India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஆகிய 3 நிறுவனங்கள் தங்களது பயனர்களுக்கு தரமான சேவைகளை வழங்கத் தவறிவிட்டதாக ‘லோக்கல் சர்க்கிள்ஸ்’ தெரிவித்துள்ளது. அதன் ஆய்வில், 89% பேர் கால் ட்ராப் & இணைப்பு பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். கிராமப்புறங்களில் மட்டுமின்றி மெட்ரோ நகரங்களிலும் பிரச்னைகள் ஏற்படுவதாகத் தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், 2022ஆம் ஆண்டை ஒப்பிடுகையில், இப்பிரச்னை சற்று குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

காவிரியில் இருந்து கர்நாடகா நீர் தர மறுக்கும் நிலையில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை அனைத்து கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். அனைத்துக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதில் அதிமுக பங்கேற்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் இருந்து டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.

தஞ்சை மண்டல நாதக செயலர் கந்தசாமி அக்கட்சியிலிருந்து விலகி, அண்ணாமலை முன்னிலையில் பாஜகவில் இணைந்துள்ளார். அவருடன் 200க்கும் மேற்பட்டோரும் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். சீமானின் அன்பை பெற்றிருந்த கந்தசாமி, கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு, தஞ்சையில் ஒரு லட்சத்திற்கு மேல் வாக்கு வாங்கிக் கொடுத்தவர். அதுமட்டுமல்ல, டெல்டா மாவட்டங்களில் நாதக வளர்ச்சி பெற முக்கிய பங்காற்றியவர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி ஸ்காட்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் (செப்.4-7) விளையாட உள்ளது. அதை முடித்துவிட்டு இங்கிலாந்துக்கு சென்று 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் (செப்.11-29) விளையாடுகிறது. இப்போட்டிகளுக்கான ஆஸ்திரேலிய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கு மிட்செல் மார்ஷ் கேப்டனாக செயல்படுவார்.

சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கிற்கு ஜூலை 29 வரை நீதிமன்றக் காவல் விதித்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட உள்ளார். வெளிநாட்டில் இருந்து போதைப்பொருள் கடத்தியதாக கடந்த மார்ச் மாதம் ஜாபர் சாதிக் மத்திய போதைப்பொருள் குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தொலைத் தொடர்புத் துறைக்கு, அதன் சாக்சு இணையதளம் வாயிலாக ஏராளமானோரிடம் இருந்து புகார்கள் வந்தன. அதில், மோசடி நபர்களின் மொபைல் எண்கள் குறித்து குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை ஆய்வு செய்தபோது, 3 செல்போன்களில் 24,228 மொபைல் எண்கள் பயன்படுத்தப்பட்டு, அதன்மூலம் மோசடி நடந்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த எண்களை தொலை தொடர்புத் துறை துண்டித்துள்ளது.

ஈரோடு, நெல்லை உள்ளிட்ட பல மாவட்டங்களில் தற்போது கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, காஞ்சி, விழுப்புரம், கடலூர், தி.மலை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், நெல்லை, குமரி ஆகிய மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

பாஜக தலைமையிலான NDA கூட்டணி ஆட்சியின் பட்ஜெட்டில் பெரிதாக எதையும் எதிர்பார்க்க வேண்டாம் என, மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கௌரவ் கோகாய் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் பாரபட்சமாக நடைபெறுவதாக குற்றம் சாட்டிய அவர், ராகுல் காந்தியின் மக்களவை உரையில் பல பகுதிகளை சபாநாயகர் நீக்கியதை சுட்டிக்காட்டினார். மேலும், நாட்டில் பணவீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் தொடரும் எனவும் அவர் கூறியுள்ளார்.

சமீபத்தில் நாடுமுழுவதும் 13 இடங்களில் நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் INDIA கூட்டணி 10 இடங்களிலும், பாஜக கூட்டணி 2 இடங்களிலும் வெற்றிபெற்றது. இதை கடுமையாக விமர்சித்துள்ள சுப்ரமணிய சுவாமி, நம் கண்முன்னே பாஜக டைட்டானிக் போல மூழ்குவதை பார்க்க வேண்டுமானால், மோடி தலைமையே அதற்கு சிறந்த உதாரணம் எனக் கூறியுள்ளார். மேலும், இடைத்தேர்தல் முடிவுகள் பாஜக நிரந்தரமாக மூழ்கும் என்பதைக் காட்டுகிறது என சாடியுள்ளார்.

இந்தியா போஸ்ட் ஆபீஸ் பெயரில் குறிப்பிட்ட சில செல்போன் எண்களுக்கும், இ-மெயிலுக்கும் மோசடி கும்பல் SMS அனுப்பி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்சலை சரியான முகவரி இல்லாததால், டெலிவிரி செய்ய முடியவில்லை. எனவே, பார்சல் திரும்ப பெறப்படுவதை தவிர்க்க, 48 மணி நேரத்தில் முகவரியை அப்டேட் செய்யுங்கள் என லிங்க் அனுப்பி, அந்தரங்க தகவல்களை திருடி மோசடியில் ஈடுபடுவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.