India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை செப்டம்பர் 30ஆம் தேதிக்குள் இணைக்க வேண்டுமென, அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அப்படி இணைக்காவிட்டால் ரேஷன் பொருட்களை பெற முடியாது என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளும் ஆதாருடன் ஏற்கெனவே இணைக்கப்பட்டுள்ளதால், மக்கள் அச்சப்பட வேண்டியதில்லை என தமிழக அரசு அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 11 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 10 மணி வரை ஈரோடு, சேலம், நாமக்கல், திருவள்ளூர், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, நீலகிரி, கோவை மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

உணவு பாதுகாப்பு குறித்த அச்சம் உலகளவில் அதிகரித்து வருகிறது. இந்த சூழலில், சீனாவில் நிலக்கரி எண்ணெய் ஏற்றி சென்ற டேங்கர் லாரிகளை சுத்தம் செய்யாமல், சமையல் எண்ணெய்யை ஏற்றி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. ஹைட்ரோகார்பனை கொண்ட நிலக்கரி எண்ணெய்யை உட்கொள்வது ஆபத்தானது என உணவு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அண்ணா பல்கலை. பதிவாளருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான உயர் நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, பல்கலை. ஊழியர் மது என்பவரின் ஓய்வூதியம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு உடனடி நிவாரணம் அளிக்க பதிவாளருக்கு உத்தரவிட்டிருந்தது.

சேமிக்கும் பழக்கம் சிறந்த தூக்கத்திற்கு பங்களிப்பதாக, சமீபத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தின் ஆய்வுப்படி, சேமிப்புக்காக மாதாந்திரத் தொகையை ஒதுக்குவது, எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்க உதவுவதாக தெரியவந்துள்ளது. குறைந்த சம்பளத்திலும் சேமிப்பு பழக்கம் கொண்டவர்கள், அதிக சம்பளம் வாங்குபவர்களை விட திருப்தியான வாழ்க்கையை வாழ்வதாகக் கூறப்படுகிறது.

பல்வேறு உலக நாடுகளுக்கும் சென்று இசை நிகழ்ச்சி நடத்தும் ஏ.ஆர்.ரஹ்மான், வரும் 27ஆம் தேதி மலேசியாவில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். அதற்காக மலேசியா சென்றுள்ள அவர், மலேசிய நாடாளுமன்ற வளாகத்தில் அந்நாட்டு பிரதமர் அன்வர் இப்ராஹிமை சந்தித்து பேசியுள்ளார். அந்த படங்களை X தளத்தில் பகிர்ந்துள்ள அவர், அந்த சந்திப்பில் இசை, கட்டிடக்கலை மற்றும் தொழில்நுட்பம் குறித்து உரையாடியதாக தெரிவித்துள்ளார்.

வாய்விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் என்ற பழமொழியை மெய்யாக்கும் வகையில் சிரிப்பதை ஜப்பான் நாடு கட்டாயமாக்கியுள்ளது. ஜப்பான் நாட்டில் யமகாட்டா மாகாணத்தில், பொதுமக்கள் நாளொன்றுக்கு ஒருமுறையாவது வாய்விட்டு சிரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றப்பட்டுள்ளது. சிரிப்பதும், சிரிக்காமல் இருப்பதும் மனிதர்களின் அடிப்படை உரிமை என்று, இந்த சட்டத்திற்கு அந்நாட்டின் எல்டிபி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் வாயிலாக கோரிக்கை விடுத்துள்ள அவர், கைது செய்யப்பட்டுள்ள 80 மீனவர்களையும், 174 படகுகளையும் எவ்வித கட்டுப்பாடுகளும் இன்றி விடுவிக்க, துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களுக்கு இந்திய கணினி அவசரநிலைப் பதிலளிப்புக் குழு சைபர் தாக்குதல் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக, Android 12, 12L, 13 மற்றும் Android 14க்கு முந்தைய பதிப்புகளில் இயங்கும் ஃபோன்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகத் தெரிவித்துள்ளது. மேலும், கூகுள் ப்ளே ஸ்டோர் போன்ற நம்பகமான தளங்களில் இருந்து மட்டும் செயலிகளை பதிவிறக்கம் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் சரியாக வேலை செய்யாதவர்களின் பட்டியலை தயார் செய்ய திமுக தேர்தல் பொறுப்பாளர்களுக்கு அறிவாலயத்தில் இருந்து உத்தரவு பறந்துள்ளதாக கூறப்படுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், லிஸ்டை தயார் செய்யும் பணியில் தேர்தல் பணிக்குழு தீவிரம் காட்டி வருகிறதாம். இதனால், சில அமைச்சர்கள் மற்றும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கலக்கத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.