India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ரஜினியின் ‘கூலி’ படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், இப்படத்தை முடித்தபின் கார்த்தியை வைத்து ‘கைதி-2’ படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது. இப்படத்தில் LCU காட்சிகள் இடம்பெற உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி ‘விக்ரம்’ கமல், ‘ரோலக்ஸ்’ சூர்யா இப்படத்தில் நடிப்பார்கள் என்றும், ‘லியோ’ விஜயின் வாய்ஸ் இடம்பெறும் என்றும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

காங்கிரஸ் நாடாளுமன்ற குழுத் தலைவர் சோனியா காந்தி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மக்களவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் கவுரவ் கோகாய், தலைமை கொறடா பதவியில் கொடிகுன்னில் சுரேஷை நியமிக்கும்படி கேட்டுள்ளார். இதேபோல் கொறடாக்கள் பதவியில் தமிழக எம்பி மாணிக்கம் தாகூர், ஜவைத் ஆகியோரை நியமிக்கும்படியும் அக்கடிதத்தில் அவர் பரிந்துரைத்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இறுதிப் போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் கோப்பையை வென்றது. போட்டிக்குப் பின், உலகின் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் யார் என்ற கேள்விக்கு பதிலளித்த ஹர்பஜன், சச்சின், லாரா, ஜாக் காலிஸ் பெயரைக் கூறினார். ரெய்னா கூறுகையில், கோலி, ரோஹித் சர்மா, ஜோ ரூட் சிறந்த 3 பேட்ஸ்மேன்கள் என்றார். விவியன் ரிச்சர்ட்ஸ், சச்சின், லாரா பெயரை உத்தப்பா கூறினார்.

தமிழகத்தில் டெங்கு தடுப்பு, கட்டுப்பாட்டை தீவிரப்படுத்த சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். கர்நாடகவில் டெங்கு பாதிப்பு அதிகமாகி வரும் நிலையில், குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ அலுவலர்களுக்கு டெங்கு தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது.

திருமண விருந்தில் மீன் மற்றும் இறைச்சி இல்லாததால் மணமகன் வீட்டார் திருமணத்தை நிறுத்திய சம்பவம் உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது. தியோரியா மாவட்டத்தில் தினேஷ் ஷர்மா என்பவருக்கு சுக்லா என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று திருமண ஊர்வலம் நடந்துள்ளது. அப்போது விருந்தில் அசைவம் இல்லாததால் பிரச்னை வெடித்துள்ளது. மணமகன் வீட்டார் மணமகள் வீட்டாரை தாக்கியதையடுத்து திருமணம் நின்றுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த திருவேங்கடம் தப்பி ஓட முயற்சித்தார் என்று காவல்துறை சொல்வது சந்தேகத்தை ஏற்படுத்துவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். திருவேங்கடம் இன்று காலை போலீசாரால் என்கவுண்ட்டர் செய்யப்பட்ட நிலையில், ஏதோ உண்மையை மறைக்க முயற்சிகள் நடப்பதாக அண்ணாமலை சந்தேகம் எழுப்பியுள்ளார். வழக்கு சரியான திசையில்தான் செல்கிறதா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

‘வருஷமெல்லாம் வசந்தம்’ பட இயக்குநர் ரவிஷங்கர் நேற்று தற்கொலை செய்துகொண்ட நிலையில், உடல் அடக்கம் செய்யப்படாமல் உள்ளது. 63 வயதாகியும் அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. தம்பியின் மறைவை அறிந்து மும்பையிலிருந்து வர முடியாத நிலையில், வயது முதிர்ந்த அக்கா உள்ளார். வெளிநாட்டில் இருந்து இறுதி அஞ்சலி செலுத்த அண்ணன் திரும்பிக்கொண்டிருக்கிறார். கண்ணீர் சிந்த ஆள் இன்றி ஆதரவற்ற நிலையில், அவரது உடல் உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பரில் நடைபெறவுள்ளது. இதில் குடியரசு கட்சி வேட்பாளராக ட்ரம்பும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராக பைடனும் போட்டியிடுவது ஏறத்தாழ உறுதியாகி விட்டது. இந்த சூழலில் ட்ரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இதில் பைடனுக்கு தொடர்பிருப்பதாக ட்ரம்ப் ஆதரவாளர்கள் குற்றஞ்சாட்டத் தொடங்கியுள்ளனர். இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியுடன் இங்கிலாந்து அணியின் ஜாம்பவான் ஆண்டர்சன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தனது ஓய்வை அறிவித்தார். இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டி ஜூலை 18 – 22 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆண்டர்சன் ஓய்வை அறிவித்ததால் அவருக்குப் பதில் மார்க் வுட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் டெஸ்டில் கடைசியாக இந்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் இன்று முதல் 3 நாள்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் 7- 11 செ.மீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறியுள்ளது. தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 7 நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.