India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக 5 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. இதற்காக தேமுதிக அலுவலகத்தில் விஜய பிரபாகரன் விருப்ப மனு அளிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான திமுகவின் தேர்தல் அறிக்கையில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தனித்தனி வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதில், சென்னை முதல் நெல்லை, கன்னியாகுமரி வரை அனைத்து மாவட்டங்களும் தனித்தனியாக பட்டியலிடப்பட்டுள்ளன. பின்னர் அந்தந்த மாவட்டங்களில் உள்ள முக்கிய கோரிக்கைகள் பட்டியலிடப்பட்டு, அது நிறைவேற்றி தரப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
மக்களவைத் தேர்தலில் திமுக நேரடியாக போட்டியிடும் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில் 50%க்கு மேல் புதியவர்கள் (11 பேர்) இடம்பெற்றுள்ளனர். 3 பெண்கள், அடிமட்ட தொண்டர்கள், ஒன்றியச் செயலாளர்கள் 2 பேருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முனைவர்களாக 2 பேரும், மருத்துவர்களாக 2 பேரும் உள்ளனர். மேலும், பட்டதாரிகளாக 19 பேரும், வழக்கறிஞர்களாக 6 பேரும் உள்ளனர்.
மத்தியில் I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்ததும், பெட்ரோல் விலை ரூ.75ஆகவும், டீசல் விலை ரூ.65ஆகவும் குறைக்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்துள்ளது. திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, “பெட்ரோல் ரூ.75ஆகவும், டீசல் ரூ.65ஆகவும் குறைக்கப்படும்” எனக் கூறப்பட்டுள்ளது. சென்னையில் தற்போது பெட்ரோல் ரூ.100.75க்கும், டீசல் ரூ.92.34க்கும் விற்கப்படுகிறது.
அதிமுக முதற்கட்டமாக 16 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி அதிமுக – திமுக 8 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன. இதேபோல், அதிமுக – காங்கிரஸ் 2 தொகுதியிலும், (கிருஷ்ணகிரி, கரூர்), அதிமுக – விசிக 2 தொகுதியிலும் (சிதம்பரம், விழுப்புரம்) நேரடியாக மோதுகின்றன. அதிமுக மற்ற தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தபின் இந்த எண்ணிக்கை மாறலாம்.
திமுக தலைவர் ஸ்டாலின் இன்று 21 பேர் கொண்ட மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார். அதில் 11 புது முகங்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்தாலும், எதிர்பார்க்கப்பட்டது போலவே வாரிசுகள் அடிப்படையிலும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நேருவின் மகன் அருண் நேரு, துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த், கனிமொழி, கலாநிதி வீராசாமி, தயாநிதி மாறன், தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் மீண்டும் வாய்ப்பு பெற்றுள்ளனர்.
I.N.D.I.A. கூட்டணி அரசு அமைந்தால், சிஏஏ சட்டம் ரத்து செய்யப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த அறிக்கையில், “குடியுரிமை திருத்தச் சட்டம்-2019 ரத்து செய்யப்படும். நாடு முழுவதும் சாதி வாரி கணக்கெடுப்பு. மாநில முதலமைச்சர்களைக் கொண்ட வளர்ச்சிக்கு குழு அமைக்கப்படும். ரயில்வேக்கு தனி பட்ஜெட். புதிய கல்விக் கொள்கை ரத்து” எனக் கூறப்பட்டுள்ளது.
எந்தெந்த தொகுதியில் போட்டி என்பது குறித்த தகவலை இன்று மாலை அறிவிப்பதாக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களிடையே பேசிய அவர், பாஜக கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளோம். எந்த சின்னத்தில் போட்டி என்பது குறித்து இன்று மாலை அறிவிப்போம் எனக் கூறியுள்ளார். இன்னும் ஓரிரு நாட்களில் பாஜகவின் இறுதிப் பட்டியல் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.
திமுகவில் தற்போதுள்ள 10 எம்.பிக்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, 1. வட சென்னை – கலாநிதி வீராசாமி 2. மத்திய சென்னை – தயாநிதி மாறன் 3. தென் சென்னை – தமிழச்சி 4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு 5. காஞ்சிபுரம் – செல்வம் 6. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன், 7. வேலூர் – கதிர் ஆனந்த் 8. நீலகிரி – ஆ.ராசா 9. தூத்துக்குடி – கனிமொழி 10. தி.மலை – அண்ணாதுரை ஆகியோர் மீண்டும் போட்டியிடுகின்றனர்.
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் தென் சென்னை தொகுதியில் அமைச்சர் தங்கம் தென்னரசின் மூத்த சகோதரியான தமிழச்சி தங்கப்பாண்டியன் மீண்டும் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2024இல் தென் சென்னையில் 2ஆவது முறையாக போட்டியிடுகிறார். மறைந்த திமுக முன்னாள் அமைச்சர் தங்கப்பாண்டியனின் வாரிசான இவர் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் மகனான ஜெ.ஜெயவர்த்தனாவை எதிர்த்து 2ஆவது முறையாக போட்டியிடவுள்ளார்.
Sorry, no posts matched your criteria.