India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசு எப்படி செயல்பட கூடாது என்பதற்கு பாஜக ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது என முதல்வர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். சேலத்தில் பேசிய அவர், “திராவிட மாடல் ஆட்சி, தெற்கில் மட்டும் ஒலிக்கவில்லை வடக்கிலும் ஒலிக்கிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் 10 ஆண்டுகால பாஜக ஆட்சியால், பொதுமக்களின் தூக்கம் போய்விட்டது. மேலும், தேர்தல் பத்திர ஊழலால், பாஜகவினரின் தூக்கம் தொலைந்துள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
1-9ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வு அட்டவணையில் மீண்டும் மாற்றம்
திமுகவும், முதல்வர் ஸ்டாலினும் தான் தமிழ்நாட்டின் எதிரிகள்: அண்ணாமலை
அனைத்து அரசு பள்ளிகளுக்கும் ஏப்.1 முதல் ஸ்மார்ட் போர்டு வழங்கப்படவுள்ளன
வாயை திறந்தால் அண்ணாமலை பொய் மட்டுமே பேசுகிறார்: கனிமொழி
மோடியின் கண்ணீரை அவரது கண்களே நம்பாது: முதல்வர் ஸ்டாலின்
நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
மக்களவைத் தேர்தலில் தோற்று விடுவோமென்ற அச்சத்தில், பாஜக அரசு தன்னாட்சி அதிகாரமிக்க சி.பி.ஐ., வருமானவரித்துறை, அமலாக்கத்துறை போன்ற விசாரணை அமைப்புகள் மூலம் காங்கிரஸை பலவீனப்படுத்த முயற்சிப்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா குற்றம்சாட்டியுள்ளார். மேலும், அவர் ‘காங்கிரஸ் மீது வரி பயங்கரவாதத்தை தொடங்கியுள்ள வருமான வரித்துறை அதிகாரிகள், பாஜகவின் வரி ஏய்ப்பை கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்’ என்றார்.
தென்கிழக்கு மத்திய ரயில்வே 733 அப்ரண்டிஸ் பணியிடங்களுக்கு விண்ணப்பங்களை வரவேற்கிறது. இதற்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது அதற்கு இணையான ஐடிஐ படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். 15 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 12.
இணையதளம்: <
பாலிவுட்டில் ஆந்திராவை சேர்ந்த பார்வையற்ற தொழிலதிபர் ஸ்ரீகாந்த் பொல்லாவின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்படும் படத்திற்கு ‘ஸ்ரீ’ என பெயரிடப்பட்டிருந்தது. இயக்குனர் துஷார் ஹிராநந்தானி இயக்கத்தில் ராஜ்குமார் ராவ் நடிக்கும் இப்படத்தில் நடிகை ஜோதிகா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் மே 10ஆம் தேதி படம் வெளியாகவிருந்த நிலையில், தற்போது படத்தின் தலைப்பு ‘ஸ்ரீகாந்த்’ என மாற்றப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் கட்சி விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் தொகுதி தேமுதிக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் புழல் அருகே நடைபெற்றது. இதில் பங்கேற்க பூவை ஜெகன் மூர்த்தியும் அழைக்கப்பட்ட நிலையில் அவர் பங்கேற்கவில்லை. அதிமுக கூட்டணியில் இருந்து விலகியதே இதற்கு காரணம் என அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. முன்னதாக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட அந்தக் கட்சி விரும்பியது.
பஞ்சாபிற்கு எதிரான 11ஆவது ஐபிஎல் போட்டியில், 21 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி பெற்றது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணி, அதிரடியான தொடக்கத்தை கொடுத்தாலும் 100 ரன்களுக்கு பிறகு விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது. இதனால் 20 ஓவர்கள் முடிவில் 178/5 ரன்கள் மட்டுமே எடுத்து, பஞ்சாப் அணி தோல்வி அடைந்தது. மயங்க் யாதவ்-3, மோசின் கான்-2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
கோடைக்காலத்தில் சர்பத், ஜூஸ் போன்றவற்றில் ஊற வைத்த பாதாம் பிசினை சேர்த்துக் குடிப்பதால் உடல் குளிர்ச்சியடையும். வடமாநிலங்களில் பிரசவமான பெண்களுக்கு கோந்து லட்டு கொடுப்பது வழக்கம். இது பெண்களின் உடல் வலிமைக்கும், தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை எந்த வயதினரும் எடுத்து கொள்ளலாம். ஆனால் அடிக்கடி சளி, வீஸிங் பிரச்னைகளால் அவதிப்படும் குழந்தைகளுக்கு பாதாம் பிசினை கொடுப்பதை தவிர்க்கலாம்.
பிரதமர் மோடியின் முழு அன்பை பெற்றவர் பாரிவேந்தர் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பெரம்பூரில் பாஜக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் பாரிவேந்தரை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், ‘வேலை செய்வதற்காக ஒரு தனி அரசாங்கத்தை பாரிவேந்தர் நடத்தி வருகிறார்’ என்றார். கடந்த முறை திமுக கூட்டணி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் பாரிவேந்தர் இதே தொகுதியில் போட்டியிட்டு வென்றிருந்தார்.
Sorry, no posts matched your criteria.