடர்ந்து, மறுதேர்வு நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் தலைமை நீதிபதி அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ நிலை அறிக்கை தாக்கல் செய்த நிலையில், விசாரணையை வருகிற 18ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

வயநாடு எம்பி பதவியை ராகுல் ராஜினாமா செய்ததால், அத்தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக பிரியங்கா போட்டியிடவுள்ளார். மேலோட்டமாக இதை பார்த்தால், எம்பியாகும் நோக்கில் அவர் போட்டியிடுவது போல தெரியும் என்றும், ஆனால் இதன் பின்னணி கேரள சட்டப்பேரவைத் தேர்தலே என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸை வெற்றி பெறச் செய்வதே இதன்நோக்கம் என தெரிவிக்கின்றனர்.

கடந்த 1990-களில் விஜய், அஜித்துக்கு ஜோடியாக நடித்த மந்த்ரா, இயக்குநர் ஒருவரால் தனது சினிமா வாழ்க்கையே பாழாய் போனதாக வேதனையுடன் தெரிவித்துள்ளார். கடந்த 2003ல் மகேஷ்பாபு நடித்த நிஜம் தெலுங்கு படத்தில் மிகவும் நெருக்கமான காட்சிகளில் நடித்ததால் தனது சினிமா வாழ்க்கை முடிந்துவிட்டதாகவும், படத்தின் இயக்குநர் கதை கூறிய விதமும் படமாக்கியதும் வேறு மாதிரி இருந்ததாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தமிழகத்தில் கள்ளுக்கடை திறப்பது குறித்து தற்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். டாஸ்மாக் கடைகளை குறைப்பதை உடனே செய்ய முடியாது என்றும், அதில் நடைமுறை சிக்கல் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்களை மனதளவில் தயார் செய்ய வேண்டும், மதுப் பழக்கம் உள்ளவர்களை படிப்படியாக குறைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.