India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடு முழுவதும் வருடத்திற்கு ஒருமுறை புவி நேரம் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வரும் 23ஆம் தேதி இரவு 8.30 முதல் 9.30 மணி வரை மக்கள் அனைவரும் விளக்குகளை அணைத்து வைக்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பருவநிலை மாற்றம் மற்றும் பல்லுயிர் இழப்பை குறைக்கும் இந்த முயற்சியில், மக்கள் அனைவரும் இதில் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இளையராஜா ஒரு நினைவுச் சின்னம். அவரது மூச்சு பேச்சு எல்லாமே இசைதான் என இயக்குநர் பாரதிராஜா புகழாரம் சூட்டியுள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், இளையராஜாவை நான் அதிசயமாகவே இன்று வரை பார்த்து வருகிறேன். எத்தனை நூற்றாண்டுகள் ஆனாலும், அவரை உலகம் மறக்காது. யார் ராஜாவாக இருந்தாலும் தோற்று விடுவார்கள். ஆனால், இவன் ஜெயிக்க மட்டுமே பிறந்தவன். இந்திய அரசு ராஜாவுக்கு பெரிய பாராட்டு விழா நடத்த வேண்டும்” என்றார்.
அதிமுகவுடன் வருகிற சட்டப்பேரவை தேர்தலிலும் கூட்டணி தொடரும் என பிரேமலதா தெரிவித்துள்ளார். அதிமுகவுடன் தொகுதி பங்கீட்டுக்கு பிறகு பேசிய அவர், “அதிமுக-தேமுதிக கூட்டணி மிகவும் ராசியான அணி. 2011க்கு பிறகு மீண்டும் அது பூத்துள்ளது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணி என்பது தேர்தலுக்கு பிறகு அனைவரும் அறிவார்கள். தேமுதிக போட்டியிடும் 5 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள்” என்றார்.
2026 தேர்தலில் நான் யார் என காட்டுவேன் என சசிகலா சவால் விடுத்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், ”மூன்று அணிகளாக தற்போது அதிமுக உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்குள் ஒரே அணியாக மாறும். 2026இல் எங்களுக்கும் திமுகவுக்கும் இடையே தான் நேரடி போட்டி இருக்கும். அதில், அதிமுக அபார வெற்றிபெற்று மீண்டும் அரியணை ஏறும். இந்த மக்கள் விரோத திமுக அரசு முற்றிலும் அகற்றப்பட்டு மக்கள் நிம்மதி அடைவார்கள்” என்றார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தொலைதூர, இணையவழி தேர்வுக்கான முடிவுகள் வெளியானது. தொலைதூர மற்றும் இணையவழியில் ஏராளமான மாணவர்கள் அண்ணாமலை பல்கலை.,யில் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், கடந்த ஆண்டு டிசம்பரில் எழுதிய தேர்வுக்கான முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இந்த முடிவுகளை பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
மதுரை சித்திரை திருவிழாவின் போது, சாமி சிலை மீது பம்புகள் மூலம் தண்ணீர் பீய்ச்சி அடிக்க தடை கோரி உயர்நீதிமன்ற கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிக பிரஷர் கொண்ட பம்புகள் மூலம் ரசாயனப் பொடிகள் கலந்து தண்ணீர் பீய்ச்சுவதால் சிலை மற்றும் ஆபரணங்கள் பாதிக்கப்படுவதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுதொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய மதுரை ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
செய்தி பிரசுர உரிமையாளர்களுடனான ஒப்பந்தத்தை மீறியதற்காக கூகுளுக்கு பிரான்ஸ் அரசு ரூ.2,254 கோடி அபராதம் விதித்துள்ளது. முன்னணி இணையதளமான கூகுள், செய்திகளை தேடிப்பிடித்து தருகிறது. இதன் மூலம் கிடைக்கும் மறைமுக வருவாயை பகிர்வது தொடர்பாக பிரான்சை சேர்ந்த செய்தி பிரசுர உரிமையாளர்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதனை மீறியதற்காக பிரான்ஸ் அரசின் போட்டி ஆணையம் அபராதம் விதித்துள்ளது.
தேர்தல் நேரமாக இருப்பதால், மீடியா முன்னாடி மூச்சு விடக்கூட பயமாக இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கலகலப்பாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. காவேரி மருத்துவமனையின் வடபழனி கிளையை திறந்து வைத்து பேசிய அவர், “கடந்த 25 வருஷமாக நான் எந்தவொரு கல்லூரி, கட்டட திறப்பு விழாக்களிலும் பங்கேற்பதில்லை. நான் விழாக்களில் கலந்துகொண்டால், அதில் எனக்கும் பங்கு இருப்பதாக வதந்தி கிளப்பி விடுவார்கள்” என்றார்.
பாஜக-ஓபிஎஸ் தொகுதி பங்கீட்டில் இழுபறி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொகுதிகளை இறுதி செய்ய ஓபிஎஸ் கமலாலயம் வந்த நிலையில், பாஜக தலைவர்களுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் தொகுதி உடன்பாடு ஏற்படவில்லை. இதை தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட ஓபிஎஸ், பாஜகவுடன் மீண்டும் பேசுவோம் என கூறிச் சென்றார். ஓபிஎஸ் 2 தொகுதிகளை கேட்டதாகவும், ஆனால் பாஜக ஒரு தொகுதி மட்டுமே தர முன்வந்ததாகவும் கூறப்படுகிறது.
சென்னை- பெங்களூரு இடையேயான முதல் ஐபிஎல் போட்டி, நாளை மறுநாள் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதுவரை சேப்பாக்கத்தில் நடந்த ஐபிஎல் போட்டிகளில், CSK-7, RCB-1 போட்டிகளில் வென்றுள்ளன. 2008இல் இருந்து ஒரு போட்டியில் கூட CSK-வை சேப்பாக்கத்தில் வீழ்த்தாத RCB அணி, 16 வருட வரலாற்றை மாற்றுமா? அல்லது CSK வெற்றியை தொடருமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். உங்கள் கருத்து என்னவென்று கமெண்டில் சொல்லுங்க?
Sorry, no posts matched your criteria.