News March 29, 2024

BREAKING: புதிய அறிவிப்பை வெளியிட்டது திமுக

image

திருவள்ளூர் தொகுதிக்கான வாக்குறுதிகளை திமுக வெளியிட்டுள்ளது. பொன்னேரி அரசு மருத்துவமனை முதல்தர மருத்துவமனையாக மாற்றப்படும். இளைஞர்கள், பெண்களுக்கு 50% வேலைவாய்ப்பு உறுதி செய்யப்படும். விம்கோ நகரில் இருந்து மீஞ்சூர் வரை மெட்ரோ சேவை விரிவுப்படுத்தப்படும். மீனவர் சமூக மக்கள் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப்படுவர். மீனவர்களுக்கு தடையற்ற தொலைத்தொடர்பு வசதி ஏற்படுத்தி தரப்படும் என அறிவித்துள்ளது.

News March 29, 2024

காய்கறி விலையை கணிக்கும் ஏ.ஐ தொழில்நுட்பம்!

image

AI தொழில்நுட்பத்தின் உதவியுடன் தக்காளி, வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலையை மத்திய அரசு முன்கூட்டி கணித்து வருகிறது. இது குறித்து நுகர்வோர் நலத்துறை செயலர் ரோகித் குமார் சிங், ‘மத்திய அரசு தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையை 30, 45 மற்றும் 60 நாட்களுக்கு எவ்வாறு இருக்குமென முன்கூட்டியே கணித்து வருகிறது. மேலும், இந்த தொழில்நுட்பத்தை இலங்கையுடனும் பகிர்ந்து கொள்ள உள்ளோம்’ என்றார்.

News March 29, 2024

மகளிர் உரிமைத் தொகை ரூ.1000, திமுக ஸ்பெஷல் அறிவிப்பு

image

மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பித்த 1.60 கோடி பேரில், தற்போது 1.16 கோடி பெண்கள் பயன்பெற்று வருகிறார்கள். தேர்தலுக்கு பின், விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும் (44 லட்சம்) உரிமைத்தொகை வழங்கப்படும் என உதயநிதி அறிவித்துள்ளார். ₹1000 தங்களுக்கு கிடைக்கவில்லை என அமைச்சர்களிடம் பெண்கள் கேள்வி எழுப்பினர். இது திமுகவிற்கு பின்னடைவாக பார்க்கப்பட்ட நிலையில், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

News March 29, 2024

சர்வதேச விமானச்சேவையில் இறங்கிய ஆகாசா ஏர்லைன்ஸ்

image

இந்தியாவின் உள்நாட்டு விமானச்சேவை நிறுவனமான ஆகாசா ஏர்லைன்ஸ், சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை தொடங்கியுள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில், ‘ மும்பையில் இருந்து குவைத், ஜெட்டா மற்றும் ரியாத்திற்கு விமானங்களை இயக்குவதற்கு அனுமதி கிடைத்துள்ளது. வரும் மாதங்களில் சர்வதேச விமானப் போக்குவரத்து சேவையை மேலும் பல நகரங்களுக்கு விரிவுப்படுத்த உள்ளோம்’ என கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

image

தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக மத்திய இணையமைச்சரும், நீலகிரி வேட்பாளருமான எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் பறக்கும் படை துணை தாசில்தார் அளித்த புகாரின் பேரில் அவர் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது. உதகையில் அவர் சில கோயில்களுக்கு சென்றதாகவும், அனுமதியின்றி பரப்புரை கூட்டம் நடத்தியதாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.

News March 29, 2024

எம்எல்ஏ தேர்தலில் எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா?

image

பெரிய மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலில் வேட்பாளர் ஒருவர் ரூ.40 லட்சம் வரை அதிகாரப்பூர்வமாக செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி தந்துள்ளது. ஒரு தொகுதியில் நடைபெறும் பொதுக் கூட்டங்கள், விளம்பரம், பேரணி, வாகன செலவுகள் அந்த வேட்பாளரின் செலவு கணக்கில் வைக்கப்படும். இந்த கணக்கை தேர்தல் முடிந்த 30 நாள்களில் அளிக்க வேண்டும். கடந்த 2019ல் செலவு தொகை ரூ.28 லட்சம், 2022ல் ரூ.40 லட்சம் என உயர்த்தப்பட்டது.

News March 29, 2024

எம்பி தேர்தலில் எவ்வளவு செலவு செய்யலாம் தெரியுமா?

image

பெரிய மாநிலங்களில் மக்களவைத் தேர்தலில் வேட்பாளர் ரூ.95 லட்சம் வரை செலவு செய்ய அனுமதி தரப்பட்டுள்ளது. 1951-52ல் இத்தொகை ரூ.25,000ஆக இருந்தது. பிறகு 1971ல் ரூ.35,000, 1980ல் ரூ.1 லட்சம், 1984ல் ரூ.1.5 லட்சம், 1996ல் ரூ.4.5 லட்சம், 1998ல் ரூ.15 லட்சம், 2004ல் ரூ.25 லட்சம், 2014ல் ரூ.70 லட்சம், 2022ல் ரூ.95 லட்சம் என உயர்த்தப்பட்டது. சிறிய மாநிலங்களில் ரூ.75 லட்சம் செலவிட அனுமதி தரப்பட்டுள்ளது.

News March 29, 2024

அதிருப்தியில் பாதியிலேயே கிளம்பிய ராதிகா

image

விருதுநகர் பாஜக வேட்பாளர் ராதிகா, திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் சில இடங்களில் மட்டுமே பேசிவிட்டு, பரப்புரையை பாதியிலேயே ரத்து செய்து சென்னைக்கு புறப்பட்டுச் சென்றார். பாஜகவினரிடம் போதிய ஒத்துழைப்பு இல்லை. அதேபோல், சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால் கூட்டமும் சேரவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர் பாதிலேயே கிளம்பிய நிலையில், சரத்குமார் மட்டும் பெருங்குடி பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.

News March 29, 2024

ஏப்ரலில் தமிழ்நாட்டிற்கு வருகிறார் மோடி?

image

மக்களவைத் தேர்தல் நெருங்குவதையொட்டி, ஏப். 2வது வாரத்தில் பிரதமர் மோடி பரப்புரைக்காக தமிழ்நாட்டிற்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 6 முறை பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்துள்ளார். பாஜக கூட்டணி கட்சிகளின் முக்கிய வேட்பாளர்களை ஆதரித்து அவர் பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனிடையே, ஏப்.4, 5ல் உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகத்தில் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

News March 29, 2024

ஹர்திக் பாண்டியா மனைவியை விமர்சிக்கும் நெட்டிசன்கள்

image

மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா மனைவி நடாசாவை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். மும்பை அணியின் கேப்டனாக ஹர்திக் நியமிக்கப்பட்டது முதல் அடுத்தடுத்து சர்ச்சை உருவாகி வருகிறது. நடந்து முடிந்த 2 போட்டிகளில் அந்த அணி தோல்வியடைந்ததால், ஹர்திக்கை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் விமர்சிக்கின்றனர். அவரின் மனைவியை சமூகவலைதளத்தில் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

error: Content is protected !!