India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
டெல்லியில் உள்ள தமிழ்ச் சங்கத்திற்கு, ஆண்டுதோறும் ₹1 லட்சம் வழங்கப்படும் என பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார். தமிழர்களுக்கு இலக்கணமாக வாழ்ந்த விஜயகாந்துக்கு, முதல் பாராட்டு விழா டெல்லி தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. இது மிகவும் பெருமைக்குரிய விஷயம் எனக் குறிப்பிட்ட பிரேமலதா, இனி ஆண்டுதோறும் விஜயகாந்த் பிறந்தநாளன்று டெல்லி தமிழ்ச் சங்கத்திற்கு தேமுதிக சார்பில் ₹1 லட்சம் வழங்கப்படும் என்றார்.
உத்தராகண்டில் பத்ரிநாத் பகுதியில் அலக்நாதா நதிக்கரையோரம் உள்ள கோயிலும் சார் தாம் யாத்திரையின் ஒரு அங்கம். இக்கோயில் தெய்வமாக விஷ்ணு உள்ளார். 8ஆம் நூற்றாண்டில் இக்கோயில் ஆதிசங்கரரால் நிறுவப்பட்டதாக கூறப்படுகிறது. ருத்ரபிரயாக் மாவட்டத்தில் மந்தாகினி நதி அருகே உள்ள கேதார்நாத் கோயில், சிவபெருமானின் புண்ணியத் தலமாக கூறப்படுகிறது. இந்த 4 கோயில்களுக்கும் செல்லும் யாத்திரையே சார் தாம் எனப்படுகிறது.
கங்கோத்ரி கோயில், கடல் மட்டத்தில் இருந்து 3,200 மீட்டர் உயரத்தில் உத்தரகாசியில் கங்கை நதிக்கரையோரம் அமைந்துள்ளது. இக்கோயில் தெய்வமாக கங்கை மாதா உள்ளார். கங்கையில் புனித நீராடி இக்கோயிலில் வழிபட்டால் பாவம் நீங்கி புண்ணியம் கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகிறது. இதனால், இக்கோயிலுக்கு நாடு முழுவதும் இருந்து ஆண்டுதோறும் பக்தர்கள் யாத்திரை வருவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட பிரசாரம் ஓய்வடைந்தது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கெனவே 3 கட்டத் தேர்தல் முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் 4ஆவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ளது. ஆந்திரா, தெலங்கானா உள்பட 9 மாநிலங்கள், ஒரு யூனியன் பிரதேசம் என மொத்தம் 96 தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
யமுனோத்ரி கோயில், உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசியில் இருந்து 129 கி.மீ. தொலைவில் உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து 3,164 மீட்டர் உயரத்தில் இமயமலை அடிவாரத்தில் யமுனை நதிக்கரையோரம் இக்கோயில் உள்ளது. கோயில் தெய்வமாக யமுனா மாதா உள்ளார். இக்கோயிலுக்கு உத்தரகாசி, ரிஷிகேஷ், ஹரித்வார், டேராடூனில் இருந்து செல்ல முடியும். கோயிலுக்கு குறிப்பிட்ட தூரம் வாகன பயணமும், பிறகு மலையேற்றமும் செய்ய வேண்டும்.
நாடு முழுவதும் இந்துக்களின் புனித தலங்கள் ஏராளமாக உள்ளன. அதில் முக்கிய தலங்களாக, இமயமலை அடிவாரத்தில் உத்தராகண்டில் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 இடங்களில் உள்ள கோயில்கள் கூறப்படுகின்றன. கடும் பனிப்பொழிவால், குளிர் காலத்தில் மூடப்பட்டு கோடை காலத்தில் இக்கோயில்கள் திறக்கப்படும். அப்போது 4 கோயில்களுக்கும் பக்தர்கள் செல்லும் யாத்திரை, ‘சார் தாம்’ யாத்திரை எனப்படுகிறது.
GT அணியின் வீரர் சாய் சுதர்ஷன் அதிகம் பேசப்பட வேண்டுமென தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டன் கிரீம் ஸ்மித் தெரிவித்துள்ளார். ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நட்சத்திர வீரராக இருக்கும் சுதர்சன் மக்களின் ரேடாரின் கீழ் இருக்கிறார். ஐபிஎல் தொடர்களில், அதிவேகமாக 1000 ரன்களை அவர் கடந்துள்ளார். சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்க அவருக்கு அதிக வாய்ப்புகள் அளிக்க வேண்டும்” எனக் கூறினார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராக விஜய், பொதுச்செயலாளராக புஸ்ஸி ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளனர். 2026 சட்டப் பேரவைத் தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்த விஜய், அதற்காக உருவாக்கப்பட்ட கட்சியின் பெயரையும் அறிவித்தார். இதைத் தொடர்ந்து தற்போது நிர்வாகிகள் விவரம் வெளியிடப்பட்டுள்ளது. பொருளாளர் – வெங்கட்ராமன், தலைமை கழக செயலாளர் ராஜசேகர், இணை கொள்கை பரப்புச் செயலாளராக தகிரா நியமிக்கப்பட்டுள்ளனர்.
ரஷ்மிகாவைப் போல பாலிவுட்டில் தானும்
வெற்றிக் கொடி நாட்ட வேண்டும் என மாளவிகா மோகனன் விரும்புவதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன. சித்தாந்த் சதுர்வேதிக்கு ஜோடியாக அவர் நடித்த ‘யுத்ரா’ படம் விரைவில் வெளிவரவுள்ளது. இப்படம் ரிலீசாவதற்கு முன்னரே அடுத்த படத்திற்கான கதைகளை கேட்டுவருவதாகக் கூறப்படுகிறது. சர்ச்சைக்குரிய கதைகளுக்கு அவர் முக்கியத்துவம் அளித்துவருவதால், பாலிவுட்டின் பதற்றம் கூடியிருக்கிறது.
2030ஆம் ஆண்டில் ஒரு சவரன் தங்கம் விலை ₹1 லட்சமாக வாய்ப்புள்ளதாக நகை விற்பனையாளர்கள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, “தங்கம் வாங்க மக்கள் மத்தியில் அதீத ஆர்வம் உள்ளது. அட்சய திருதியை நாளில் மட்டும் 25,000 கிலோ தங்கம் விற்பனையாகியுள்ளது. இதே நிலை தொடரும் என்பதால் 2030ஆம் ஆண்டிற்குள் ஒரு சவரன் தங்கம் ₹1 லட்சம் என்ற அளவில் இருக்கும்” எனத் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.