India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

பாஜகவின் தவறான கொள்கையால் ராணுவ வீரர்களும், அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். டோடாவில் வீரமரணம் அடைந்த தியாகிகளின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்த அவர், தொடர் பாதுகாப்பு குறைபாடுகளுக்கு அரசு முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனக் கூறியுள்ளார். அத்துடன், பயங்கரவாதிகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

விழுப்புரத்தில் 2 சிறுமிகளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 15 பேருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரபா, ரவிக்குமார், துரைராஜ் உள்ளிட்ட அந்த 15 பேருக்கும், தலா ₹ 37,000 அபராதமும் விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில், ஒரு சிறுமி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.

கர்நாடகாவில் அரசு வேலைவாய்ப்பில்
அம்மாநிலத்தைச் சேர்ந்த மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக கர்நாடக அமைச்சரவை அதிரடி முடிவு எடுத்துள்ளது. அதன் படி, நிர்வாக நிலை பணிகளில் 50% & மேலாண்மை அல்லாத பணிகளில் 75% பூர்வீக மக்களுக்கு வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. கர்நாடகாவில் பிறந்து, அங்கேயே 15 ஆண்டுகளாக வசிப்பவர்கள், கன்னடத்தில் எழுதவும் பேசவும் தெரிந்தவர்கள்தான் பூர்வீக மக்களாக கருதப்படுவர்.

அமெரிக்க துணை ஜனாதிபதி வேட்பாளராக குடியரசு கட்சியின் ஜேம்ஸ் டேவிட் வென்சி போட்டியிடுவார் என ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்காவில் நவம்பரில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இதில் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் ஜனாதிபதி டிரம்ப் போட்டியிடுகிறார். நேற்று முன்தினம் துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்த அவர், ஜேம்ஸ் டேவிட் வென்சியை துணை ஜனாதிபதி வேட்பாளராக தற்போது அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் 10 மாவட்ட ஆட்சியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். *ராணிப்பேட்டை – ஜெ.யூ.சந்திரகலா, *புதுக்கோட்டை – எம்.அருணா, *நீலகிரி- லட்சுமி பாவியா, *தஞ்சாவூர் – பி.பிரியங்கா, *நாகை – பி.ஆகாஷ், *அரியலூர் – பி.ரத்தினசாமி, *கடலூர்- சி.பி.ஆதித்யா, *குமரி – ஆர்.அழகுமீனா, *பெரம்பலூர்- கிரேஸ் லால் ரிந்தகி, *ராமநாதபுரம்-சிம்ரன்ஜீத் சிங் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் புதிய உள்துறை செயலாளராக தீரஜ் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். *மதுமதி – பள்ளிக் கல்வித்துறை செயலாளர், *ராதாகிருஷ்ணன் – உணவு பாதுகாப்புத்துறை செயலாளர், * சகாய மீனா- சிறப்பு அமலாக்கத்துறை செயலாளர், *அமுதா- வருவாய், பேரிடர் துறை செயலாளர், குமரகுருபரர் – சென்னை மாநகராட்சி ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

17 ஆண்டுகள் கழித்து டி20 தொடரில் கோப்பையை வென்ற இந்திய சாம்பியன்ஸை மும்பை MIG கிரிக்கெட் கிளப் கௌரவித்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ், சிவம் துபே, ஜெய்ஸ்வால் ஆகிய 4 பேருக்கு வாழ்நாள் உறுப்பினர் என்ற அங்கீகாரத்தை வழங்கி, அந்த கிளப் கௌரவித்துள்ளது. சச்சின், கமல் சாவ்லா உள்ளிட்டவர்கள் இந்த கிளப்பில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளனர்.

இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான மொஹரம் பண்டிகையை முன்னிட்டு நாளை தமிழகத்தில் பொது விடுமுறை அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வங்கிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமிய ஆண்டின் முதலாவது மாதமாக மொஹரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இஸ்லாமிய ஆண்டின் நான்கு புனித மாதங்களில் இதுவும் ஒன்றாகும்.

ரஷ்யாவுடன் இணைந்து சீனா கூட்டுப்போர் பயிற்சியை தொடங்கியுள்ளது. குவாங்டாங் மாகாணத்தில் நடைபெறும் இந்த கடற்படை பயிற்சி ஆசியப் பிராந்தியத்தில் அமைதி & ஸ்திரத்தன்மையை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என சீனா தரப்பில் கூறப்படுகிறது. எனினும், இந்தப் போர் பயிற்சிக்கு உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய நாடுகளின் கூட்டமைப்பான நேட்டோ அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, சென்னை காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா குறித்து தரக்குறைவாக பேசியதாக, அதிமுக தொண்டர்கள் ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த கே.சி. பழனிசாமி இந்த புகாரை கொடுத்துள்ளார். சில தினங்களுக்கு முன், ஜெயலலிதா நினைவிடம் குறித்து சீமான் தெரிவித்த கருத்து, அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது, நினைவுக்கூரத்தக்கது.
Sorry, no posts matched your criteria.