India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

இலங்கைக்கு எதிரான ODI தொடரில் இருந்து இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களால் தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்கும்படி BCCI நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக BCCI இதுவரை பதிலளிக்கவில்லை. டி20 தொடரின் கேப்டனாக அவரை BCCI நியமிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த அனைத்துக் கட்சிகள் கூட்டத்தில் கர்நாடக அரசை கண்டிப்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேசிய CM ஸ்டாலின், பருவமழை சாதகமாக இருக்கும்போது, தமிழகத்திற்கு காவிரி நீரை திறந்துவிடாத கர்நாடக அரசின் செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இவ்விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை நாடி சட்டப்போராட்டம் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மாலை 4 மணி வரை குமரி, நெல்லை, தென்காசி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

நீலகிரி மாவட்டத்தில் இன்று அதி கனமழை பெய்யும் என வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. கோவையில் மிக கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. தேனி, திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, நாளையும் நீலகிரி, கோவைக்கு ஆரஞ்சு அலர்ட்டும், திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டத்திற்கு மஞ்சள் அலர்ட்டும் விடுத்துள்ளது.

வீட்டிலிருந்தே உணவு ஆர்டர் செய்வது போல் மது பானங்களையும் ஆர்டர் செய்யும் வசதியை அமல்படுத்த ஸ்விக்கி, ஜோமாட்டோ போன்ற நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. ஒடிஷா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இதற்கு அனுமதி உள்ள நிலையில் கர்நாடகா, ஹரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கேரளா ஆகிய மாநிலங்களில் அனுமதி பெற அந்நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன. இதுகுறித்து உங்களது கருத்து என்ன?

டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆலோசனை மேற்கொண்டுள்ளார். 5 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள அவர், தமிழக அரசியல் சூழல் குறித்து பிரதமருடன் ஆலோசித்ததாக கூறப்படுகிறது. கள்ளக்குறிச்சி விஷச்சாராய விவகாரம், ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து ஆலோசித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஏற்கெனவே, விஷச்சாராய விவகாரத்தில் சிபிஐ விசாணை கோரி தமிழக எதிர்க்கட்சிகள் ஆளுநரிடம் மனு அளித்திருந்தன.

சூரி, விஜய் சேதுபதி, வெற்றிமாறன், இளையராஜா கூட்டணியில் உருவாகி வரும் விடுதலை – 2 படத்தின் முதல் பார்வை நாளை (17.07.2024) நண்பகல் 11.30 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு வெளியான விடுதலை முதல் பாகம், காதல், த்ரில்லர் என்று கலவையாக அமைந்திருந்ததால் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் அதன் தொடர்ச்சியை இந்தாண்டு வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

நியாய விலைக் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் வழக்கும் திட்டத்தை அரசு நிறுத்தக் கூடாது என்று ராமதாஸ் வலியறுத்தியுள்ளார். ரேஷன் கடைகளில் உருந்து வழங்கப்படும் என்ற வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்றவில்லை என விமர்சித்த அவர், மின்கட்டணத்தை உயர்த்தி நடுத்தர மக்கள் மீது இடியை இறக்கியது போல இப்போது துவரை, பாமாயில் வழங்குவதையும் நிறுத்தி, ஏழைகளின் வயிற்றில் அடிக்கக் கூடாது எனக் காட்டமாக கூறியுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரை, கேரளாவில் வைத்து, தமிழக சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். ₹100 கோடி மதிப்புள்ள நில அபகரிப்பு புகாரில் சிக்கியுள்ள எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்க, கரூர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனால், கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, ஒரு மாதத்திற்கும் மேலாக அவர் தலைமறைவாகியிருந்த நிலையில், தற்போது போலீசார் வசம் சிக்கியுள்ளார்.

33ஆவது ஒலிம்பிக் போட்டிக்கு வீரர்களைவிட அதிகளவு ஆதரவு ஊழியர்களுடன் இந்திய டேபிள் டென்னிஸ் அணி பயணிக்கவிருப்பது பேசு பொருளாகியுள்ளது. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய அணி சார்பில் சரத் கமல், மனிகா பத்ரா உள்ளிட்ட 6 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அவர்களுக்கு துணையாக ஊழியர்கள், தனிப் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 9 பேர் பாரிஸ் செல்லவுள்ளனர். மற்ற பிரிவு வீரர்களுடன் இது போன்ற ஆதரவுக் குழு பயணிக்கவில்லை.
Sorry, no posts matched your criteria.