India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

SIR-க்கு எதிராக தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஏற்கெனவே திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என SC அறிவித்துள்ளது. இந்நிலையில், தற்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களும் நாளை விசாரணைக்கு எடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

‘ஆதார் விஷன் 2032’ என்ற புதிய திட்டத்தின் கீழ், ஆதார் கார்டு சேவையிலும் AI தொழில்நுட்பத்தை கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 3 அதிநவீன தொழில்நுட்பங்கள் வரவுள்ளன ✦AI: மோசடிகளை குறைக்கவும் முடியும் ✦குவாண்டம் கம்ப்யூட்டிங்: எதிர்காலத்தில் வரக் கூடிய அச்சுறுத்தல்களில் இருந்து ஆதார் அமைப்பைப் பாதுகாப்பது ✦பிளாக்செயின்: தரவுகள் சரிபார்ப்பை பாதுகாப்பானதாக மாற்ற உதவும் என கூறப்படுகிறது.

வெள்ளி மீண்டும் விலை உயர்வைக் கண்டுள்ளது. இன்று (நவ.10) கிலோவுக்கு ₹2,000 அதிகரித்துள்ளது. 1 கிராம் ₹167-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹1,67,000-க்கும் விற்பனையாகிறது. கடந்த மாதத்தில் தங்கத்துடன் போட்டிப் போட்டுக் கொண்டு வெள்ளி விலை உயர்ந்ததால் பலரும், அதில் முதலீடு செய்தனர். ஆனால், அதன் பின்னர் விலை சரிந்த பிறகு அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். அவர்களுக்கு இன்றைய விலை உயர்வு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

கோவாவில் நடைபெற்ற ’அயர்ன்மேன் 70.3’ நிகழ்வில் பங்கேற்று நீச்சல், சைக்கிளிங், ஓட்டப்பந்தயத்தை நிறைவு செய்தார் அண்ணாமலை. இதனை பாராட்டி PM மோடி தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார். கலந்து கொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்த அவர், கட்சியின் இளம் சகாக்களான அண்ணாமலையும் தேஜஸ்வி சூர்யாவும் போட்டியை வெற்றிகரமாக நிறைவு செய்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.

சிறிய வயதில் பீச்சில் பார்த்த சிலையும், ஆண்ட்ரியாவும் தற்போதுவரை ஒரே மாதிரி இருப்பதாக விஜய்சேதுபதி கூறியுள்ளார். 2006-ல் ஒரு விளம்பரத்தில் ஆண்ட்ரியாவை பார்த்து ‘யார்ரா இந்த பொண்ணு!’ என நினைத்ததாகவும், நாளை தனது மகனும் அதே மாதிரி கேட்பார் என்றும் பேசியுள்ளார். மேலும், வீட்டுக்கு சென்று பெட்டில் படுப்பீங்களா, இல்லை ஃபிரிட்ஜில் உட்காருவீங்களா என கேட்டு அடுக்கடுக்காக வர்ணித்தார்.

பொங்கல் விடுமுறைக்கான ரயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. வரும் ஜன.9-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலான டிக்கெட் முன்பதிவு தினந்தோறும் காலை 8 மணிக்கு தொடங்கும். ஜன.9-ம் தேதிக்கான டிக்கெட் முன்பதிவு இன்று தொடங்கிய நிலையில், பலரும் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்றனர். ஜன.10-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளையும், ஜன.11-ம் தேதிக்கான டிக்கெட்டை நாளை மறுதினமும் <

காற்று மாசை பார்த்து நீங்கள் பயப்படுவது சரியே. ஏனென்றால் உலகளவில் ஆண்டுக்கு 7 மில்லியன் மக்கள் இதனால் இறக்கின்றனர். அத்துடன் 10-ல் 9 பேருக்கு சுவாச பிரச்னைகளும் ஏற்படுகிறது. இதிலிருந்து தப்பிக்க சிலர் காஸ்ட்லியான Air Purifier-களை வாங்கி வைக்கிறார்கள். இதற்கு பதிலாக வீட்டுக்குள் சில செடிகளை வளர்க்கலாம். அவை என்னென்ன என்பதை தெரிந்துகொள்ள போட்டோக்களை SWIPE பண்ணுங்க. பலரது உயிரை காக்கும் SHARE THIS.

கருணாநிதி எவ்வளவோ கூறியும் 1971 தேர்தலில் தான் போட்டியிட மறுத்ததாக துரைமுருகன் கூறியுள்ளார். அதன்பின், தன்னிடம் தயாளு அம்மாள், ஏன் சீட் வேண்டாம் என மறுக்கிறாய்; தேர்தல் செலவை பற்றி நீ கவலைப்பட வேண்டாம்; முதலில் நீ தேர்தலில் நில் எனக் கூறியதோடு, ₹10,000 கொடுத்தார். தான் அரசியலில் இவ்வளவு உச்சத்தில் இருக்க பிள்ளையார் சுழிபோட்டது ஸ்டாலின் தாயார் தயாளுதான் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள நடிகை த்ரிஷா வீட்டிற்கு 4-வது முறையாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. டிஜிபி அலுவலகத்திற்கு மின்னஞ்சல் மூலம் மிரட்டல் வந்ததை அடுத்து, மோப்ப நாய்கள் உதவியுடன் த்ரிஷா வீட்டில் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி முழுவதும் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. அண்மை காலமாக சினிமா நட்சத்திரங்களின் வீடுகளுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுகிறது.

மியான்மரின் புத்திடாவுங்கிலிருந்து 300 குடியேறிகளுடன் புறப்பட்ட படகு தாய்லாந்து-மலேசிய எல்லைக்கு அருகே கடலுக்குள் மூழ்கியது. இச்சம்பவத்தால் 7 பேர் உயிரிழந்த நிலையில், 100-க்கும் மேற்பட்டோர் தண்ணீரில் மூழ்கி மாயமானது தெரியவந்துள்ளது. இந்நிலையில், மாயமானவர்களை தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். இதேபோல 2021-ல் மலேசியாவில், புலம்பெயர்ந்தோர் சென்ற கப்பல் மூழ்கியதால் 20 பேர் இறந்தனர்.
Sorry, no posts matched your criteria.