News July 13, 2024

அறிவாலயத்தில் திமுகவினர் கொண்டாட்டம்

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் 10ஆவது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் 35,000 வாக்குகள் முன்னிலையில் இருக்கிறார். அவரது வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில், திமுகவினர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பின்னர், அங்கிருந்த பொது மக்களுக்கு அவர்கள் இனிப்புகள் வழங்கினர். அறிவாலய வளாகத்தில் நடனமாடியும், பாடல் பாடியும் அவர்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

News July 13, 2024

சீனா ரயில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிரசண்டா

image

நேபாள நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் பிரசண்டா அரசு தோல்வியடைந்தது. இதனால் அவரது அரசு கவிழ்ந்தது. இந்த நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முந்தைய தினம் நேபாளம்- சீனா ரயில்வே திட்டத்துக்கு அவரின் அரசு ஒப்புதல் அளித்ததாக செய்தி வெளியாகியுள்ளது. Belt and Road திட்டத்தின்கீழ் அண்டை நாடுகளில் சீனா திட்டம் செயல்படுத்தி வருகிறது. இதில் இந்தியா சேரவில்லை.

News July 13, 2024

முதல்வர் ஸ்டாலினுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்

image

ஆளுங்கட்சியினரின் ஊழல்களை தோலுரித்துக் காட்டும் அதிமுகவினரை காவல்துறையை ஏவி அரசு அடக்க நினைப்பது தொடர்கதையாகி இருப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இதுபோன்ற சர்வாதிகாரம் தொடர்ந்தால், அதிமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்பதை முதல்வருக்கு எச்சரிக்கையாகவே தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

News July 13, 2024

மரங்களுக்கு வர்ணம் பூசுவது ஏன்?

image

நெடுஞ்சாலையோரம் மரங்களுக்கு வர்ணம் பூசப்பட்டிருப்பதை பார்த்திருப்பீர்கள். இதனால் பல பலன்கள் இருக்கின்றன. சுண்ணாம்பு கரைசலை மரத்தில் பூசுவதால் பூச்சி அரிப்பு தடுக்கப்படுகிறது. நெடுஞ்சாலையோரம் வெள்ளை வர்ணம் பூசப்படுவது வாகன ஓட்டிகள் எளிதாக பார்க்கும் வகையில் இருக்கிறது. வெயிலில் மரப்பட்டைகள் காயாமல் மரங்கள் நீண்ட காலம் வாழவும் இந்த வர்ண பூச்சுகள் உதவுகின்றன.

News July 13, 2024

செயற்கை நிறமியால் கேன்சர் வருமா?

image

பெரும்பாலான பானிபூரி கடைகளில் பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றுவதில்லை என சென்னை உணவுபாதுகாப்புத்துறை அதிகாரி சதீஷ்குமார் தெரிவித்துள்ளார். ஒருநாள் பயன்படுத்திய மசாலா தண்ணீரை மறுநாளும் பயன்படுத்துவதாகவும், புதினா ரசம் பச்சை நிறமாக இருக்க செயற்கை நிறமியை கலப்பதால் புற்றுநோய் வரலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார். மேலும், ஆய்வின் போது கைப்பற்றபட்ட மாதிரிகளை சோதனை செய்து வருவதாகவும் கூறியுள்ளார்.

News July 13, 2024

கடலூர் மாவட்டத்தில் கொட்டித் தீர்த்த மழை

image

கடந்த 24 மணி நேரத்தில் கடலூர் மாவட்டம் கீழச்சேர்வை பகுதியில் 23 செ.மீ. மழை பதிவாகியிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர் மாவட்டம் லக்கூரில் 14 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுங்குன்றத்தில் 13 செ.மீ., திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 11 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 10 செ.மீ., மகாபலிபுரத்தில் 9 செ.மீ மழை பொழிந்துள்ளது.

News July 13, 2024

ரத்த சோகை நீங்க வேண்டுமா?

image

உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு ரத்த சோகையே காரணம் என மருத்துவம் சொல்கிறது. கீழ்காணும் உணவுகளை உட்கொண்டால் அதை சரி செய்யலாம் என மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
*கீரை வகைகள், முட்டைக்கோஸ், ப்ரோக்கோலியை உணவில் அதிகம் சேர்த்தால் ரத்த சோகை குறையும் *இறைச்சி உணவுகளை வாரம் 3 முறை எடுத்து கொண்டாலும் ரத்த சோகை நீங்கக்கூடும் *தினசரி உணவில் பீட்ரூட்டை சேர்த்தால் ரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

News July 13, 2024

7 மாநில இடைத்தேர்தலில் பாஜகவுக்கு பின்னடைவு

image

நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இடைத்தேர்தல் நடந்த 13 தொகுதிகளில், INDIA கூட்டணி 11 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக மேற்குவங்கத்தில் இடைத்தேர்தல் நடந்த 4 தொகுதிகளிலும் திரிணாமூல் காங்கிரசே முன்னிலை வகிக்கிறது. ம.பி. அமர்வாரா தொகுதி, உத்தராகண்ட் பத்ரிநாத் தொகுதி ஆகிய 2 தொகுதிகளில் மட்டும் பாஜக முன்னிலை வகிக்கிறது.

News July 13, 2024

கர்ப்பிணிகளுக்கு நீடிக்கும் கொரோனா பிரச்னைகள்

image

கர்ப்பமாக இருந்தபோது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, உடல் சோர்வு, இரைப்பை குடல் பிரச்னைகள் உள்ளிட்டவை நெடுநாள் நீடிக்கும் என மருத்துவ ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. 10ல் ஒரு பெண்ணுக்கு இந்த பாதிப்புகள் இருக்கும் எனவும், குறை பிரசவத்திற்கு வழிவகுக்கும் அபாயம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1,500 அமெரிக்க பெண்களை ஆய்வுக்கு உட்படுத்தியதில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

News July 13, 2024

ஆளுநர் மகனால் தாக்கப்பட்ட ஊழியர்?

image

ஒடிஷா ஆளுநர் மாளிகையில் பணி புரியும் கணவரை, ஆளுநர் ரகுபர் தாஸின் மகன் உள்பட 5 பேர் தாக்கியதாக அவரின் மனைவி சயோஜ் பிரதான் குற்றஞ்சாட்டியுள்ளார். ஆளுநர் மகனை அழைத்து வர கடந்த 7ஆம் தேதி சொகுசு காரை அனுப்பவில்லை என தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளார். கணவர் மீதான தாக்குதலுக்கு சட்ட நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து ஆளுநர் தரப்பில் எதையும் உறுதிப்படுத்தவில்லை.

error: Content is protected !!