India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

குமரியை சேர்ந்த வழக்கறிஞர் ராஜா முருகன், பாலியல் தொழில் நடத்த அனுமதி கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் விநோதமான மனுவை தாக்கல் செய்துள்ளார். இதை விசாரித்த நீதிபதி, வழக்கறிஞர் ஒருவர் பாலியல் தொழில் செய்ய நீதிமன்றத்தை அணுகியது வேதனையளிக்கிறது. அவரின் கல்வி தகுதி பற்றி ஆராய வேண்டும். இதுபோன்ற மனுக்களை ஒருபோதும் ஏற்க முடியாது எனக் கூறி, அந்த மனுவை தள்ளுபடி செய்து ₹10,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என்ற அமித் ஷாவின் அறிவிப்புக்கு மோடி வரவேற்பு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்டவிழ்த்துவிட்ட நெருக்கடி நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் நாளாக இது இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு போட்டியாக, ஜூன் 4ஆம் தேதி மோடி தோல்வி தினமாக கடைபிடிக்கப்படும் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உலக சாம்பியன்ஸ் லீக் அரையிறுதிப் போட்டியில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் சாம்பியன்ஸ், வெஸ்ட் இண்டீஸ் சாம்பியன்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த பாக்., 20 ஓவர்கள் முடிவில் 198/8 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய கம்ரான் அக்மல் 46, யூனிஸ் கான் 65, அமீர் யாமின் 40, தன்விர் 33 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து வெ.இ., அணிக்கு 199 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

* 14 மீட்டர் உயரம் மிகாமல் உள்ள 8 குடியிருப்பு அலகுகள் கொண்ட குடியிருப்பு கட்டடங்கள், * 750 சதுர மீட்டர் பரப்பளவிற்குட்பட்ட தனி வீடு, * 14 மீட்டர் உயரம் மிகாமல் 300 சதுர மீட்டர் கட்டட பரப்பளவிற்குட்பட்ட வணிக கட்டடங்கள், *அனைத்து தொழிற்சாலை கட்டடங்களுக்கு ‘கட்டட நிறைவு சான்றிதழ்’ தேவையில்லை என மின்வாரியம் அறிவித்துள்ளது. எனவே, மின் இணைப்பை பெற இந்த <

இரவு 10 மணி வரை 35 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, கடலூர், நீலகிரி, கோவை, மதுரை, குமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும், காஞ்சி, திருவள்ளூர், வேலூர், தி.மலை, தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும் என கூறியுள்ளது.

ஜூன் 4ஆம் தேதி மோடி தோல்வி தினமாக கடைபிடிக்கப்படும் என்று காங்கிரஸ் அதிரடியாக அறிவித்துள்ளது. இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது 1975ஆம் ஆண்டு ஜூன் 25ஆம் தேதி நாட்டில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் வகையில், ஜூன் 25ஆம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக கடைபிடிக்கப்படும் என அமித்ஷா அறிவித்திருந்த நிலையில், அதற்கு பதிலடியாக காங்., இவ்வாறு அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தனது அறிமுக டெஸ்ட் போட்டியில், இங்கி., வீரர் கஸ் அட்கின்சன் ஆட்டநாயகனாக தேர்வாகியுள்ளார். முதல் இன்னிங்சில் 7 விக்கெட் எடுத்த அவர், 2ஆவது இன்னிங்சில் 5 விக்கெட்டை வீழ்த்தினார். இதன் மூலம் அறிமுக போட்டியில், அதிக விக்கெட் எடுத்த இங்கி., வீரர்கள் பட்டியலில் 3ஆவது இடத்திற்கு (12/106) முன்னேறியுள்ளார். முதல் இடத்தில் ஜான் ஃபெரிஸ் 13/91 உள்ளார்.

தமிழக அரசின் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகமான TANGEDCOவை இரண்டாக பிரிப்பதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி கழகம் மற்றும் தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என இரண்டாகப் பிரிக்கப்படுகிறது. விரைவில் தனித்தனியாக இவ்விரு நிறுவனங்களும் செயல்படும் எனத் தெரிகிறது.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இங்கிலாந்தின் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இன்றைய டெஸ்ட் போட்டியுடன் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்றார். 188 டெஸ்டில் விளையாடிய அவர், 704 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 5 விக்கெட் 32 முறையும், 10 விக்கெட் 3 முறையும் எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 40,000 பந்துகளை வீசி, இன்றைய போட்டியில் புதிய சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.