India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஆந்திராவில் 8 வயது சிறுமியை, 6-7ஆம் படிக்கும் மாணவர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் ஆழமான அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக அம்மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் தெரிவித்துள்ளார். இளவயதினர் பல்வேறு காரணங்களால் கெட்டுப்போய்விட்டதாகவும், நமது கலாசாரத்தை அவர்களுக்கு கற்றுக் கொடுத்து உணர்த்தவும் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்மிருதி இரானியை அவமானப்படுத்தும் விதமான கருத்துகளை ஏற்க முடியாது என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். பிறரை அவமானப்படுத்துவது பலவீனத்தின் அடையாளம் என்று தெரிவித்துள்ள அவர், ஸ்மிருதி இரானி குறித்தோ வேறு தலைவர்கள் குறித்தோ, இழிவான முறையில் யாரும் விமர்சிக்க கூடாது எனவும் வலியுறுத்தியுள்ளார். அமேதியில் ஸ்மிருதி இரானி தோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸார் அவரை விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இந்த நெருக்கடி காலத்தில் எந்த தவறும் இன்றி, லட்சக்கணக்கான மக்கள் சிறைக்கு சென்றதாகவும், இதை நினைவுபடுத்தும் விதமாக, ஆண்டுதோறும் இத்தினம் கடைபிடிக்கப்படும் எனவும் அமித்ஷா அறிவித்துள்ளார்.

பாக்.,கில் 2025இல் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி பங்கேற்காவிட்டால், அதற்கு பதிலாக எந்த அணி பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2023 உலகக் கோப்பை புள்ளிகள் அடிப்படையில், முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால், 9ஆவது இடத்தில் உள்ள இலங்கை, போட்டியில் விளையாட தகுதி பெறும்.

68வது Filmfare சினிமா விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 2022ஆம் ஆண்டுக்கான சிறந்த நடிகராக கமல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தனுஷ் (திருச்சிற்றம்பலம்), கமல் (விக்ரம்), கார்த்தி (PS-1), விக்ரம் (PS-1), பார்த்திபன் (இரவில் நிழல்), மாதவன் (ராக்கெட்ரி), சிம்பு (வெந்து தணிந்தது காடு) ஆகியோர் நாமினேஷனில் இருந்த நிலையில், கமல் சிறந்த நடிகராக அறிவிக்கப்பட்டுள்ளார். உங்கள் சாய்ஸ் யார்?

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக் கோரிய மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் ஜூலை 16ஆம் தேதியே உத்தரவு பிறப்பிக்கப்படும் எனவும் நீதிபதி அல்லி அறிவித்துள்ளார். இது, செந்தில் பாலாஜி தரப்புக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

“டிக் டாக்” செயலியில், பிரபல திரைப்பட காட்சியில் உள்ள வசனங்களை தேர்வு செய்து, அதற்கேற்ப பேசுவது போல வாயை மட்டும் அசைத்து வீடியோ உருவாக்கி பதிவிட முடியும். அதேபோல் You tubeஇன் Shorts பகுதியில் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. இதற்கு, You tubeஇன் Shorts பகுதிக்கு சென்று, பிறகு Add voice என்பதை அழுத்தி, அதில் பதிவேற்றமாகியுள்ள குரல்களில் ஒன்றை தேர்வு செய்து பதிவிட முடியும்.

சசிகலா, ஓபிஎஸ், டிடிவி, வைத்தியலிங்கத்திற்கு அதிமுகவில் எந்த காலத்திலும் இடமில்லை என்று இபிஎஸ் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் தோல்வியை அடுத்து, அதிமுகவில் சசிகலா, ஓபிஎஸ் உள்ளிட்டோரை இணைக்க வேண்டும் என கட்சி நிர்வாகிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், இன்று மூத்த நிர்வாகிகளை சந்தித்தபோது, கட்சியில் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் நல்ல கதைக்களத்தை கருவாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். கமலுடன் இணைந்து இந்தியன் 2 படத்தை கண்டுகளித்த பின் பேசிய சீமான், அவரவர் வீட்டை சுத்தம் செய்யுங்கள், நாடு சுத்தமாகும் என்பதே படத்தின் கோட்பாடு என்றார். உன் வீட்டை நீயே சுத்தம் செய், அனைத்திற்கும் இந்தியன் தாத்தா வரமாட்டார் என்பதே என்னுடைய கோட்பாடு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை மத்திய அரசு தடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் 26 பேர் கைதாகியுள்ளதாக கூறிய அவர், 13 விசைப் படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், மீனவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
Sorry, no posts matched your criteria.