News July 18, 2024

காவிரி பிரச்னை விரைவில் சீரடையும்: டி.கே.சிவக்குமார்

image

தமிழகத்துடனான காவிரி பிரச்னை விரைவில் சீரடையும் என்று டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார். கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதாக தெரிவித்த அவர், இதனால் தமிழகத்துக்கு தினமும் 1 டி.எம்.சி.க்கு அதிகமாகவே நீர் திறக்கப்பட்டு வருவதாக கூறியுள்ளார். சில நாட்களுக்கு முன் தமிழகத்துக்கு 8 ஆயிரம் கனஅடி மட்டுமே நீர் திறக்கப்படும் என அவர் கூறியிருந்தார்.

News July 18, 2024

துப்புரவு பணியாளர்கள் அவமதிப்பு? ரோஜா விளக்கம்

image

துப்புரவு தொழிலாளரை அவமதித்ததாக எழுந்த சர்ச்சைக்கு நடிகை ரோஜா விளக்கமளித்துள்ளார். அதில், “திருச்செந்தூர் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும்போது நிறைய பேர் செல்பி எடுத்தனர். துப்புரவு தொழிலாளர்கள் என்ன கண்டதும் வேகமாக ஓடி வந்தார்கள். கீழே விழுந்து விடப்போகிறார்கள் என பொறுமையாக வர சொன்னேன். இதை சிலர் தவறாக திரித்து பேசியது வருத்தமாக உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

News July 18, 2024

பாஜகவுக்கு பாடம் நடத்த வேண்டாம்: அண்ணாமலை

image

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, பாஜகவுக்கு பாடம் நடத்த வேண்டாம் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார். அரசியல் பேச வேண்டும் என்றால் சந்துரு அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்து கொள்ளலாம் என்று கூறியுள்ள அவர், சுயலாபத்துக்காக, திமுக அரசு அமைக்கும் குழுக்களில் அமர்ந்து கொண்டு பாஜகவை விமர்சிக்க கூடாது என்றார். அறநெறி குறித்து பாஜகவுக்கு என்ன தெரியும் என்று நீதிபதி சந்துரு பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

கோலி, ரோஹித்தை புகழ்ந்த கபில் தேவ்

image

கோலி, ரோஹித் இடத்தை வேறு ஒருவரை வைத்து நிரப்ப முடியாது என கபில் தேவ் கூறியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஓய்வு பெற்றது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளதாக தெரிவித்த அவர், சச்சின் மற்றும் தோனியை போன்று இருவரின் இடத்தையும் யாராலும் நிரப்ப முடியாது என்றார். டி20 உலகக் கோப்பைக்கு பிறகு கோலி மற்றும் ரோஹித் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

தனியார் நிறுவன பணிகளில் இடஒதுக்கீடு: அன்புமணி

image

தனியார் நிறுவன வேலைவாய்ப்புகளை தமிழர்களுக்கு மட்டுமே வழங்க சட்டம் இயற்ற வேண்டும் என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களில் மாதம் 40,000 வரை ஊதியம் கொண்ட பணிகளில் 80% விழுக்காட்டை தமிழக இளைஞர்களுக்கு வழங்க சட்டமியற்ற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். கர்நாடகாவில் இதே போன்று சட்டமியற்றப்பட்ட நிலையில், அது தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

தீவிரவாதம் இல்லாத பகுதியே இல்லை: உமர் அப்துல்லா

image

ஜம்முவில் தீவிரவாதம் குறைந்துள்ளதாக கூறுவது முற்றிலும் தவறானது என அம்மாநில முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். ஜம்முவில் கடந்த ஒரு வருடமாக தீவிரவாத தாக்குதல் அதிகரித்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பாஜக அரசு இங்கு நடைபெறும் கொலைகளை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று விமர்சித்துள்ளார். அம்மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

இன்றைய நல்ல நேரம்

image

ஜூலை – 18 | ஆனி – ஆடி 2
▶கிழமை: வியாழன்
▶நல்ல நேரம்: 10:45 AM – 11:15 AM,
▶கெளரி நேரம்: 12:15 AM – 01:45 AM, 06:30 PM – 07:30 PM
▶ராகு காலம்: 01:30 PM – 03:30 PM
▶எமகண்டம்: 06:00 AM – 07:30 AM
▶குளிகை: 09:00 AM – 10:30 AM
▶சூலம்: தெற்கு
▶பரிகாரம்: தைலம் ▶திதி : அசுபதி

News July 18, 2024

ZIM எதிரான டெஸ்ட்: அயர்லாந்து அணி அறிவிப்பு

image

ஜிம்பாப்வேவுக்கு எதிரான ஒரே ஒரு போட்டி கொண்ட டெஸ்ட் தொடருக்கான அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு ஆண்ட்ரூ பால்பிர்னி கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் பால் ஸ்டிர்லிங், மார்க் அடேர், கர்டிஸ் கேம்பர், பேரி மெக்கார்த்தி, ஹாரி டெக்டர், லோர்கன் டக்கர் போன்ற சீனியர் வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த போட்டி வரும் 25ஆம் தேதி முதல் 29ஆம் தேதி வரை பெல்பாஸ்டில் நடைபெறுகிறது.

News July 18, 2024

நடப்பதை யார் தடுக்க முடியும்? போலே பாபா

image

அனைவரும் ஒரு நாள் இறந்துதான் ஆக வேண்டும் என ஹத்ராஸ் விபத்தை குறிப்பிட்டு போலே பாபா தெரிவித்துள்ளார். இந்த இறப்பு தனக்கு மிகுந்த வருத்தத்தை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், நடப்பதை யாராலும் தடுக்க முடியாது என்றார். இந்த விபத்தில் 121 பேர் பலியான நிலையில், இதுவரை 10க்கும் மேற்பட்ட நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால், போலே பாபா பெயர் FIR இல் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

News July 18, 2024

தலித் தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை: அத்வாலே

image

தமிழகத்தில் தலித் கொலை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் இல்லத்திற்கு சென்று ஆறுதல் தெரிவித்த அவர், தமிழகத்தில் தலித் தலைவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். ஆம்ஸ்ட்ராங் வழக்கில் சிபிஐ விசாரணை வேண்டும் என்று கூறிய அவர், திருமாவளவன், ஜான் பாண்டியன், கிருஷ்ணசாமியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றார்.

error: Content is protected !!