India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை சுட்டிக்காட்டி, சார் பதிவாளர்களுக்கு பத்திரப்பதிவு துறை ஐ.ஜி. தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தரவிட்டுள்ளார். காவல்துறை அதிகாரிகளின் உத்தரவுகளின் அடிப்படையில் நில ஆவணப்பதிவு குறித்து முடிவெடுக்க வேண்டாம். சிவில் நீதிமன்ற உத்தரவு பெற்று வருவது சம்பந்தப்பட்டோரின் பொறுப்பு என்றும், அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நான்காம் கட்ட வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 24,171 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். 8,825 வாக்குகளுடன் பாமக வேட்பாளர் சி.அன்புமணி இரண்டாவது இடத்திலும் 1,763 வாக்குகளுடன் நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா மூன்றாவது இடத்திலும் உள்ளனர். சுயேச்சைகள் அனைவரும் சொற்ப வாக்குகளையே பெற்றுள்ளனர்.

பிஹாரின் பல்வேறு மாவட்டங்களிலும் மின்னல் தாக்கிய சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. இதில் இன்று மட்டும் 25 பேர் பலியாகினர். 39 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த உயிரிழப்பையும் சேர்த்து ஜூலையில் பிஹாரில் மின்னல் தாக்கி பலியானோர் எண்ணிக்கை 50ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த 25 பேர் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் நிதிஷ்குமார், மக்களை வீடுகளுக்குள் இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளார்.

நாடு முழுவதும் நடைபெற்ற 13 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், தமிழகத்தின் விக்கிரவாண்டி உள்ளிட்ட 10 தொகுதிகளில் I.N.D.I.A கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளனர். 2 தொகுதிகளில் மட்டுமே தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்கள் முன்னிலையில் உள்ளன. பஞ்சாபில் காங்கிரஸ், ஆம் ஆத்மி நேரடியாக மோதிய தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளது.

தனிப்பட்ட வீரரைக் காட்டிலும் தனக்கு அணியின் நலனே முக்கியம் என கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார். நமது வீரர்கள் டெஸ்ட், ஒருநாள், டி20 ஆகிய 3 ஃபார்மேட்களுக்கும் முக்கியத்துவம் தரவேண்டும் என்றும், குறிப்பிட்ட வீரரை ஒரு ஃபார்மேட்டில் விளையாட செய்து, மற்ற போட்டிகளில் அவரை உட்கார வைப்பதில் தனக்கு நம்பிக்கை இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு அணிதான் எல்லாமே எனவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் மதியம் 1 மணி வரை மழை பெய்யக்கூடிய மாவட்டங்களின் பட்டியலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதனால், சில இடங்களில் நீர் தேங்கும் அபாயம் இருப்பதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. முதல்சுற்றில் இருந்தே திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். 3ஆவது சுற்று எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக வேட்பாளர் – 18,057, பாமக வேட்பாளர் – 7,323, நாதக வேட்பாளர் – 1,120 வாக்குகள் பெற்றுள்ளனர்.

மகாராஷ்டிர சட்டமேலவைத் தேர்தலில் பாஜக, சிவசேனா கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 11 இடங்களுக்கு நடைபெற்ற தேர்தலில் மொத்தம் 12 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் பாஜக கூட்டணி சார்பில் 9 பேர் போட்டியிட்டனர். அவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். பாஜக போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான எதிர்க்கட்சி கூட்டணி 3 இடங்களில் போட்டியிட்டு 2 இடங்களில் வென்றுள்ளது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், முதல்சுற்றில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்த நிலையில், இரண்டாம் சுற்றிலும் அவர் 6,000 வாக்குகள் முன்னிலை வகித்து வருகிறார். அதன்படி, திமுக வேட்பாளர் – 12,002, பாமக வேட்பாளர் – 5,904, நாதக வேட்பாளர் – 849 வாக்குகள் பெற்றுள்ளனர்.

வசனமே இல்லாத சூப்பர் ஹிட் திகில் படங்கள், அது வெளியாகியுள்ள OTT குறித்து இந்த பதிவில் பார்ப்போம். * A quiet place. வேற்றுகிரகவாசிகள் குறித்த இப்படத்தை நெட்ஃபிளிக்ஸில் காணலாம்* Hush. யூடியூப் ஓடிடியில் பார்க்கலாம் *The revanant. பனிமலையில் சிக்கியவரை பின்தொடர்ந்து நகரும் இப்படத்தை அமேசான் ப்ரைமில் காண முடியும் * A ghost story. திகில் காட்சிகள் நிறைந்த இப்படத்தை அமேசான் ப்ரைமில் காணலாம்.
Sorry, no posts matched your criteria.