India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மலக்குடலில் தேங்கி நிற்கும் நச்சு கழிவுகளை நீக்கி, முடி உதிர்வை தடுக்க நெல்லி குடிநீரை பருகலாம் என சித்த மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார். இரவு தூங்கும் முன்பாக பித்தளை பாத்திரத்தில், ஒரு கைப்பிடி நெல்லியை (வெட்டியது) போட்டு நீரை ஊற்றி மூடி வைக்கவும். காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை 45 நாள்கள் பருகி வந்தால் முடி உதிர்வு நிற்குமாம். இரும்புச் சத்து குறைப்பாடு உடையவர்களும் இதை அருந்தலாம்.
சோமாலிய கடற்கொள்ளையர்களிடம் சிக்கிய 23 பாகிஸ்தானியர்களை இந்திய கடற்படை மீட்டுள்ளது. அரபிக்கடல் பகுதியில், அல்-கம்பார் கப்பலை ஐஎன்எஸ் சுமேதா போர்க்கப்பல் இடைமறித்தது. அப்போது, கடற்கொள்ளையர்கள் இந்திய கடற்படையினர் மீது தாக்குதல் நடத்தினர். அதற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் துப்பாக்கி சூடு நடத்திய இந்திய படை,12 மணி நேர மீட்பு நடவடிக்கைக்குப் பிறகு 23 பேரையும் மீட்டதாகக் கூறப்படுகிறது.
பாமக சார்பில் கடலூர் தொகுதியில் வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ள இயக்குநர் தங்கர் பச்சான் பெரும் நெருக்கடிக்கு ஆளாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தலில் நிற்கும் அவருக்கு ஆதரவாக பரப்புரைச் செய்ய இயக்குநர் சேரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட திரைப் பிரபலங்களை அழைத்துவர சிலர் முயன்றதாகக் கூறப்படுகிறது. பாஜக கூட்டணியை காரணம் காட்டி, ஆளும் தரப்புக்கு எதிராகக் களத்துக்கு வர அவர்கள் மறுத்துவிட்டனராம்.
மக்களவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாதது தியாகமல்ல; தமிழகம் காக்கும் வியூகம் என்று அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். ஈரோட்டில் பேசிய அவர், “கவர்னரை அனுப்பி திமுக ஆட்சிக்கு மத்தியில் இருப்பவர்கள் தொல்லை தருகிறார்கள். வரியாக ஒரு ரூபாய் கொடுத்தால், 29 காசு மட்டும் தந்து, நம் அடிவயிற்றில் கை வைக்கின்றனர். நம் மீது கை வைப்பவர்களை எதிர்க்க ஒரு விரல் மை போதும்” என்றார்.
*1976 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேலின் நில அபகரிப்பு திட்டத்திற்கு எதிராக பாலஸ்தீன நில நாள் இன்று அனுசரிக்கப்பட்டு வருகிறது.*1699 – கால்சா அமைப்பை குரு கோவிந்த் சிங் தோற்றுவித்தார். *1853 – ஓவியர் வின்சென்ட் வான் கோ பிறந்த நாள். *1949 – நேட்டோவில் ஐஸ்லாந்து இணைந்தது. *1972 – வடக்கு வியட்நாம் படைகளுக்கும் தெற்கு வியட்நாம் படைகளுக்கும் இடையே போர் மூண்டது. *2017 – ஆய்வாளர் என்.எம்.நம்பூதிரி மறைந்த நாள்.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் KKR அணிக்கு எதிரான 9ஆவது லீக் போட்டியில், RCB அணி அரிய சாதனை ஒன்றைப் படைத்துள்ளது. அதாவது, IPL வரலாற்றில் 1,500 சிக்ஸர்களை கடந்த 2ஆவது அணி என்ற பெருமையை RCB பெற்றது. இந்த பட்டியலில் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணி (1,548) மட்டுமே உள்ளது. இந்தப் போட்டியில் கோலியுடன் இணைந்து கிரீன் தலா நான்கு சிக்ஸர்களை அடித்து இந்த புதிய சாதனையைப் படைத்துள்ளனர்.
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான ஷாவ்மி நிறுவனம், தனது முதல் மின்சார வாகனமான SU7 காரை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தையில் விற்பனைக்கு வந்த முதல் 30 நிமிடங்களுக்குள் 50,000க்கும் மேற்பட்ட ஆர்டர்களை ஷாவ்மி SU7 கார் பெற்றுள்ளதாக அறிய முடிகிறது. தொலைபேசி, மடிக்கணினி உள்ளிட்ட பிற சாதனங்களை இணைப்பதற்கான வசதி கொண்ட இந்த காரின் விலை ரூ.24.89 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தொலைநிலை & ஆன்லைன் படிப்புகளுக்கு தனியாருக்கு பிராஞ்சைசி உரிமம் வழங்கி, அதன் வழியே மாணவர் சேர்க்கையை நடத்தக்கூடாது என யு.ஜி.சி., அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், “மாணவர் சேர்க்கையை (எல்லைகளுக்கு உட்பட்டு) மத்திய, மாநில & தனியார் பல்கலைக்கழகங்களே நேரடியாக நடத்த வேண்டும். தனியார் நிறுவனங்கள் வழியே மாணவர்களுக்கு புத்தகங்கள் & கல்வி பயன்பாட்டு கருவிகளை வழங்கக்கூடாது” எனக் கூறப்பட்டுள்ளது.
▶ குறள் பால்: காமத்துப்பால் | ▶ இயல்: களவியல்
▶ அதிகாரம்: காதற்சிறப்புரைத்தல் ▶ எண்: 1105
▶குறள்:
வேட்ட பொழுதின் அவையவை போலுமே
தோட்டார் கதுப்பினாள் தோள்.
▶ பொருள்: ஒருவருக்கு விருப்பமான பொருள் ஒன்று, நாம் நினைக்கும் பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த என் காதலியை கட்டியணைக்கும்போது, அவளது தோள்கள் இன்பம் வழங்குகின்றன.
மயாமி ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலுக்கு போபண்ணா – மாத்யூ எப்டன் ஜோடி முன்னேறியுள்ளது. அரையிறுதியில் ஸ்பெயினின் கிரானலர்ஸ், அர்ஜென்டினாவின் ஜபல்லோஸ் ஜோடியை எதிர்கொண்ட போபண்ணா ஜோடி 6-1, 6-4 என்ற நேர்செட் கணக்கில் வென்றது. பைனலில், இவான் – ஆஸ்டின் ஜோடியை போபண்ணா ஜோடி எதிர்கொள்கிறது. அதில் எந்த ஜோடி வெல்லுமென நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே குறிப்பிடவும்.
Sorry, no posts matched your criteria.