India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் அணியாக கொல்கத்தா பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை மும்பைக்கு எதிராக போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலம் இந்த சாதனையை அந்த அணி படைத்தது. 12 போட்டிகளில் விளையாடியுள்ள அந்த அணி 9 வெற்றி, 3 தோல்விகளுடன் 18 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. ராஜஸ்தான், ஹைதராபாத், சென்னை அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
இன்று (மே 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
பிரதமரின் பேச்சில் இருந்த கர்வம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக காங்கிரஸ் தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். வேலைவாய்ப்பின்மை மற்றும் பணவீக்கத்தால் மத்திய அரசின் மீது மக்கள் கோபத்தில் இருப்பதாக தெரிவித்த அவர், மோடி மீண்டும் தேர்தலில் வென்று ஆட்சியமைப்பது மிகவும் கடினம் என்றார். நாட்டில் உள்ள ஏழை மக்களின் நலன்களையும், உரிமைகளையும் பாதுகாக்க பாஜக தவறவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. முதலில் களமிறங்கிய கொல்கத்தா 157/7 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் வெங்கடேஷ் ஐயர் 42 ரன்கள் எடுத்தார். தொடர்ந்து விளையாடி மும்பை அணி, ஆரம்பம் முதலே அடுத்தடுத்து விக்கெட்டை இழந்து திணறியது. அந்த அணி 20 ஒவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 139 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியின் இஷான் கிஷன் 40 ரன்கள் எடுத்தார்.
நவீன வாழ்க்கை முறையின் பல நோய்களுக்கு முக்கிய காரணியாக இருப்பது மனச்சோர்வு. மனநலம் கெடுவதால் உடல்நலமும் கெட்டுப்போகிறது. ஆகவே துரித உணவுகளை தவிர்த்து வால்நட், தானியங்கள், கிரின் டீ, பால் பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்கள் ஆகியவற்றை உட்கொள்வதன் மூலம் மனச்சோர்வில் இருந்து விடுபடலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த உணவுகளை பின்பற்றி மனச்சோர்வில் இருந்து விடுபடுங்கள்.
இன்று (மே 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
➤ எதிர்க்கட்சியாக கூட காங்கிரஸ் வராது – மோடி
➤ ஜூன் 4-க்கு பிறகு மோடி ஓய்வு பெறுவார் – ஜெக்ரிவால்
➤ முஸ்லிம் இட ஒதுக்கீடு திரும்ப பெறப்படும் – ஹிமந்த பிஸ்வா ஷர்மா
➤ மோடியுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார் – ராகுல்
➤ ‘எலெக்ஷன்’ படத்தின் டிரைலர் வெளியீடு
➤ தோனியுடன் விளையாடுவதே பெருமை – ரஷீத் கான்
ரஷ்யாவுடன் போர் நடத்தி வரும் உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் ராணுவ உதவிகளை அமெரிக்க வழங்கவுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்ட குறிப்பில், உக்ரைனுக்கு உதவ அதிநவீன ஆயுதங்கள், ஏவுகணைகள், டாங்கிகள் வழங்கவுள்ளோம். அத்துடன், உக்ரைன் வீரர்களுக்கு ராணுவ கல்வி & பயிற்சிகளை அமெரிக்க பாதுகாப்புத் துறையைச் சேர்ந்த நிபுணர்கள் வழங்குவதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு உதவிய சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா அரசு பொருளாதாரத் தடைகளை விதிக்கவுள்ளது. இந்தப் பட்டியலில் உள்ள ஷென்சென் 5G ஹை டெக் இன்னோவேஷன் உள்ளிட்ட 11 நிறுவனங்கள் & 12 தனிநபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த நிறுவனங்கள் & தனிநபர்கள் ரஷ்யாவின் ஆயுத உற்பத்தியை ஊக்குவிக்க நிதி & தொழில்நுட்ப உதவிகளை வழங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் நம்பர் 1 கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஜுகி, ஸ்விப்ட், வேகன் ஆர், ஆல்டோ, பலினோ உள்ளிட்ட பல்வேறு மாடல் கார்களை விற்பனை செய்கிறது. இந்நிலையில், 4ஆம் தலைமுறை ஸ்விப்ட் மாடல் காரை பல்வேறு புதிய அம்சங்களுடன் அறிமுகம் செய்துள்ளது. அந்த கார், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 25 கி.மீ. தூரம் மைலேஜ் தரும் எனக் கூறப்படுகிறது. ரூ.6.49 லட்சம்- ரூ.9.65 லட்சம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.