India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கேரளாவில் இருந்து இந்திய அணியில் இடம்பிடிப்பது சவாலான காரியம் என சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், இந்தியா கிரிக்கெட்டில் முதல் அணியாக உள்ளது. பல திறமையான வீரர்கள் உள்ளனர். ஆனால், ஏதாவது ஸ்பெஷலான விஷயங்களை செய்தால் மட்டுமே அணியில் இடம் கிடைக்கிறது” என்றார். 2015ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான சஞ்சு, இதுவரை 16 ஒருநாள், 25 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார்.
கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்வபுரம் பகுதியில் ரைஸ் மில் நடத்தி வந்த ராமச்சந்திரன், மனைவி விசித்ரா மற்றும் மகள்கள் ஜெயந்தி, ஸ்ரீநிதி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்திய நிலையில், எதற்காக அவர்கள் தற்கொலை செய்தார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மார்ச் 31ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளும் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், அரசுத் துறைகளின் கணக்குகளை பராமரிக்க வரும் 31ஆம் தேதி வங்கிகளின் விடுமுறை ரத்து செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது. 2023-24 நிதியாண்டுக்கான அரசின் நிதி விவரங்களை முடிப்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தி நடிகர் சயீப் அலிகான், 7 ஆண்டுகளுக்கு தொடர்ந்து தோல்வி படங்களை கொடுத்துள்ளார். பட்டோடி ராஜ குடும்பத்தை சேர்ந்த அவர், முன்னாள் கிரிக்கெட் வீரர் மன்சூர் அலிகான் பட்டோடியின் மகன் ஆவார். 2013ல் ரேஸ் 2 வெற்றி படத்தை கொடுத்த அவர், பிறகு 2020 வரை 10 தோல்வி படங்களையே அளித்திருக்கிறார். 2020ல் வெளியான தான்ஹாஜி, சூப்பர் ஹிட் அடித்தது. சேக்ரட் கேம்ஸ், தான்டவ் ஆகிய சீரிஸ் வரவேற்பை பெற்று தந்தது.
பாஜக கூட்டணியில் ஐஜேகேவுக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மக்களவைத் தேர்தலை முன்னிட்டு திமுக, அதிமுகவுக்கு மாற்றாக பாஜக தலைமையில் தமிழகத்தில் அக்கட்சி புதிய அணியை கட்டமைத்து வருகிறது. கூட்டணியில் உள்ள பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு ஏற்கெனவே தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில், பாரிவேந்தரின் இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒரு மக்களவை தொகுதியை பாஜக ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ED விசாரணையின்றி ஒருவரை கைது செய்து நீண்ட நாட்கள் சிறையில் வைத்திருக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ஜார்கண்டை சேர்ந்த ஒருவர் 18 மாதங்களாக விசாரணையின்றி தன்னை அமலாக்கத்துறை கைது செய்து வைத்திருப்பதாக கூறி தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த கருத்தை தெரிவித்துள்ளது. 90 நாட்களுக்குள் விசாரணையை நிறைவு செய்யாவிட்டால் குற்றம் சாட்டப்பட்டவர் ஜாமின் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளது.
ஏற்காடு மலைப் பாதையில் சூட்கேஸிலிருந்து பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 40 அடி பாலம் அருகில் துர்நாற்றம் வீசுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. விரைந்து சென்ற அவர்கள், அங்கு கிடந்த சூட்கேஸை கைப்பற்றி பார்த்தபோது அதில் பெண் சடலம் ஒன்று இருந்துள்ளது. இதையடுத்து சடலத்தை கைப்பற்றிய போலீசார் கொலை செய்தது யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு திருவள்ளூர் தொகுதி ஒதுக்கப்பட்டதால் புரட்சி பாரதம் கட்சி அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் திருவள்ளூர் தொகுதியை அக்கட்சி எதிர்பார்த்த நிலையில், அந்த தொகுதி தேமுதிகவுக்கு ஒதுக்கப்பட்டது. இதனால், அக்கட்சியின் அவசரக் கூட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிமுகவுக்கான ஆதரவை திரும்ப பெறவும் வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்ஸ்டாகிராமில் அதிக Followers-களை கொண்ட ஐபிஎல் அணிகள்:
▶சென்னை – 14.2 மில்லியன்,
▶பெங்களூரு – 13.1 மில்லியன்,
▶மும்பை – 12.7 மில்லியன்,
▶கொல்கத்தா – 4.6 மில்லியன்,
▶டெல்லி- 3.7 மில்லியன்,
▶குஜராத் – 3.6 மில்லியன்,
▶ராஜஸ்தான் – 3.6 மில்லியன்,
▶ஐதராபாத் – 3.4 மில்லியன்,
▶பஞ்சாப் – 3.1 மில்லியன்,
▶லக்னோ – 3 மில்லியன்
நாளை மிக முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியிடப்படும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மக்களவைத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ள தேமுதிக, விருதுநகர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்நிலையில், கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் நாளை மிக முக்கியமான அறிவிப்பை வெளியிட உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், தமிழக அரசியல் களத்தில் பரபரப்பு கூடியுள்ளது.
Sorry, no posts matched your criteria.