India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் ஸ்டார்க் முதல் 2 போட்டிகளிலும் சேர்த்து 100 ரன்களை வாரி வழங்கியுள்ளார். SRH-க்கு எதிரான போட்டியில் 4 ஓவர்கள் வீசி 53 ரன்களை விட்டுக்கொடுத்த ஸ்டார்க், RCB உடனான இன்றைய ஆட்டத்தில் 4 ஓவர்களில் 47 ரன்களை வாரி வழங்கினார். இதனால் KKR ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். ஆஸியை., சேர்ந்த மிட்செல் ஸ்டார்க்கை கொல்கத்தா அணி ₹24.75 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது.
ஸ்ரீதேவ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘நெவர் எஸ்கேப்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் விஜய் சேதுபதி வெளியிட்டுள்ளார். இதுகுறித்து X தளத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார். மேலும், இயக்குநர் ஸ்ரீதேவ் ராஜ் உள்பட படக்குழு அனைவருக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் அவர் தெரிவித்துள்ளார்.
மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் சின்னம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என துரை வைகோ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணியில் மதிமுகவுக்கு திருச்சி தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு துரை வைகோ போட்டியிடுகிறார். அவருக்கு, மதிமுகவின் பம்பரம் சின்னம் கிடைக்காததால் புதிய சின்னத்தில் போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அது என்ன சின்னம் என்பது குறித்து நாளை அறிவிக்கப்படும் என துரை வைகோ கூறியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான 10ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா அணி அபார வெற்றி பெற்றது. சின்னசாமி மைதானத்தில் முதலில் விளையாடிய RCB அணி 182/6 ரன்களை எடுத்தது. அதிகபட்சமாக கோலி 83 ரன்கள் குவித்தார். பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR அணி 16.5 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வெங்கடேஷ் ஐயர் 50, நரைன் 47 ரன்கள் எடுத்தனர்.
ராகு மற்றும் கேது பகவான் ஆகிய இருவரும் இந்த ஆண்டு முழுவதும் மீனம் மற்றும் கன்னி ராசியில் பயணம் செய்ய உள்ளனர். இதனால் மிதுனம், கன்னி, துலாம், தனுசு ராசியினர் பண மழையில் நனையப் போகின்றனர். புதிய வீடு, வாகனம் வாங்கும் யோகம், வேலையில்லாமல் தவித்தவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை, தொழிலில் பல மடங்கு லாபம் போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.
தமிழகத்திற்கும் தமிழ் இனத்திற்கும் திமுக தான் உண்மையான எதிரி என அண்ணாமலை கூறியுள்ளார். மழை வெள்ளத்தில் தத்தளிக்கக் கூடிய நகரமாக சென்னை மாறியதுதான் திமுகவின் சாதனை எனக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் வளர்ச்சியை குழிதோண்டி புதைத்து விட்டதாக குற்றம்சாட்டினார். மேலும், இந்தியாவிலேயே முதல் முறையாக வாக்குப்பதிவிற்கு முன்பே, யார் பிரதமர் என்று தீர்மானிக்கப்பட்ட தேர்தல் இதுதான் எனவும் அவர் கூறினார்.
2023-24ஆம் நிதியாண்டில் பிட்காயின் மதிப்பு வரலாற்று உச்சத்தை தொட்டுள்ளது. நிதியாண்டின் தொடக்கத்தில் $28,500 ஆக (இந்திய மதிப்பில் ₹23 லட்சம்) இருந்த பிட்காயினின் மதிப்பு சுமார் 150% அதிகரித்து தற்போது $73,750 என்ற (₹61.5 லட்சம்) புதிய உச்சத்தை தொட்டது. ஈக்விட்டி, பத்திரங்கள் மற்றும் தங்கத்துடன் ஒப்பிடுகையில் பிட்காயின் நல்ல வருமானத்தை அளித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் கொல்கத்தா அணி வீரர்கள் பட்டையை கிளப்பி வருகின்றனர். சின்னசாமி மைதானத்தில் முதலில் களமிறங்கிய RCB அணி 182/6 ரன்களை குவித்தது. பின்னர் 183 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய KKR வீரர்கள் சால்ட் மற்றும் நரைன் அதிரடியாக விளையாடினர். இதனால் 6 ஓவர்களில் KKR அணி 85/1 ரன்களை குவித்துள்ளது. இதில் சுனில் நரைன் 47 (22) அவுட்டானார்.
UPI செயலியான PhonePe பயனாளர்கள் இனி ஐக்கிய அரபு நாடுகளில் இந்த செயலியை பயன்படுத்தலாம் என்று அந்த நிர்வாகம் தெரிவித்துள்ளது. அந்நாட்டுக்கான கரன்ஸியாக இந்திய ரூபாயை மாற்றிய பின்பு பணப் பரிமாற்றம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நமது நாட்டில் UPI இருப்பது போல அரபு நாடுகளில் Neopay சேவை இருக்கிறது. அந்த இரண்டையும் இணைத்திருப்பதன் மூலம் PhonePe இந்த சேவையை வழங்கவுள்ளது.
ஆரத்தி எடுத்த பெண்ணுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை பணம் கொடுத்ததாக வீடியோ ஒன்று வைரலானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணையை முடுக்கி விட்டுள்ளது. இது குறித்து விளக்கம் அளித்திருக்கும் அண்ணாமலை, “அது என் மண், என் மக்கள் பயணத்தின்போது கொடுத்தது. ஆரத்திக்கு பணம் கொடுப்பது நமது கலாசாரம். வாக்குகளை பணம் கொடுத்து பெற வேண்டிய அவசியம் இல்லை.” என்று கூறியிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.