India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப் பெறலாம் என்றார். மேலும், இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் அருகில் அமர்வதே பாவம் என மம்தா விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகை பெண் ஊழியரிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக ஆனந்த போஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரை மறுத்து ஆளுநர் வெளியிட்ட சிசிடிவி வீடியோவில், சர்ச்சை காட்சி இல்லை. இதுகுறித்து பேசிய மம்தா, அது எடிட் செய்யப்பட்டது, தன்னிடம் முழு வீடியோவுடன் கூடிய பென் டிரைவ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது, இதனால், தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கக் கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜுலை 10இல் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் என அவர் குறிப்பிட்டுள்ளார். 41 வயதாகும் அவர், இதுவரை 187 டெஸ்டில் 700 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். முரளிதரன், வார்னேவுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் ஆவார்.
பிரதமர் மோடியின் நாடகங்கள் அனைத்தும் ஜூன் 4இல் முடிந்துவிடும் என்று சிவசேனா (UBT) கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார். மும்பையில் பேசிய அவர், “மோடி தான் பயன்படுத்தும் வார்த்தைகள் மூலம் பிரதமர் பதவியின் மதிப்பை குறைத்து வருகிறார். அவரால் நாட்டின் பெயரும் கெடுகிறது. பதஞ்சலி எண்ணெய்யைத் தலையில் தேய்த்துக் கொண்டு ஓய்வெடுங்கள், நாட்டை நாசப்படுத்தாதீர்கள்” என பிரதமர் மோடியை சாடியுள்ளார்.
2025ஆம் நிதியாண்டில் 12,000 பேரை எஸ்பிஐ பணியமர்த்த உள்ளதாக அதன் தலைவர் தினேஷ் ஹாரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், 11,000- 12,000 பேரை வேலைக்கு தேர்வு செய்ய உள்ளதாகவும், இதில் 10,000 பணியிடங்கள் இன்ஜினியரிங் பணியிடங்கள் என்றும் கூறினார். இதில் 85% பேர் புதியவர்கள் என்ற கூறிய ஹாரா, தொழில்நுட்ப திறன் கொண்டோருக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
ஐபிஎல் தொடரின் 60ஆவது லீக் போட்டியில் இன்று மும்பை-கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. ஈடன் கார்டன் மைதானத்தில் போட்டி நடைபெற உள்ள நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவது தாமதமாகியுள்ளது. இரு அணிகளும் இதுவரை 33 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், 23 போட்டிகளில் MI அணியும், 10 போட்டிகளில் KKR அணியும் வெற்றி பெற்றுள்ளன. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
*செல்ஃபோனின் iOS பதிப்பை அவ்வப்போது புதுப்பிக்க வேண்டும். *ஐபோனை எப்போதும் சாதாரண வெப்பநிலையில் வைத்திருங்கள் (35°C க்கு மேல் வெப்பநிலை இருந்தால் பேட்டரி திறன் பாதிக்கும்). *ஃபோன் கேஸை அகற்றிவிட்டு, சார்ஜ் செய்யுங்கள். *சில நாள்களுக்கு போனை உபயோகிக்க விரும்பாதபோது, அதனை 50% சார்ஜிங்கில் வைப்பது நல்லது. *சார்ஜ் மிகவும் குறைவாக இருந்தால், லோ பவர் மோட்-ஐ ஆக்டிவேட் செய்யுங்கள்.
தவெக தலைவரும் நடிகருமான விஜய்யை வம்புக்கு இழுக்கும் வகையில் இயக்குநர் அமீர் பேசியிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. ‘உயிர் தமிழுக்கு’ படத்தின் புரொமோஷன் நிகழ்வில், “சாதிக்குக்கு இவ்வளவு பணம் எப்படி வந்ததென உங்களுக்கு சந்தேகமே வரவில்லையா?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமீர், “இதே கேள்வியை லைகா நிறுவனத்தில் நடித்த விஜய், ரஜினியிடம் போய் கேட்பீங்களா?” என பதிலளித்துள்ளார்.
அமைச்சர் K.N.நேரு தம்பி ராமஜெயம் கொலையும், காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் மரணமும் ஒரே மாதிரி இருப்பதாக சந்தேகித்து, சிறப்பு புலனாய்வு குழு விசாரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சில நாள்களுக்கு முன், கை, கால்கள் கட்டப்பட்டு ஜெயக்குமார் இறந்து கிடந்தார். இதேபோல, 2012ஆம் ஆண்டு ராமஜெயமும் கொலை செய்யப்பட்டார். 2 சம்பவமும் ஒரே பாணியில் இருப்பதை வைத்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.