India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்தியில் I.N.D.I.A கூட்டணி ஆட்சி அமைத்தால், பள்ளி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி உறுதி அளித்துள்ளார். கடலூரில் பரப்புரை மேற்கொண்ட அவர், “பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வரும்போது, லேப்டாப் கொடுக்காமல் விடுவோமா. நிச்சயமாக வழங்கப்படும். மோடி ஆட்சி தமிழகத்துக்கு நிதி வழங்குவதில் பாரபட்சம் காட்டுகிறது. மக்களை இனியும் ஏமாற்ற முடியாது” எனத் தெரிவித்துள்ளார்.
திருமணம் குறித்து நடிகர் விஜய் தேவரகொண்டா ஓப்பனாக கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எனக்கு விரைவில் திருமணம் நடக்கும். அது நிச்சயம் காதல் திருமணம் தான். அதுவும், எனது பெற்றோர் சம்மதத்துடன் தான் நடக்கும்” எனக் கூறியுள்ளார். நடிகை ராஷ்மிகாவுடன் அடிக்கடி காதல் சர்ச்சையில் சிக்கும் அவர், விரைவில் தங்கள் காதலை ரசிகர்களுக்கு தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மியாமி மாஸ்டர்ஸ் ஓபன் டென்னிஸ் தொடரை, இந்திய ஜோடி அபாரமாக கைப்பற்றியுள்ளது. ஆடவருக்கான இரட்டையர் பிரிவு இறுதிப் போட்டியில், குரோஷியாவின் டோடிக் மற்றும் அமெரிக்காவின் க்ராஜிசெக் ஜோடி – இந்தியாவின் போபண்ணா மற்றும் ஆஸி.,யின் மேத்யூ எப்டன் ஜோடியை எதிர்கொண்டது. விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், 6-7, 6-3, 10-6 என்ற செட் கணக்கில் போபண்ணா ஜோடி த்ரில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
குறள் பால்: அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: அடக்கமுடைமை
குறள் எண்: 121
குறள்: அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்.
பொருள்: அடக்கம் என்பது ஒருவருக்கு அழியாத புகழைக் கொடுக்கும். ஆனால், அடங்காமல் வாழ்வையே இருளாக்கி விடும்.
திருமணத்தை மீறிய உறவில் ஈடுபடும் பெண்கள், பொதுவெளியில் நிற்கவைத்து கல்லால் அடித்துக் கொல்லப்படுவர் என தாலிபன் தலைவர் முல்லா ஹிபத்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து பேசிய அவர், “விரைவில் நாங்கள் இதை நடைமுறைப்படுத்தப் போகிறோம். பொதுமக்கள் முன்னிலையில் இந்த தண்டனை நிறைவேற்றப்படும்” எனக் கூறியுள்ளார். இது சமூக ஆர்வலர்களிடையேவும் உலக நாடுகள் இடையேவும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் காங்கிரஸ், தமிழகத்தில் திமுக ஆட்சியில் இருந்தால் காவிரியில் நீர் வர வாய்ப்பில்லை என அண்ணாமலை விமர்சித்துள்ளார். தஞ்சாவூரில் பிரசாரத்தின் போது பேசிய அவர், “திமுகவுக்கு வாக்களிப்பது பாவத்தை செய்வதற்கு சமம். பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. காவிரி நீரைப் பெற்றுத் தருவோம் என நாடகம் போட்டு மக்களை ஏமாற்றுவதே திமுகவின் செயல்” எனக் குற்றம்சாட்டினார்.
அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போது வரை இல்லை என நடிகர் விஜய் ஆண்டனி ஓப்பனாக கூறியுள்ளார். ‘ரோமியோ’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பேசிய அவர், “அனைவரும் சேர்ந்து அரசியலுக்கு அழைத்தால் கண்டிப்பாக அரசியலுக்கு வருவேன். நோட்டாவிற்கு மட்டும் வாக்களிக்கக் கூடாது. சிறந்தது என்று ஒன்று இருக்கும். அதற்கு வாக்களிக்க வேண்டும். வருகிற மக்களவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 31) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள். பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 11 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 நபர்களின் புகைப்படங்கள் மட்டும் இதில் இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
பஞ்சாபிற்கு எதிரான ஐபிஎல் போட்டியில், லக்னோ வீரர் மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றுள்ளார். அபாரமாக பந்துவீசிய அவர், 4 ஓவர்களில் 27 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 21 வயதான மயங்க் யாதவ், மணிக்கு 150+ கி.மீ வேகத்தில் பந்துவீசி அசத்தியுள்ளார். ஏலத்தில் வெறும் ரூ.20 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்ட இவர், முதல் ஐபிஎல் போட்டியிலேயே ஆட்டநாயகன் விருதைத் தட்டிச் சென்றுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் தமிழக வேட்பாளர்களின் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டது. தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், 950 பேர் போட்டியிடுகின்றனர். இதில், 874 பேர் ஆண்கள், 76 பேர் பெண்கள் ஆகும். அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 8 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ளதால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.