India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதிய தமிழ்நாடு மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா 2024 இன்று முதல் அமல்படுத்தப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் மற்றும் விற்பனை செய்வோர் மீது நடவடிக்கைகள் எடுக்கும் வகையிலும், கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்கும் வகையிலும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்திருத்த மசோதாவுக்கு ஆளுநர் ரவி நேற்று ஒப்புதல் அளித்த நிலையில், இன்று அமலுக்கு வந்துள்ளது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான T20 போட்டியில், இந்திய அணி வீரர் ஜெய்ஸ்வால் அரைசதம் கடந்துள்ளார். ஹராரே மைதானத்தில் நடைபெறும் 4ஆவது T20 போட்டியில், 153 ரன்கள் இலக்கை IND அணி துரத்தி வருகிறது. தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வரும் ஜெய்ஸ்வால், 32 பந்துகளில் 10 பவுண்டரிகளுடன் 57* ரன்கள் அடித்துள்ளார். கில் 15 (13) ரன்கள் எடுத்துள்ளார். இந்திய அணி தற்போதுவரை 8 ஓவர்களில் 73 ரன்கள் குவித்துள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக பொறுப்பேற்ற பின்னர், அக்கட்சி ஒரு தேர்தலில் கூட தோல்வியடையவில்லை. 2019ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்றத் தேர்தல், இடைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல் என 9 தேர்தல்களை திமுக சந்தித்துள்ளது. அவை அனைத்திலும் வெற்றி வாகை சூடியிருப்பதாக திமுக நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டா கணக்குகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை நீக்குவதாக மெட்டா அறிவித்துள்ளது. முன்னதாக, 2021ஆம் ஆண்டு அவரது ஆதரவாளர்களால் வெள்ளை மாளிகையில் தாக்குதல் நடைபெற்ற போது, அவரது சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டன. இதை தொடர்ந்து, பிப்ரவரி 2023இல் சில கட்டுப்பாடுகளுடன் அந்த கணக்குகள் மீட்டெடுக்கப்பட்டன. தற்போது, கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் நாதக டெபாசிட் இழந்ததாக திமுகவினர் விமர்சனம் செய்து வருகின்றனர். இதுகுறித்த கேள்விக்கு நாதக வேட்பாளர் அபிநயா, நாங்கள் டெபாசிட் இழந்ததாகவே இருக்கட்டும். இந்த வெற்றி உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா என திமுக வேட்பாளரை கேளுங்கள் என பதிலடி கொடுத்தார். மேலும், கடந்த தேர்தலைவிட கூடுதலாக 2000 வாக்குகள் பெற்றுள்ளோம். இது தேர்தலே இல்லை, திமுகவினர் ஏலம் எடுத்துள்ளனர் என சாடினார்.

மகளிர் உரிமைத் தொகை பெற மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானவர்களாக 1.48 லட்சம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் வங்கிக் கணக்கில் ஜூலை 15ஆம் தேதி ₹1000 செலுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியிருந்தார். இந்நிலையில், மகளிர் உரிமைத் தொகைக்கு தேர்வானவர்களின் வங்கிக் கணக்கு சரியானது தானா என்பதை உறுதி செய்யும் வகையில், நாளை (ஜூலை 14) ₹1 அனுப்பி சோதனை செய்யப்படும் என தெரிகிறது.

கர்நாடக மாநிலம் குல்பர்காவைச் சேர்ந்த அசோகா பீமாராய புடபக், நகராட்சி இளநிலை பொறியாளராக பணியாற்றினார். ஜனவரி மாதம் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் உயிரிழந்தார். அவரின் இறுதிச்சடங்கு நிகழ்ச்சியில் நகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிலையில், 6 மாதம் கழித்து தற்போது குடகு மாவட்டம் மடிக்கேரி நகராட்சிக்கு அசோகாவை இடமாற்றம் செய்து அரசாணை வெளியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உ.பி. மாநிலம் ஃபதேபூரில் 24 வயது இளைஞரை 40 நாள்களில் 7ஆவது முறையாக பாம்பு கடித்த விநோத சம்பவம் அரங்கேறியுள்ளது. இதில் விசித்திரம் என்னவென்றால், ஒவ்வொரு சனிக்கிழமையும் அவரை பாம்பு கடித்துள்ளது. ஒவ்வொரு முறையும் மருத்துவமனையில் அனுமதியான அவர், ஒரே நாளில் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார். இந்நிலையில், அவரது நடவடிக்கையில் சந்தேகம் எழுந்ததை அடுத்து, அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

நாடு முழுவதும் இடைத்தேர்தல் நடைபெற்ற 13 தொகுதிகளில் 10 தொகுதிகளில் INDIA கூட்டணி வெற்றிபெற்றுள்ளது. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் மோடி பிரதமராகுவற்கு மிக முக்கிய பங்காற்றியது மத்திய பிரதேசம் தான். ஆனால், அம்மாநிலத்தின் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் கடும் போராட்டத்திற்கு பின் பாஜக வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், காங்., ஆளும் இமாச்சலின் ஹெமிர்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றுள்ளது.

அதிமுகவின் தலைமையை மீறி அக்கட்சியினர் திமுகவுக்கு வாக்களித்துள்ளனர் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். அதிமுக தேர்தலில் போட்டியிடாவிட்டாலும், அவர்களுக்கும் சேர்த்துதான் தோல்வி கிடைத்துள்ளது. அதிமுக தலைமையின் பேச்சை அக்கட்சியினர் கேட்காததற்கு விக்கிரவாண்டி தேர்தலே சிறந்த உதாரணம் என சாடிய அவர், இந்த வெற்றி 2026க்கு அடித்தளமிட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.