India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விஜய் டிவியின் நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமான சிவாங்கி தற்போது படங்களில் பாடுவதில் பிஸியாக உள்ளார். இதனிடையே தனது த்ரெட்ஸ் பக்கத்தில், ’சமூக வலைதளங்களை திறந்து பார்த்தால், யாராவது ஒருவருக்கு நிச்சயம், திருமணம், கர்ப்பம் என வருகிறது. ஒருவேளை நானும் அந்த கட்டத்திற்கு வந்து விட்டேனா?’ எனப் பதிவிட்டுள்ளார். இதனை தனக்கும் திருமணம் என்பதை சிவாங்கி மறைமுகமாக சொல்வதாக நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும்போது ஏப்ரல் மாதம் முழுவதும் சனி பகவான் உச்சபட்ச கோபத்தில் இருக்கிறார். இதனால் தனுசு, சிம்மம், கன்னி, துலாம் ராசியினர் சோதனை மேல் சோதனையை அனுபவிக்கப் போகின்றனர். குறிப்பாக பணம் கிடைப்பதில் பிரச்னை, கொடுத்த பணத்தை கேட்டால் தகராறு, வழக்குகளில் சாதகமற்ற சூழல், வீண் வம்பு, சண்டை, சச்சரவு, தொல்லை, சிக்கல் என பலகட்ட சோதனைகள் மேற்கண்ட ராசியினரை வாட்டி வதைக்கப் போகிறது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அப்ரூவராக மாறிய ராகவா மகுந்தாவின் தந்தைக்கு தெலுங்கு தேசம் கட்சி வாய்ப்பளித்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் ஓங்கோல் தொகுதியில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்ற ஸ்ரீனிவாசலு ரெட்டி, சமீபத்தில் தெலுங்கு தேசத்தில் இணைந்தார். தற்போது, இதே தொகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீனிவாசலு ரெட்டி அறிவிக்கப்பட்டுள்ளார்.
புகைப்பிடிக்கும் பழக்கத்தைவிட ஆபத்தானது ஹான்ஸ், கூல் லிப், குட்கா போன்றவற்றை உபயோகிக்கும் பழக்கம். இதற்கு அடிமையானவர்கள் அதனை பயன்படுத்தாமல் இருக்க முடியாது என்ற நிலைக்கு செல்லக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், இந்தப் பழக்கம் சம்பந்தப்பட்டவர்களை மட்டுமின்றி, அவர்களை சார்ந்தவர்களின் வாழ்க்கையையும் அழிக்கும் என்பதால் உடனடியாக அவற்றை கைவிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
லக்னோ அணிக்கு எதிராக அதிரடியாக ஆடிவரும் பஞ்சாப் கேப்டன் ஷிகர் தவான் 30 பந்துகளில் அரை சதம் அடித்துள்ளார். 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடித்து வாணவேடிக்கை காட்டியுள்ளார். இவரது அதிரடியால் பஞ்சாப் அணி 8 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 73 ரன்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் வெற்றிபெற 72 பந்துகளில் 127 ரன்கள் தேவை. பேரிஸ்டோ 23* ரன்கள் எடுத்துள்ளார்.
மனைவியை ‘பேய், காட்டேரி’ என்று திட்டுவது கொடுமையில் வராதென பாட்னா உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 1994இல் கார் வரதட்சணையாக கேட்டதால், கணவர், கணவரின் தந்தைக்கு எதிராக மனைவி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் நாளந்தா நீதிமன்றம், இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து பாட்னா தொடரப்பட்ட வழக்கின் விசாரணையில், பிரிந்த கணவன் தன்னை ‘பேய், காட்டேரி’ என திட்டுவதாக மனைவி முறையிட்டார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 100 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் – லக்னோ இடையேயான போட்டியில் LSG வீரர் பூரண் அடித்த 100ஆவது சிக்ஸராக பதிவானது. இதில் அதிகபட்சமாக ஹைதராபாத், மும்பை அணிகளுக்கு இடையேயான போட்டியில் மட்டுமே (SRH -18, MI -20) 38 சிக்ஸர்கள் அடிக்கப்பட்டது. அதிகபட்சமாக SRH வீரர் க்ளாசென் மட்டுமே 15 சிக்ஸர்கள் விளாசியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை குழு அமைக்கப்பட்டுள்ளது. வரும் ஏப்.19 முதல் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில், பாஜகவின் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவில், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, பியூஷ் கோயல், அர்ஜூன் முண்டா உள்ளிட்ட 27 பேர் உறுப்பினர்களாக இடம்பெற்றுள்ளனர்.
ரேசன் அட்டைதாரர்களுக்கு மாதம் 2 கிலோ கேழ்வரகு வழங்கும் திட்டம் தள்ளிப்போக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நீலகிரி போன்ற மலை மாவட்டங்களில் கேழ்வரகு வழங்கப்படுவது போல், தமிழகம் முழுவதும் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த அரசு முடிவு செய்திருந்தது. இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் இந்த திட்டத்தை விரிவுப்படுத்த ஜூன் மாதத்திற்கு மேல் ஆகலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் லக்னோ அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது. LSG அணியில் சிறப்பாக ஆடிய டி காக் 54, பூரண் 42, க்ருனால் பாண்டியா 43* ரன்கள் எடுத்தனர். இதையடுத்து பஞ்சாப் அணிக்கு 200 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் அணி சார்பில் சிறப்பாக பந்து வீசிய சாம் கரண் 3, அர்ஷ்தீப் சிங் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இன்று எந்த அணி வெற்றிபெறும்?
Sorry, no posts matched your criteria.