India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
DC அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RR அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது. 17ஆவது ஐபிஎல் தொடரின் 9ஆவது போட்டியில், டாஸ் வென்ற RR அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆட்டத்தின் முடிவில் RR அணி 5 விக்கெட்டு இழப்பிற்கு 185 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து, 186 ரன்கள் இலக்கை துரத்திய DC அணி, 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ரன்கள் மட்டுமே எடுத்து போராடி தோல்வியடைந்தது.
அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முதல் 5 இடங்களுக்குள் வருமென மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய அவர், ‘ஒரே நேரத்தில் 4 செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களுக்கு அடிக்கல் நாட்டப்படுவது பெரிய சாதனை. ஐஃபோன் உற்பத்தி மூலம் ஆப்பிள் நிறுவனம் மட்டும் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை அளித்துள்ளது’ என்றார்.
பியூட்டி பார்லரில் அடிக்கடி Hair Straightening செய்ததால் 26 வயது இளம் பெண்ணின் சிறுநீரகம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முடியை நேராக்கப் பயன்படுத்தப்படும் அமிலங்கள் இளம் பெண்ணின் உடலில் நுழைந்து சிறுநீரகத்தை பாதித்ததாக மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். மேலும், அழகை மெருகேற்ற தற்போது பயன்படுத்தப்படும் ரசாயனங்கள் உடலுக்கு பாதிப்பு எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்ததற்கு, மெட்ரோ பணிகள் காரணமல்ல என மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது. இன்றிரவு 7 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு மெட்ரோ பணிகளால் ஏற்பட்ட அதிர்வு காரணமென தகவல் பரவியது. இதனை மறுத்துள்ள மெட்ரோ நிர்வாகம், விபத்து பகுதியில் இருந்து 240 அடி தொலைவில் தான் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருவதாக விளக்கமளித்துள்ளது.
சனி பகவானின் உக்கிரப் பார்வை பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளை உருவாக்கும். அந்த வகையில் கடகம், விருச்சிகம், மகரம், கும்ப ராசியினர் இனிவரும் காலங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். பிறருக்கு ஜாமின் தருவது, பத்திரங்களில் சாட்சிக் கையெழுத்து போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும், எதிர்பாராத இன்னல்கள் தேடி வரும் என்பதால் பரிகாரங்களை செய்து அதன்மூலம் ஆபத்திலிருந்து விடுபடலாம் என ஜோதிடர்கள் தெரிவித்துள்ளனர்.
விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு ₹20 கோடி ஆகுமென்றால், அதனை விஜயதாரணியிடம் வாங்கிவிடுங்கள் என சீமான் தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் பரப்புரைக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ‘மக்கள் பணத்தில் தானே தேர்தல் நடத்துவீர்கள், என் பணத்தை ஏன் உங்களது பதவி ஆசைக்காக வீணடிக்கிறீர்கள். அப்படி இல்லையென்றால், இடைத்தேர்தலுக்கு எவ்வளவு செலவாகுமோ ராஜினாமா செய்தவரிடம் வசூலித்துவிடுங்கள்’ என்றார்.
ஹிட்டர் பேட்ஸ்மேன் பட்லர் தொடர்ந்து சொதப்பி வருவது RR ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. LSG அணிக்கு எதிரான கடந்த போட்டியில் 11 ரன்கள் அடித்த பட்லர், DC-க்கு எதிரான இன்றைய போட்டியிலும் 11 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். இதுதவிர, கடந்த சீசனில் கடைசி 3 போட்டிகளிலும் அவர் டக்கவுட்டானார். இதனால், IPL-ல் கடந்த 5 போட்டிகளில் அவர் மொத்தம் அவர் 22 ரன்கள் மட்டுமே எடுத்தது ரசிகர்களை கவலையடையச் செய்துள்ளது.
உள்நாட்டு தயாரிப்பான தேஜாஸின் L.A.5033 ரக முதல் விமானம் வெற்றிகரமாக விண்ணில் பறந்தது. தேஜாஸ் M.K.1A என்ற பெயரில் நவீன அம்சங்களுடன் கூடிய இலகுரக விமானத்தை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த நிலையில், L.A.5033 ரக முதல் விமானம் வானில் சுமார் 18 நிமிடங்கள் வட்டமடித்தப் பின் தரையிறக்கப்பட்டது. இந்த சோதனை, போர் விமான உற்பத்தி செயல்முறையில் முக்கிய மைல்கல்லாக அமைந்துள்ளது.
பிரேசிலில் 249 குழந்தைகளை பெற்ற ‘பாடா சேகா’ பற்றி உங்களுக்கு தெரியுமா? 1828ஆம் ஆண்டு பிறந்த இவர், 7 அடி உயரமும், திடமான உடலும் கொண்டவர். அடிமையாக இருந்த இவரை, மற்ற அடிமைப் பெண்களுடன் சேர்ந்து பிள்ளைகள் பெற்றுக் கொடுக்க முதலாளி பயன்படுத்தியிருக்கிறார். இதன்மூலம் பாடா சேகா 249 பிள்ளைகளை பெற்றிருக்கிறார். 1959ஆம் ஆண்டு தன்னுடைய 130ஆவது வயதில் இவர் காலமானார்.
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான கெளதம் அதானி, முகேஷ் அம்பானி தொழிலில் முதல்முறையாக கைகோர்த்துள்ளனர். அதானியின் துணை நிறுவனமான Mahan Energen Ltdக்கு சொந்தமான ரூ.10 முகமதிப்புள்ள 5 கோடி (26%) பங்குகளை ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் வாங்கியுள்ளது. மேலும், ம.பி.,யில் உள்ள அதானி நிறுவனத்தின் 500 மெகாவாட் மின் உற்பத்தி மையத்தை பயன்படுத்த, இரு நிறுவனங்களும் ஒப்பந்தம் செய்துள்ளதாக செபியிடம் தெரிவித்துள்ளன.
Sorry, no posts matched your criteria.