News March 19, 2024

CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்

image

சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியின் போது, வங்கதேச வீரர் முஸ்தஃபிசுர் காயமடைந்தார். பின் நடக்க முடியாமல் இருந்த அவரை Stretcher-இல் தூக்கிச் சென்றனர். இதையடுத்து IPL தொடரில் அவர் பங்கேற்க வாய்ப்பில்லை என்றே செய்திகள் வெளியானது. இந்நிலையில், காயம் குணமடைந்ததால் IPL தொடரில் கலந்துகொள்வதற்காக இன்று சென்னை கிளம்பியுள்ளார். இவரது வருகை CSK அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

News March 19, 2024

பாபா ராம்தேவுக்கு சிக்கல்

image

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் நேரில்
ஆஜராகும்படி பாபா ராம்தேவுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதஞ்சலி ஆயுர்வேதாவின் விளம்பரம் தொடர்பான விவகாரத்தில், ராம்தேவ், ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடைபெறுகிறது. இதன்மீது விளக்கமளிக்கக் கோரி, உச்சநீதிமன்றம் அனுப்பிய நோட்டீஸூக்கு 2 பேரும் விளக்கமளிக்காததால், நேரில் ஆஜராகும்படி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News March 19, 2024

VIRAL: கிங் கோலியின் புதிய லுக்

image

இந்திய கிரிக்கெட் அணியின் ரன் மெஷின் விராட் கோலி ஐபிஎல் தொடருக்கு தயாராகி வருகிறார். ஒவ்வொரு முறையும் மைதானத்திற்குள் வரும்போது கோலி, புதிய கெட்டப்பில் காணப்படுவார். அந்தவகையில், இந்த முறையும் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார். அவர் புதிய லுக்கில் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. இந்த கெட்டப் எப்படி இருக்கிறது என கமெண்ட் பண்ணுங்க.

News March 19, 2024

32 பள்ளிகள் மூடல்? தமிழக அரசு அதிர்ச்சி முடிவு

image

தமிழ்நாட்டில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ள 32 அரசு பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக அதிர்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்காமல், மூடுவது என்பது சரியான போக்கு அல்ல. இது ஒரு தலைமுறையின் கல்வியை அழிக்கும் செயலாகும். எனவே, பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி மாணவர் சேர்க்கையை அதிகரிக்க செய்வதே நல்லது.

News March 19, 2024

இறுதி அஸ்திரத்தை கையில் எடுத்துள்ளார் மோடி

image

பிரதமர் மோடி நேற்று கோவை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ், இதே போல, குஜராத் கலவரம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, ஒக்கி புயல், மணிப்பூர் கலவரத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பியவர், மத வெறுப்புணர்வை தூண்டும் இறுதி அஸ்திரத்தை தேர்தல் ஆயுதமாக மோடி கையில் எடுத்துள்ளதாக சாடினார்.

News March 19, 2024

சூட்டிங்கிற்கு லேட்டாக வந்ததால் அடி வாங்கிய நடிகர்

image

படப்பிடிப்பிற்கு தாமதமாக வந்ததால், இந்தி நடிகர் கோவிந்தா கன்னத்தில் அறை வாங்கிய சம்பவம் தெரிய வந்திருக்கிறது. சுமார் 400 படங்களில் நடித்துள்ளவர் மூத்த நடிகர் அம்ரிஷ் புரி. அவருடன் இணைந்து நடித்தபோது, 9 மணி நேரம் தாமதமாக கோவிந்தா வந்துள்ளார். இதனால் பொறுமை இழந்த அம்ரிஷ் புரி, கோவிந்தாவின் கன்னத்தில் அறைந்துள்ளார். இதன்பிறகு, இருவரும் எந்தப் படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

News March 19, 2024

”பானை சின்னத்தில் போட்டி”

image

விசிக வேட்பாளர்கள் பானை சின்னத்தில் போட்டியிடுவதாக அதிகாரப்பூர்வமாக அக்கட்சியின் தலைவர் திருமா அறிவித்துள்ளார். 2 தொகுதிகளிலும் வெற்றிபெற்று தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரத்தை பெறுவோம் என சூளுரைத்த அவர், அதிமுகவிற்கும் திமுகவிற்கும் தேர்தல் முரண்கள் உண்டு; ஆனால் சமூகநீதி என்ற புள்ளியில் இரு கட்சிகளும் இணைந்துள்ளன. தமிழ்நாட்டில் 2வது இடம் பிடிக்க பாஜக பல்வேறு சதிகளை செய்வதாக விமர்சித்தார்.

News March 19, 2024

ரோடு ஷோவில் குழந்தைகளுக்கு அனுமதி வழங்கியது ஏன்?

image

கோவையில் நேற்று பிரதமரின் ரோடு ஷோவில் அரசு பள்ளி மாணவர்கள் 50 பேர் கலந்துகொண்டது தொடர்பாக பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. தேர்தல் பரப்புரையில் சிறுவர்கள், குழந்தைகளை ஈடுபடுத்தக்கூடாது என தேர்தல் ஆணையம் எச்சரித்திருந்தது. இருந்தும் நேற்று நடைபெற்ற பாஜக பரப்புரையில் பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டனர். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News March 19, 2024

மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் பிரபல நடிகை

image

‘சைத்தான்’ படத்தின் மூலம் புகழ்பெற்ற நடிகை அருந்ததி நாயர் நேற்று சென்னை அருகே பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கினார். இதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருவதாகவும், அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

News March 19, 2024

வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது

image

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. நாளை தொடங்கும் வேட்புமனு தாக்கல் மார்ச் 27ஆம் தேதி நிறைவடைகிறது. வேட்புமனு மீதான பரிசீலனை மார்ச் 28 ஆம் தேதி நடைபெறுகிறது. வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி தேதி மார்ச் 30 ஆகும்.

error: Content is protected !!