India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை தொடங்கியுள்ள நடிகர் மன்சூர் அலிகான், ராகுல் காந்தி பிரதமர் ஆக வேண்டும் என்று ஆதரவு அளித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈழத் தமிழர்களின் இனப் படுகொலைக்கு காங்கிரஸ் துணை நின்றதாக நம்புபவர்கள் தமிழ் தேசியவாதிகள். ஆனால், தன்னை தமிழ் தேசியவாதி என்று சொல்லிக் கொள்ளும் மன்சூர் அலிகான், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழகம், புதுச்சேரி என 40 தொகுதிகளிலும் முதலமைச்சர் ஸ்டாலினின் அலைதான் வீசுகிறதென அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘கூட்டணி கட்சிகள் சின்னங்களை கோரி விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர். நிச்சயமாக எந்த சின்னம் வழங்கினாலும் நாங்கள் வெற்றி பெற பாடுபடுவோம். அண்ணாமலை ஒவ்வொரு நாளும் குளறுபடியான வேலைகளை தான் செய்து கொண்டிருக்கிறார்’ என்றார்.
மூன்று நாள்கள் தொடர் விடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் முகாமிடத் தொடங்கியுள்ளனர். வத்தலகுண்டு அடிவாரத்தில் இருந்து கொடைக்கானலுக்கு செல்லும் பாதையில் சாலைப் பணிகள் நடந்து வருவதால் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்.
ஐபிஎல் தொடரில் இன்று RCB-KKR அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 2015ஆம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் KKR அணியை RCB வீழ்த்தியது. அதன் பிறகு 2017, 2018, 2019, 2023ஆம் ஆண்டுகளில் இந்த மைதானத்தில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் RCB அணி தோல்வியையே தழுவியது. இதனால், இன்றைய போட்டியில் KKR அணியை RCB வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
தேர்தல் பணிகளுக்கான கூடுதல் பணிக்குழு பொறுப்பாளர்களை அதிமுக நியமித்திருக்கிறது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், சிங்காரம் – தருமபுரி, மாதவரம் மூர்த்தி – சென்னை வடக்கு, நாஞ்சில் வின்செண்ட் – கன்னியாகுமரி, சிட்லபாக்கம் ராஜேந்திரன் – காஞ்சிபுரம், அய்யாத்துரை பாண்டியன் – தென்காசி ஆகியோர் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்களாக கூடுதலாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
வரி செலுத்துதல், முதலீட்டு திட்டங்கள் ஆகியவற்றுக்கு விண்ணப்பிப்பது, மற்றும் அப்டேட் செய்வதற்கான காலக்கெடு மார்ச் 31இல் முடிவடைகிறது. அவை ➫IT ரிட்டர்ன்களை தாக்கல் செய்ய வேண்டும் ➫மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்பவர்கள் Re-KYC பூர்த்தி செய்ய வேண்டும். ➫வீட்டுக் கடன்களில் பல வங்கிகள் வழங்கும் சிறப்பு தள்ளுபடிகள் மார்ச் 31 வரை கிடைக்கும். ஏப்ரல் முதல் புதிய விதி அமலுக்கு வரும் எனத் தெரிகிறது.
நடிகை அதிதி ராவும் நடிகர் சித்தார்த்தும் நீண்ட நாள்களாக காதலித்து வருவதாக தகவல் வெளியான நிலையில், இருவரும் தங்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக நேற்று தெரிவித்தனர். இதையடுத்து, சினிமா பிரபலங்கள் பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை நயன்தாரா ‘வாழ்க்கை முழுவதும் இன்பம் பொங்க வாழ்த்துகள்’ என சமூக வலைதளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த வார இறுதியில் சென்னை வரும் ராகுல் ஒரே நாளில் 3 இடங்களில் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளாராம். ராகுல் வந்து சென்ற பின் பிரியங்கா மற்றும் கார்கே ஒருவர் பின் ஒருவராக வருவார்கள் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் தாரைத்தம்பி (எ) கந்தசாமி காலமானார். சி.பா.ஆதித்தனாரால் துவங்கப்பட்ட நாம் தமிழர் கட்சியின் நிர்வாகியாக பணியாற்றி அக்கட்சி கலைக்கப்பட்ட பின் காங்கிரஸில் தனது வாழ்நாள் முழுவதும் இருந்தவர். காங்., கட்சியில் பல முக்கிய பொறுப்புகளில் இருந்த அவரை, முன்னாள் முதல்வர் அண்ணா “டார்பிட” தாரைத்தம்பி என அன்புடன் அழைத்தார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
c-VIGIL செயலி மூலம் இதுவரை 79 ஆயிரம் புகார்கள் வந்துள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததில் இருந்து இதுவரை வந்த புகார்களில் 99% புகார்கள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதில் 89% புகார்கள், 100 நிமிடங்களுக்குள் முடிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் c-VIGIL செயலி மூலம் வந்த 1,383 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.