India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

வாட்ஸ்அப்பில் மெஸேஜை மொழிபெயர்ப்பு செய்யும் அம்சம் விரைவில் வர உள்ளது. இதன் மூலம், சாட் பக்கத்தில் வரும் செய்திகளை ஒரு மொழியில் இருந்து மற்றொரு மொழிக்கு மொழிபெயர்க்கலாம். இது கூகுள் லைவ் டிரான்ஸ்லேஷன் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் என Wabeta Info தெரிவித்துள்ளது. இந்த அம்சத்தை செயல்படுத்த, நீங்கள் மொழி தொகுப்பைப் பதிவிறக்கம் செய்து, மொழிபெயர்ப்பு செய்வதை உறுதிப்படுத்த வேண்டும்.

ஆம்ஸ்ட்ராங்கை கொலை செய்ய, திருவள்ளூர் வழக்கறிஞர் அருள் ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்ததும், கொலைக்கு பிறகு ஆயுதங்களை பதுக்க வேண்டிய இடத்தை தேர்வு செய்து கொடுத்ததும் அருள் தான் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, அவரின் பின்னணியில் உள்ள நபர்கள் யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சர்வதேச கிரிக்கெட்டில் 50,000 பந்துகள் வீசி, ஜேம்ஸ் ஆண்டர்சன் சாதனை படைத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 40,001 பந்துகள், ஒருநாள் போட்டிகளில் 9584 பந்துகள், சர்வதேச டி20 போட்டிகளில் 422 பந்துகள் என மொத்தம் 50,007 பந்துகளை வீசி இருக்கிறார். இந்த சாதனையை இதற்கு முன்பு முரளிதரன், கும்ப்ளே மற்றும் வார்னே படைத்துள்ளனர்.

கவின் நடித்து கடந்த 2023ல் வெளியான டாடா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இயக்குநர் கணேஷ் கே பாபு, அடுத்ததாக துருவ் விக்ரம் அல்லது ஜீவாவை வைத்து படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், இதில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. ஜெயம் ரவி தற்போது ஜெனி, காதலிக்க நேரமில்லை, பிரதர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

குஜராத்தில் இருந்து தமிழகத்திற்கு போதைப் பொருட்கள் கடத்தி வருவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் என தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தமிழக அரசும் போதைப் பொருட்கள் நடமாட்டத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும் என்ற அவர், தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்துள்ள கொலை, கொள்ளை சம்பவங்களை ஒப்பிடும்போது, கடந்த 3 ஆண்டுகளில் குறைவாகத் தான் நடந்துள்ளது என்றார்.

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் தொடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் அவருக்கு இடைக்கால ஜாமின் வழங்கியது. மேலும், சில விளக்கங்களுக்காக இவ்வழக்கினை, கூடுதல் நீதிபதிகள் கொண்ட வேறு அமர்வுக்கும், நீதிபதிகள் சஞ்ஜீவ் கண்ணா, திபங்கர் தத்தா பரிந்துரைத்தனர். இதனிடையே, சிபிஐ வழக்கும் நிலுவையில் இருப்பதால், கெஜ்ரிவால் சிறையிலிருந்து விடுதலையாக முடியாது.

தமிழகத்தில் மாலை 5 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை, சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, தூத்துக்குடி, கரூர், திண்டுக்கல், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தால், அவரது நெருங்கிய குடும்ப உறவுக்கு இழப்பீடு அளிக்கப்படும். திருமணம் ஆனவர் என்றால் மனைவிக்கும், திருமணம் ஆகாதவர் எனில் பெற்றோருக்கும் இழப்பீடு அளிக்கப்படும். இதுவே Next On Kin விதிகள் எனப்படுகிறது. இதை மிகவும் எளிமையாக சொல்ல வேண்டுமானால், காப்பீடு எடுத்தோர் உயிரிழக்க நேரிட்டால், அவர் நியமித்த நாமினிக்கு இழப்பீடு அளிக்கப்படுவதைக் குறிப்பிடலாம்.

தேங்காய் பாலில் மினரல்கள், புரதம், வைட்டமின்களோடு சேர்த்து கொழுப்பு அமிலங்கள் அதிகமாக இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகின்றனர். உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் கொழுப்பு நிறைந்த பாலுக்கு பதிலாக தேங்காய் பாலை எடுத்துக் கொள்ளலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். அதேசமயம் இதில் சாச்சுரேட்டட் கொழுப்பு இருப்பதால் கொலஸ்ட்ரால் பிரச்சனை, இதய நோய் உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது.

ஹத்ராசில் கடந்த 2ஆம் தேதி சாமியார் ஒருவரின் பிரசங்க நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 100க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த சம்பவம் குறித்து ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் 5 பேர் கமிட்டி அமைத்து விசாரிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தொடரப்பட்டிருந்தது. மனு இன்று விசாரணைக்கு வந்தபோது, அது வருத்தத்தை தரும் பிரச்னைதான், எனினும் உயர்நீதிமன்றத்தை நாடும்படி உத்தரவிட்டது.
Sorry, no posts matched your criteria.