India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும்போது ஜனநாயகத்தை சீர்குலைப்பவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் செலுத்த வேண்டிய ₹1,823 கோடி வரியை செலுத்துமாறு ஐடி நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இதுபோன்ற செயல்களை மீண்டும் ஒருமுறை செய்ய தைரியம் வராத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும். இது எனது உத்தரவாதம் எனத் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்றுவரும் கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி, புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். இன்றைய போட்டியில் 3 சிக்ஸர்களை அடித்தபோது அவர், ஒட்டுமொத்தமாக RCB அணிக்காக அதிக சிக்ஸர்கள் (240) அடித்த வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தார். அவருக்கு அடுத்தபடியாக கெயில் 239, டி வில்லியர்ஸ் 238, மேக்ஸ்வெல் 67, டு பிளெசிஸ் 50 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.
இலவச மருத்துவமனை கட்ட வேண்டும் என்பதே தனது ஆசை என KPY பாலா தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான பல்வேறு உதவிகளை செய்து வரும் பாலா, சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு நடிகர் லாரன்ஸ் உதவியுடன் ₹15 லட்சம் வழங்கினார். இந்த நிலையில், இருதய நோயாளிகளுக்கு பயன்படும் வகையில் இலவச மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்றும், தனது இந்த ஆசை விரைவில் நிறைவேறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக நீதி பேசும் ராமதாஸ், சமூக நீதிக்கு எதிராக உள்ள பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன் என முதல்வர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். தருமபுரி பிரசாரத்தில் பேசிய அவர், உடன்பாடு இல்லாமல்தான் பாஜக கூட்டணிக்கு ராமதாஸ் சென்றார் என பாமகவினருக்கே தெரியும். சமூக நீதிக்கு சவக்குழி தோண்டும் கட்சி தான் பாஜக என விமர்சித்தார். மேலும், பாஜகவிடம் இருந்து இந்தியாவை காக்க வேண்டும் எனவும் அவர் சூளுரைத்தார்.
பெங்களூருவில் நடைபெற்றுவரும் ஐபிஎல் போட்டியில் ஆர்சிபி அணி 182/6 ரன்கள் குவித்துள்ளது. அதிரடியாக ஆடிய அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 83* ரன்கள் குவித்தார். கேமரூன் கிரீன் 33, மேக்ஸ்வெல் 28, தினேஷ் கார்த்திக் 20 ரன்கள் எடுத்தனர். KKR அணிக்கு 183 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறப்பாக ஆடி ரன்கள் குவித்த கோலி, அதிக ரன்கள் எடுத்த வீரருக்கான ஆரஞ்சு தொப்பியும் வென்றார்.
4 முதல் 9ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கான தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. ரம்ஜான் பண்டிகை வருவதால் தேர்வுத் தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஏப்ரல் 10ஆம் தேதி நடைபெறவிருந்த அறிவியல் தேர்வுகள் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறுவதாக இருந்த சமூக அறிவியல் தேர்வு ஏப்ரல் 23ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
12 ஆண்டுகளாக கூட்டணியில் உள்ள தங்களை பாஜக புறக்கணிப்பதாக, இந்திய குடியரசுக் கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்தாஸ் அத்வாலே குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் தங்கள் கட்சிக்கு ஒரு தொகுதியை கூட ஒதுக்கவில்லை எனக் குறிப்பிட்ட அவர், பிரதமர் மோடிக்கு தங்கள் கட்சி தீவிர ஆதரவை அளிக்கிறது. அதே நேரத்தில் கூட்டணியில் நாங்கள் அவமதிக்கப்படுகிறோம் என வேதனை தெரிவித்துள்ளார்.
பெங்களூரு – கொல்கத்தா இடையேயான ஐபிஎல் போட்டி தற்போது பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் அரைசதம் கடந்திருக்கும் விராட் கோலி ஆரஞ்சு தொப்பியை தன் வசப்படுத்தியிருக்கிறார். ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் குவித்தவருக்கு ஆரஞ்சு தொப்பி கொடுத்து கௌரவிப்பது வழக்கம். இதுவரை ஹென்ரிக் க்ளாசனிடம் இருந்த இத்தொப்பி தற்போது கோலியிடம் வந்து சேர்ந்திருக்கிறது.
விவசாயி சின்னத்திற்கு பதில் மைக் சின்னத்தை கொடுத்ததன் மூலம் பாஜகவின் B டீம், நாம் தமிழர் கட்சி இல்லை என்பது நிரூபணமாகியுள்ளதாக சீமான் தெரிவித்துள்ளார். தென்காசி பிரசாரத்தில் பேசிய அவர், தன்னை மிகப்பெரிய தலைவனாக மாற்றுவதற்காக அண்ணாமலை போராடுவதாகவும் அதற்காக அவருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில் எதுவும் செய்யாத பாஜக இனிவரும் காலங்களில் என்ன செய்யும் எனவும் வினவினார்.
கொல்கத்தா அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிறப்பாக ஆடிவரும் விராட் கோலி 36 பந்துகளில் அரை சதம் கடந்துள்ளார். இவரது சிறப்பான ஆட்டத்தால் RCB தற்போது 12 ஓவர்கள் முடிவில் 104/2 ரன்கள் எடுத்துள்ளது. டு பிளெசிஸ் 8, கேமரூன் கிரீன் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். கோலி 50, மேக்ஸ்வெல் 11 ரன்களுடன் விளையாடி வருகின்றனர். முன்னதாக பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கோலி 77 ரன்கள் அடித்தது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.