India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழ்நாடு, பிஹார், மேற்கு வங்கம் , மத்திய பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், ஹிமாச்சல் ஆகிய 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இந்த இடைத்தேர்தலின் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. 2024 மக்களவை தேர்தலுக்கு பின் நடைபெற்ற முதல் இடைத்தேர்தல் என்பதால் முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

விக்கிரவாண்டி சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன. இதில், திமுக அன்னியூர் சிவா, பாமக சி.அன்புமணி, நாதக அபிநயா உள்ளிட்ட 29 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மொத்தம் 276 வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெற்ற நிலையில், 82.48% வாக்குகள் பதிவாகின. 2 மேஜைகளில் தபால் வாக்குகளும், 14 மேஜைகளில் மின்னணு இயந்திர வாக்குகளும் எண்ணப்படுகின்றன.

சமையல் கேஸ் இணைப்பு வழங்கும் நிறுவன அலுவலக எண்களையும், கட்டணமில்லா பொது எண்ணையும் தொடர்பு கொண்டும் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம். இதற்கு பாரத் கேஸ், இண்டேன், எச்.பி. ஆகியவை தனித்தனி எண்களை பராமரிக்கின்றன. கீழ்காணும் எண்களே அந்த எண்கள் ஆகும். இவற்றில் தொடர்பு கொண்டு கேஸ் சிலிண்டர் முன்பதிவு செய்யலாம் * பாரத் கேஸ் – 9486056789 * இண்டேன் கேஸ் – 7718955555 *எச்.பி. கேஸ் – 90922 23456

கட்டண உயர்வை அமல்படுத்திய போதிலும், சில சலுகைகளையும் சந்ததாரர்களுக்கு வோடபோன் ஐடியா தொடர்ந்து அளிக்கிறது. மிக குறைந்த விலையில், ₹95 திட்டத்தில் 4 ஜிபி டேட்டா, sony Liv OTT இலவச சேவையை வழங்குகிறது. டேட்டாவுக்கான வேலிடிட்டி 14 நாள்களும், sony liv OTT வேலிடிட்டி 28 நாட்களும் அளிக்கப்பட்டுள்ளன. இலவசமாக OTT பார்க்க விரும்புவோருக்கு இதுசிறந்த திட்டம் எனக் கூறப்படுகிறது.

இங்கிலாந்து வீரர் ஆண்டர்சன் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற நிலையில், அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட சச்சின் டெண்டுல்கர் வாழ்த்துகள் கூறியுள்ளார். அவருடைய பந்துவீச்சின் வேகமும், இலக்கை அடையும் துல்லியமும் பல தலைமுறைகளை உத்வேகப்படுத்தியதாக சச்சின் கூறியுள்ளார். மேலும், 22 ஆண்டுகள் அசாத்திய பந்துவீச்சாளருக்கு சிறிய பிரியாவிடை என வாழ்த்தியுள்ளார்.

சென்னையில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 16 விமானங்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. அத்துடன், சூறைக்காற்று வீசியதால் தரையிறங்க வேண்டிய 4 விமானங்களும் பெங்களூருவுக்கு திருப்பி விடப்பட்டன. 15க்கும் மேற்பட்ட விமானங்கள் வானில் வட்டமடித்தன. இதனால், ஆயிரக்கணக்கான பயணிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகத்தில் காலை 9.30 வரை 12 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், தேனி, கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று கூறியுள்ளது. ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்தது.

கொரோனா பரவல் முடிவுக்கு வந்து விட்டதாக 2022இல் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டது. மக்களும் முன்புபோல் இயல்பாக வாழ்கின்றனர். இந்நிலையில் ஹிந்தி நடிகர் அக்ஷய் குமாருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், தொற்று மீண்டும் பரவுகிறதா? என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளது. ஒருவேளை தொற்று பரவினால், மக்களுக்கு அரசு அறிவுறுத்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

தெலுங்கானாவில் மேலும் ஒரு BRS எம்எல்ஏ, காங்கிரசில் இணைந்துள்ளார். ஏற்கனவே 7 BRS MLA க்கள், காங்கிரசில் இணைந்திருந்தனர். இந்நிலையில், ராஜேந்திர நகர் தொகுதி MLA பிரகாஷ் கௌட், காங்கிரசில் முதல்வர் ரேவந்த் ரெட்டி முன்னிலையில் சேர்ந்தார். அண்மையில் ஆந்திர முதல்வர் சந்திர பாபு நாயுடுவை கெளட் சந்தித்தார். இதையடுத்து TDP கட்சியில் அவர் சேரலாம் என கூறப்பட்டது. ஆனால் அதை அவர் மறுத்தார்.

பொதுவாக அக்டோபருக்கு பிறகே தமிழகத்தில் பருவமழை பெய்வது வழக்கம். ஆனால் 2 ஆண்டுகளாக இது மாறியுள்ளது. கனமழை, வெள்ளம் என நவம்பர் முதல் ஜனவரி வரை மழை பாதிப்பு நீடித்தது. இதையடுத்து பிப்ரவரி, மார்ச், ஏப்ரலில் வெயில் சுட்டெரித்த நிலையில், மே இறுதி முதல் மழை பெய்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதத்திலும், இம்மாதத்திலும் கனமழை பெய்கிறது. இதனால் பருவநிலை மாறுகிறதா? என்ற எண்ணம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.