India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகத்தில் இரவு 7 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, திருவள்ளூர், தென்காசி, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

2024-25 நிதியாண்டின் நிகர நேரடி வரி வருவாய் 19.54% அதிகரித்து, ₹5,74,357 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ₹4,80,458 கோடியாக இருந்தது. அதே நேரம், மொத்த நேரடி வரி வசூல் 23.24% அதிகரித்து, ₹5,23,563 கோடியிலிருந்து ₹6,45,259 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கார்பரேட் வரி வசூல் ₹2,65,336 கோடியாகவும், தனிநபர் வரி வசூல் ₹3,61,862 கோடியாக உள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடாத சூழலில், அக்கட்சியினரின் வாக்குகள் யாருக்கு? என்ற கேள்வி எழுந்தது. அதிமுகவினர் தேர்தலை புறக்கணிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டப்பேரவை தேர்தலை போன்றே 82% வாக்குகள் பதிவானதால், அதிமுகவினர் வாக்களித்திருப்பது தெளிவாகிறது. அதே போல, அதிமுகவினர் பெரும்பாலானவர்கள் திமுகவிற்கு வாக்களித்திருப்பதையும் வாக்கு விகிதம் காட்டுகிறது.

அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு வழங்கும் திட்டம், காமராஜர் பிறந்தநாளன்று (ஜூலை 15) தொடங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, காலை உணவுத் திட்டம் கடந்த 2022ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன்மூலம் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் சூழலில், இந்தத் திட்டம் தற்போது அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யப்படுகிறது.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் மகள் குறித்து X பக்கத்தில் போலியான செய்தியை பதிவிட்டதாக பிரபல யூடியூபர் துருவ் ரதி மீது மகாராஷ்டிரா சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஓம் பிர்லாவின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் கலந்து கொள்ளாமலேயே தேர்ச்சி பெற்றதாக, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அந்த போலி கணக்கு தன்னுடையதல்ல என ரதி மறுத்துள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பிரபல ஹாலிவுட் காமெடி நடிகர் எடி மர்ஃபி, நடிகை பெய்ஜ் பட்ஜரை 2ஆவது திருமணம் செய்துள்ளார். இருவரும் திருமணம் செய்யாமல் வாழ்ந்தநிலையில், 2016இல் மகளும், 2018இல் மகனும் பிறந்தனர். இந்நிலையில், கரிபீயன் தீவுகளில் 9ஆம் தேதி 2 பேரும் திருமணம் செய்தனர். பெய்ஜ்க்கு முன்பு, நடிகை நிக்கோல் மிஷெலை மர்ஃபி திருமணம் செய்திருந்தார். அவர்கள் இருவரும் 5 குழந்தைகள் இருந்த நிலையில் 2006இல் பிரிந்தனர்.

பஞ்சாப் மாநிலத்தின் மேற்கு ஜலந்தர் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர் மொஹிந்தர் பகத் 55,246 வாக்குகள் பெற்று, பாஜக வேட்பாளரை விட 37,325 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளார். பாஜக இரண்டாம் இடம் பிடித்த நிலையில், காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும், அம்மாநிலத்தின் முன்னணி கட்சியான அகாலிதளம் படுதோல்வியை சந்தித்துள்ளது.

ஜிம்பாப்வேக்கு எதிரான 4ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்திருக்கிறார் இந்திய கேப்டன் ஷுப்மன் கில். 5 போட்டிகளை கொண்ட தொடரில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் இந்திய முன்னிலையில் உள்ளது. இந்திய அணியில் ஆவேஷ் கானுக்கு பதிலாக துஷார் தேஷ்பாண்டே தன்னுடைய முதல் சர்வதேச போட்டியில் களம் இறங்குகிறார்.

தமிழ் திரையுலகில் வெற்றி பெற்ற படங்களின் 2ஆம் பாகத்தை உருவாக்குவது வழக்கமாகி வருகிறது. அந்த வகையில், வெளியான பெரும்பாலான படங்கள் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. குறிப்பாக, சாமி, சந்திரமுகி, சண்டக்கோழி, சென்னை 600 028 ஆகிய படங்களின் 2ஆம் பாகம் தோல்வி படங்களாக அமைந்தன. அதே நேரம், முனி, அரண்மனை, எந்திரன் ஆகிய படங்கள் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்., அபார வெற்றிபெற்றுள்ளது. இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால், அந்த நிலையை மாற்றி, பாஜகவை வீழ்த்தி காங்., வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வசம் இருந்த 3 தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது.
Sorry, no posts matched your criteria.