India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐ.சி.சி., வெளியிட்டுள்ள ஆடவர் கிரிக்கெட் டி20 பேட்டிங் தரவரிசையில் இந்தியாவின் சூர்யகுமார் யாதவ் 861புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். 2ஆவது இடத்தில் பில் சால்ட், 3ஆவது இடத்தில் முகமது ரிஸ்வான் ஆகியோர் உள்ளனர். பந்துவீச்சாளர் தரவரிசையில், அடில் ரஷீத் முதலிடத்தில் உள்ளார். இந்தியாவின் அக்ஷர் படேல் 4ஆவது இடத்திலும், ரவி பிஷ்னோய், மகேஷ் தீக்ஷனா 5ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
திருச்சியில் தமிழக பாஜக பொதுச்செயலாளர் ராமஸ்ரீனிவாசனை வேட்பாளராகக் களமிறங்கினால் பாஜக டெபாசிட் இழக்குமென பாஜக பிரமுகர் திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது X பக்கத்தில், திருச்சிக்கு அறிமுகமில்லாத வெளி மாவட்டத்தைச் சேர்ந்த ராமஸ்ரீனிவாசனை இறக்கினால், வெற்றியை நினைத்துக் கூட பார்க்க முடியாது. மாறாக மண்ணின் மைந்தரை இறக்கினால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார்.
◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: பிறனில் விழையாமை
◾குறள்: 148
பிறன்மனை நோக்காத பேராண்மை சான்றோர்க்கு
அறனொன்றோ ஆன்ற வொழுக்கு.
◾விளக்கம்: அடுத்தவரின் மனைவியை மனத்துள் எண்ணாத பேராண்மை அறம் மட்டும் அன்று; சான்றோர்க்கு நிறைவான ஒழுக்கமும் ஆகும்.
260 பேரின் உயிரை பலி கொண்ட மும்பை தொடர் குண்டுவெடிப்புக்கு காரணமான தாவூத் இப்ராஹிமை பாக். முன்னாள் கிரிக்கெட் வீரர் மியான்டட் புகழ்ந்து பேசியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் அளித்துள்ள பேட்டியில், “முஸ்லிம்களுக்காக தாவூத் செய்துள்ள பணிகள் ஏராளம். இந்தப் பணிகள் நீண்டகாலம் நினைவு கூரப்படும். அவரின் மகளை எனது மகன் திருமணம் செய்ததை எண்ணி பெருமை கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
கிரிஷ் ஏ.டி இயக்கத்தில் நஸ்லேன், மமிதா பைஜூ நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‘பிரேமலு’. விமர்சன ரீதியாகவும், பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலைக் குவித்த இப்படம், தமிழிலும் அதே பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகியுள்ளது. இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் தனது இன்ஸ்டா பக்கத்தில், ‘நல்ல பொழுதுபோக்கு அம்சங்கள் நிறைந்த காதல் படத்தை அளித்த பிரேமலு படக்குழுவினருக்கு வாழ்த்துகள்’ எனப் பதிவிட்டுள்ளார்.
வங்கிகளுக்கு வழங்கும் வட்டி விகிதத்தில் எந்த மாற்றமின்றி தொடர்வதாக அமெரிக்க மத்திய வங்கி அறிவித்துள்ளது. இரண்டு நாட்கள் நடைபெற்ற அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை கூட்டத்திற்கு பின் பேசிய அதன் தலைவர் ஜெரோம் பாவெல், ‘மார்ச் மாதத்திற்கான வட்டி விகிதம் 5.25% -5.5%ஆக மாற்றமின்றி தொடரும்’ என்றார். 5ஆவது முறையாக வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யாததால், அமெரிக்க பங்குச்சந்தைகள் உயர்வு கண்டன.
இன்று (மார்ச் 21) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, லக்ஷயா சென், கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2ஆவது சுற்றுக்கு முன்னேறினர். பாசெல் நகரில் நடைபெற்ற முதல் சுற்றில் தாய்லாந்தின் சோய்கீவோங்கை எதிர்கொண்ட சிந்து, 21-12 21-13 , மலேசியாவின் லியோங் ஜுன் ஹாவை எதிர்கொண்ட லக்ஷயா சென், 21-19 15-21 21-11, சீன தைபேயின் வாங் சூவை எதிர்கொண்ட ஸ்ரீகாந்த், 21-17 21-18 ஆகிய செட்களில் வெற்றி பெற்றனர்.
இயக்குநரையும் தனக்கு சமமாக நடத்தும் பெருந்தன்மை உடையவர் இளையராஜா என இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார். இளையராஜாவின் பயோபிக் அறிமுக நிகழ்ச்சியில் பேசிய அவர், “நம் வாழ்வில் எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டாலும், மாறாத ஒரு உணர்வை எப்போதும் இளையராஜாவின் இசை கொடுக்கும். அவருடன் பழகுவதும், வேலை செய்வதும் எளிமையாக இருக்கும். மனதில் பட்டதை மிக வெளிப்படையாக பேசுவார்” என்றார்.
திருச்சியில் அதிமுக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் இபிஎஸ் தலைமையில் 24 ஆம் தேதி நடைபெற உள்ளதாக சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், “பல்வேறு மாநிலங்களில் ஆட்சியை கலைத்து கட்சியை உடைத்தவர்களால் அதிமுகவை ஒன்றும் செய்யமுடியவில்லை அதற்கு தொண்டர்கள் காரணம். இரட்டை இலை சின்னத்தில் பதவி வகித்த துரோகிகள் சிலர், இரட்டை இலை சின்னத்தை முடக்க பார்ப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
Sorry, no posts matched your criteria.