India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரிகளில் பட்டயப் படிப்பு படிப்பதற்காக நடைபெற இருந்த தேர்வு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 10 மற்றும் 12ஆம் தேதிகளில் நடைபெற இருந்த பட்டயப் படிப்புக்கான தேர்வுகள் ஏப்ரல் 24, 25ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ரம்ஜான் பண்டிகை காரணமாக தேர்வு தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தேர்வு வாரியத் தலைவர் தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தின் குவாலியரை சேர்ந்த கல்லூரி மாணவரான பிரமோத் குமார் தண்டோடியாவுக்கு ரூ.42 கோடி வங்கி பரிவர்த்தனைக்கு வரி செலுத்துமாறு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு முதல் மும்பை மற்றும் டெல்லியில் இயங்கும் நிறுவனம், தனது பான் எண்ணை தவறாக பயன்படுத்தி வருகிறது. இது எப்படி சாத்தியம் என்பது எனக்கு தெரியவில்லையென பிரமோத் குமார் தண்டோடியா வேதனை தெரிவித்துள்ளார்.
நடிகர் டேனியல் பாலாஜி மறைவுக்கு சூர்யா இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் டேனியல் பாலாஜி இன்று அதிகாலை மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு சூர்யா தனது X பக்கத்தில், “டேனியல் பாலாஜியின் மறைவுச் செய்தி கேட்டு அதிர்ச்சியும், வலியும் அடைந்தேன். ஒரு காட்சி சரியாக வருவதற்கு தன்னை தானே எப்போதும் உந்தி கொள்பவர். ‘காக்க காக்க’ படத்தின் இனிமையான நாட்கள் நினைவுகளாக நிழலாடுகிறது” எனப் பதிவிட்டுள்ளார்.
நடப்பு ஐ.பி.எல்லில் இதுபோன்ற மோசமான பவுலிங்கை வைத்து கொண்டு, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கோப்பையை வெல்ல வாய்ப்பே இல்லையென இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ஆருடம் கூறியுள்ளார். நேற்று சின்னசாமி மைதானத்தில் நடந்த KKR அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் ஆடிய RCB அணி 182 ரன்களை குவித்தது, இருப்பினும் பந்துவீச்சாளர்கள் சொதப்பவே, 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக ஆதரவுடன் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வேட்புமனுக்களை வாபஸ் பெறும் அவகாசம் முடிந்த நிலையில், சின்னங்கள் ஒதுக்கப்பட்டது. தனக்கு வாளி, திராட்சை, பலாப்பழம் ஆகிய 3 சின்னங்களை விருப்ப சின்னங்களாக ஓபிஎஸ் கேட்டிருந்தார். இந்நிலையில், ஓபிஎஸ்க்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது.
வேலூர் குடியாத்தம் அருகே நீரில் மூழ்கி 4 பெண்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சரோஜா, அவரது மகள் லலிதா உள்பட 4 பேர் முனீஸ்வரன் கோயிலுக்கு சென்றனர். சாமி தரிசனத்தை முடித்துவிட்டு அருகிலிருந்த ஏரியில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சம்பவத்தை அடுத்து 4 பேரின் சடலங்களையும் கைப்பற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
மன்சூர் அலிகானுக்கு பாலாப்பழம் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. வேலூர் தொகுதியில் இந்திய ஜனநாயக புலிகள் கட்சி சார்பாக சுயேச்சையாக போட்டியிடும் அவருக்கு பலாப்பழம் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தனக்கு விருப்ப சின்னமாக பலாப்பழம், மீன், விமானம் உள்ளிட்டவற்றை அவர் கேட்டிருந்த நிலையில், அவருக்கு பலாப்பழம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் பலாப்பழத்தோடு பரப்புரையை ஆரம்பித்துள்ளார்.
டிடிவி.தினகரன் வீட்டு காவல் நாய்களாக இருந்தது உண்மை தான் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் அதிமுக வேட்பாளர் நாராயண சாமியை ஆதரித்து பேசிய அவர், “என்னை தினகரன் காமெடியன் என்கிறார், நான் காமெடியனாக இருந்தாலும், ஹீரோ கூடவே இருப்பேன். வில்லனான தினகரன் விரைவில் ஃபெரா வழக்கில் சிறைக்கு போகப் போகிறார். தேர்தல் முடிவு தினகரனுக்கு நல்ல பாடமாக இருக்கும்” என்றார்.
ஜம்மு காஷ்மீரில் பனி உருகுவது அதிகரித்துள்ளதோடு, மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதால், எல்லை கட்டுப்பாட்டுக் கோடு ஒட்டிய பகுதியில் தீவிரவாதிகளின் ஊடுருவல் முயற்சிகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக பி.எஸ்.எஃப் அதிகாரி அசோக் யாதவ் தெரிவித்துள்ளார். இருப்பினும், எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் பாதுகாப்பு படையினர் விழிப்புடன் செயல்பட்டு, ஊடுருவல் முயற்சியை முறியடிப்பரெனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
பாஜகவை தேர்தலில் வீழ்த்த வரலாறு ஒரு அரிய வாய்ப்பு தந்திருப்பதாக நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அநீதி இழைத்தவர்களுக்கு பாடம் புகட்ட ஒரு வரலாறு வாய்ப்பு கிடைத்துள்ளதாக கூறினார். மேலும், வாக்குக்கு பணம் கொடுக்கும் நிலை இன்றும் தொடர்வதாக வேதனை தெரிவித்த அவர், தாங்கள் மாற்று அரசியலை முன்வைத்து செயல்படுவதாக பெருமிதம் தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.