India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்கும் ஆசிரியர்கள் தற்போதைய பள்ளியில் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு மே 24 முதல் நடக்க உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை மே 13 – 17 வரை எமிஸ் தளத்தில் பதிவேற்ற வேண்டும். மாறுதல் ஆணை பெற்றவர்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது என்றும் கூறப்பட்டுள்ளது.
பலாப்பழத்தில் சர்க்கரையின் அளவு சற்று அதிகமாக இருப்பதால், சர்க்கரை நோயாளிகளும், கர்ப்பக் காலத்தில் அதிக சர்க்கரையால் அவதிப்படும் பெண்களும் இதை தவிர்க்க வேண்டும். பலாப்பழம் ரத்தம் உறைதலை விரைவுபடுத்த கூடியது எனக் கூறப்படுவதால், ரத்த சம்பந்தமான நோய்கள் இருப்பவர்கள், பலாப்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். பலாப்பழம் மிகச்சிறந்த மலமிளக்கியாக இருப்பதால், அதை அளவோடு சாப்பிடுவதே நல்லது.
➤ பாஜகவின் தோல்வி முடிவு செய்யப்பட்ட ஒன்று – உத்தவ் தாக்கரே
➤கெஜ்ரிவாலுக்கு இந்தியாவின் அரசியல் சாசன சட்டம் தெரியாது – அமித் ஷா
➤ மே.வங்க ஆளுநருக்கு எதிராக வீடியோ உள்ளது – மம்தா
➤ மோடி சொல்வது அனைத்தும் பொய் – பிரியங்கா காந்தி
➤ YSR கட்சிக்கு நடிகர் அல்லு அர்ஜுன் ஆதரவு
➤ கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் மும்பை அணி தோல்வி
மக்களவைத் தேர்தல் ராம பக்தர்களுக்கும், ராம துரோகிகளுக்கும் இடையிலானது என யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். அரசியல் அமைப்புக்கு எதிராக, முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்து மத அடிப்படையில் நாட்டை காங்கிரஸ் பிளவுப்படுத்தியதாக தெரிவித்த அவர், முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கினால், ஓபிசிக்கள் எங்கே போவார்கள் என்று கேள்வி எழுப்பினார். மேலும், ராமரின் தேசத்தில் பிரிவினைவாதிகளுக்கு இடமில்லை என்றார்.
தோனியின் பேட்டிங் வரிசை குறித்த விவாதத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என ஷேவாக் தெரிவித்துள்ளார். தோனி எந்த இடத்தில் பேட்டிங் செய்தாலும் சிறப்பாக விளையாடுவதாக பாராட்டிய ஷேவாக், மற்ற சென்னை வீரர்கள் தோனி அளவுக்கு சிறப்பாக பேட்டிங் செய்யவில்லை என்றார். சிஎஸ்கேவின் வெற்றி, தோல்வியை காட்டிலும் தோனி ரசிகர்களை மகிழ்விப்பதே முக்கியம் என்ற ஷேவாக், அந்த பணியை அவர் சிறப்பாக செய்து வருவதாக பாராட்டியுள்ளார்.
➤பால் மற்றும் பால் பொருட்கள்
➤ சோயா, கீரை, பீன்ஸ்
➤ நெத்திலி, வஞ்சிரம், கட்லா உள்ளிட்ட மீன்கள்
➤ஆட்டுக்கால் சூப், நண்டு சூப், கறுப்பு உளுந்து
➤கொள்ளு ரசம், அத்திப்பழம்
➤புரோகோலி, முட்டைக்கோஸ், காலிஃபிளவர், பீட்ரூட் போன்ற காய் வகைகள்
➤ ஆரஞ்சு, கொய்யா, வாழைப்பழம், ஆப்பிள் போன்ற பழ வகைகளை சேர்த்துக்கொள்ளுங்கள்.
மே – 12 | சித்திரை – 29
▶கிழமை: ஞாயிறு
▶நல்ல நேரம்: 07:30 AM – 08:30 AM, 3:30 PM – 4:30 PM
▶கெளரி நேரம்: 10:30 AM – 11:30 AM, 01:30 PM – 2:30 PM
▶ராகு காலம்: 4:30 PM- 06:00 PM
▶எமகண்டம்: 12:00 PM – 01:30 PM
▶குளிகை: 03:00 AM – 04:30 AM
▶சூலம்: மேற்கு
▶பரிகாரம்: வெல்லம்
மும்பைக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் சுனில் நரைன் புதிய சாதனை படைத்துள்ளார். இஷான் கிஷன் விக்கெட்டை வீழ்த்திய அவர், ஐபிஎல் வரலாற்றில் ஒரு சீசனில் 400+ ரன்கள் மற்றும் 15 விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்கள் என்ற ஷான் வார்னே, காலிஸ் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார். ஷேன் வார்னே – 472 ரன்கள் 17 விக்கெட்டு, காலிஸ் – 409 ரன்கள் 15 விக்கெட்டு, சுனில் நரைன் – 461 ரன்கள் 15 விக்கெட்டு எடுத்துள்ளனர்.
வருண் காந்திக்கு சீட் மறுக்கப்பட்டது ஏன்? என்ற கேள்விக்கு அவரின் தாயும், பாஜக வேட்பாளருமான மேனகா காந்தி பதிலளித்துள்ளார். பாஜக அரசை விமர்சித்ததே சீட் ஒதுக்கப்படாததற்கு அதிகபட்ச காரணமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். கடந்த முறை பாஜக சார்பாக பிலிபிட் தொகுதியில் நின்ற வெற்றி பெற்ற வருண் காந்திக்கு பாஜக இந்த முறை சீட் தரவில்லை. கடந்த சில மாதங்களாக, அவர் பாஜகவை விமர்சனம் செய்து வந்தார்.
➤ தெளிவான குறிக்கோளே, வெற்றியின் முதல் ஆரம்பம்
➤ நாம் நமது நேரத்தை செலவிடும் விதம் நாம் யார் என்பதை வரையறுக்கிறது.
➤ சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல, சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை.
➤ நீங்கள் தாமதிக்கலாம், ஆனால் நேரம் தாமதிக்காது.
➤ நேரத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு நேரம் போதுமானதாக இருக்கும்
Sorry, no posts matched your criteria.