India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மும்பை-கொல்கத்தா அணிகள் இடையிலான ஐபிஎல் போட்டி 16 ஓவர்களாக குறைக்கப்பட்டது. கொல்கத்தா மைதானத்தில் போட்டி நடைபெற இருந்த நிலையில், மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதமானது. தற்போது மழை நின்றுள்ளதால் டாஸ் போடுவதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெறுகிறது. இந்நிலையில், நேரமின்மை காரணமாக 20 ஓவர் ஐபிஎல் போட்டி தற்போது 16 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் எந்த அணி வெல்லும்?
உச்ச நீதிமன்றம் தனக்கு அளித்த இடைக்கால ஜாமினை, நற்சான்றிதழாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கருதுகிறார் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா விமர்சித்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “கெஜ்ரிவாலுக்கு சட்டத்தை பற்றிய புரிதல் இல்லை. தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடத்தான் கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதே தவறு என்று நீதிமன்றம் சொல்லவில்லை” என்றார்.
2024-25 கல்வியாண்டில், பொது மாறுதல் கோரும் ஆசிரியர்களின் விண்ணப்பங்களில் தவறு இருந்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும் என கல்வித்துறை எச்சரித்துள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையில், மே 13 – 17ஆம் தேதி மாலை 6 மணி வரை EMIS மூலம் பொதுமாறுதல் கோரி விண்ணப்பிக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், விண்ணப்பங்களில் தவறு இருந்தால், சம்பந்தப்பட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூட்ட நெரிசலை தவிர்க்க, தாம்பரத்தில் இருந்து தென்மாவட்டங்கள் வழியே திருவனந்தபுரம் கொச்சுவேலிக்கு 14 நாள்களுக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் 16, 18,23,25,30, ஜுன் 1,6,8,13,15,20,22,27,29 தேதிகளில் இரவு 9.40 மணிக்கு ரயில் புறப்படும். செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம், திருச்சி, மதுரை, கடையநல்லூர், தென்காசி வழியே கொச்சுவேலிக்கு மறுநாள் செல்லும். அதே மார்க்கத்தில் திரும்பும்.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பை மீண்டும் தொடங்க இயக்குநர் மகிழ் திருமேனி விடாமுயற்சி செய்துவருகிறார். திட்டமிட்ட பட்ஜெட்டை இப்போதே தாண்டிவிட்டதால், பிசினஸ் கணக்குகளைச் சொல்லி, அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்கு லைகா நிறுவனம் பணம் தரமறுத்துள்ளது. அஜித் தனது சம்பளத்தில் 20 சதவீதத்தை விட்டுக்கொடுத்தால், மேற்கொண்டு பணத்தைத் தர சம்மதம் என்று லைகா தரப்பில் சொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) தனது வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, வங்கியில் 3 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ளாத, இருப்பு இல்லாத கணக்குகளை ரத்து செய்யவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. அந்த கணக்குகளை பயன்படுத்த விரும்பினால், KYC ஆவணங்களை சமர்ப்பித்து புதுப்பித்துக் கொள்ளலாம். இந்த நடைமுறை ஜூன் 1 அன்று அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஊட்டி, கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்பவர்கள் 2 நிமிடங்களில் இ-பாஸ் பெறலாம் என தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். எத்தனை வாகனங்கள் வருகிறது என்பதை கணக்கிடவே இ-பாஸ் நடைமுறை என விளக்கமளித்த அவர், செல்போன் மூலமாகவே உடனடியாக அதனைப் பெறலாம் என்றார். மேலும், இந்த நடைமுறையால் சுற்றுலா பயணிகளுக்கு எந்தவித தொந்தரவும் இருக்காது எனவும் அவர் விளக்கமளித்தார்.
மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் அருகில் அமர்வதே பாவம் என மம்தா விமர்சித்துள்ளார். ஆளுநர் மாளிகை பெண் ஊழியரிடம் பாலியல் சிண்டலில் ஈடுபட்டதாக ஆனந்த போஸ் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், புகாரை மறுத்து ஆளுநர் வெளியிட்ட சிசிடிவி வீடியோவில், சர்ச்சை காட்சி இல்லை. இதுகுறித்து பேசிய மம்தா, அது எடிட் செய்யப்பட்டது, தன்னிடம் முழு வீடியோவுடன் கூடிய பென் டிரைவ் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 7 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை, தென்காசி, நெல்லை, திருப்பூர், ஈரோடு, சேலம், ராணிப்பேட்டை ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது, இதனால், தாழ்வான இடங்களிலும், சாலைகளிலும் மழைநீர் தேங்கக் கூடும் என்று வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
இங்கிலாந்து அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். ஜுலை 10இல் நடைபெறும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியே தனது கடைசி டெஸ்ட் என அவர் குறிப்பிட்டுள்ளார். 41 வயதாகும் அவர், இதுவரை 187 டெஸ்டில் 700 விக்கெட்டுகளை சாய்த்துள்ளார். முரளிதரன், வார்னேவுக்கு பிறகு அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது வீரர் ஆவார்.
Sorry, no posts matched your criteria.