India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ரஃபேல் ஊழல், தேர்தல் பத்திர ஊழல்கள்தான் மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் அடையாளம் என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தருமபுரி தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், ‘ராகுல் காந்தி ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாக பேசி வருகிறார். ஆனால், பாஜக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முட்டுக்கட்டை போடுகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்றார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை மாலை வெளியாகிறது. தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மொத்தம் 1,403 வேட்பாளர்கள் 1,749 வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதில், 664 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 1,085 மனுக்கள் ஏற்கப்பட்டன. இதேபோல விளவங்கோடு இடைத்தேர்தலுக்கு 8 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 14 வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.
வடமாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம் நிலவுவதால் தான், தமிழகத்திற்கு அவர்கள் வேலை தேடி வருவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். ஈரோடு தொகுதியில் பிரசாரம் செய்த அவர், காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் தற்போது காலை உணவுத் திட்டமாக விரிவுபடுத்தியுள்ளதாக கூறினார். மேலும், இந்தியாவை காப்பதற்கான வியூகமே, மக்களவைத் தேர்தலில் நான் போட்டியிடாததற்கு காரணம் எனவும் அவர் கூறினார்.
வாட்ஸ்அப்பில் வரும் மோசடி அழைப்புகளை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு தொலைத் தொடர்பு துறை (DOT) அறிவுறுத்தியுள்ளது. மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் அல்லது சட்டவிரோத செயல்களில் மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது எனக்கூறி வரும் அழைப்புகளை தவிர்க்குமாறு எச்சரித்துள்ள DOT, இத்தகைய அழைப்புகளால் சைபர் கிரைம் அல்லது நிதி மோசடிகளை செய்ய, தனிப்பட்ட தகவல்களை திருட வாய்ப்புள்ளதாக எச்சரித்துள்ளது.
தேர்தலில் வாக்களிக்காமல் இருக்கும் நபர்களுக்கு ரூ. 350 அபராதம் விதிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளதாக ஒரு தகவல் வைரலாகி வருகிறது. வங்கிக் கணக்கில் இருந்து அந்தப் பணம் பிடித்தம் செய்யப்படும் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் PIB FACT CHECK அமைப்பு, ‘இது தவறான தகவல். தேர்தல் ஆணையம் அப்படி எந்த முடிவும் எடுக்கவில்லை’ எனத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பணிகளில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்கப்படுமென ராகுல் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது X பக்கத்தில், “இந்தியாவில் பெண்களின் எண்ணிக்கை 50% இல்லையா? உயர்கல்வி பயில்வோரில் பெண்கள் 50% இல்லையா? ஆம் எனில், அரசுப் பணிகளில் மட்டும் பங்கு ஏன் குறைவாக உள்ளது. இடஒதுக்கீடு அளிக்கும் வலிமையால் பெண்கள் நாட்டின் தலையெழுத்தை மாற்றுவார்கள்” என குறிப்பிட்டுள்ளார்.
‘விடாமுயற்சி’ படத்தையடுத்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ என்ற படத்தில் அஜித் நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்திற்கான அறிவிப்பு வெளியான நிலையில், இப்படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடிக்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை. முன்னதாக கடந்த 2006இல் ‘வரலாறு’ படத்தில் அஜித் மூன்று வேடத்தில் நடித்திருந்தார்.
விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு தவறிவிட்டது என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். செங்கல்பட்டில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய அவர், ‘விலைவாசி உயர்வால் விவசாயமும், நெசவாளர்களும் நலிவடைந்துள்ளனர். விவசாயமே தெரியாத முதல்வர் ஸ்டாலின், விவசாயம் தெரிந்ததுபோல் காட்டிக்கொள்கிறார்’ என விமர்சித்துள்ளார்.
இந்தியாவில் படிக்காதவர்களோடு ஒப்பிடுகையில் படித்த இளைஞர்களின் வேலையின்மை விகிதம் அதிகமாக இருப்பதாக சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது. ILO அறிக்கையில், ‘பட்டப்படிப்பு முடித்தோரின் வேலையின்மை விகிதம் 29.1% ஆக உள்ளது. அதே நேரம், படிக்காதவர்களின் வேலையின்மை விகிதம் 3.4% ஆக உள்ளது. இது தவிர, மேல்நிலை படிப்பு வரை முடித்தோரின் வேலையின்மை விகிதம் 18.4%ஆக இருக்கிறது’ என கூறப்பட்டுள்ளது.
* புதிதாக வருமான வரி தாக்கல் செய்வோருக்கு Default Settingsஆக New Regime இருக்கும்.
* வருமான வரியில் 50,000 Standard Deduction திட்டம் இனி New Regimeஇலும் கணக்கிடப்படும்.
* அரசாங்க ஊழியர் அல்லாதோருக்கு Leave encashment tax exemption ₹25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
* SBI டெபிட் கார்டுகளுக்கான ஆண்டு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
* அனைத்து விதமான காப்பீடுகளும் இனி டிஜிட்டல் முறையிலேயே செய்யப்படும்.
Sorry, no posts matched your criteria.