India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
* இறைச்சியை வேக வைக்கும்போது சிறிது பாக்கு சேர்த்து வேக வைத்தால் சீக்கிரம் வெந்து விடும். *புளிக்குழம்பு வைக்கும் போது கடைசியில் மிளகு, சீரகத்தை அரைத்து சேர்த்தால் சுவையாக இருக்கும். *சீடை செய்யும்போது அதை ஊசியால் குத்திய பிறகு எண்ணெய்யில் போட்டால் வெடிக்காது. *வறுத்த வெந்தயத்தை சாம்பாரில் போட்டால் சாம்பார் சுவையாகவும், வாசனையாகவும் இருக்கும்.
மக்களவைத் தேர்தலுக்கான 4ஆம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ளது. இதில், உ.பி. கன்னோஜ் – சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், உ.பி. கேரி – பாஜக சார்பில் அஜய் மிஸ்ரா, மே.வங்கத்தின் கிருஷ்ணாநகர் – TMC சார்பில் மஹுவா மொய்த்ரா, மே.வங்கத்தின் பஹரம்பூர் – காங்., சார்பில் ஆதிர் ரஞ்சன், ஹைதராபாத் – ஓவைசி, ஆந்திராவின் கடப்பா – காங். சார்பில் ஒய்.எஸ்.ஷர்மிளா உள்ளிட்ட நட்சத்திர வேட்பாளர்கள் களம் காண்கின்றனர்.
கவினின் ‘ஸ்டார்’ படம் மீது கலவையான விமர்சனங்கள் இருந்தாலும், திரையரங்குகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. தற்போது திரைக்கு வந்துள்ள மற்ற படங்களுடன் ஒப்பிடுகையில், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்நிலையில், இப்படத்திற்கு கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 180க்கும் அதிகமான காட்சிகள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
CSK-RR இடையேயான ஐபிஎல் போட்டி இன்று மதியம் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்காக, CSK வீரர்கள் இன்று விமானம் மூலம் சென்னை வந்தடைந்தனர். விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த தோனியை, ரசிகர்கள் “தல..தல…” என்று ஆரவாரம் செய்து உற்சாகமாக வரவேற்றனர். பின்னர், ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தபடி தோனி பேருந்தில் ஏறிச் சென்றார். இன்றைய போட்டியில் சென்னை வெற்றி பெறுமா?
தேர்தலுக்கு பின் செங்கோட்டையன் அல்லது வேலுமணி தலைமையில் அதிமுக இயங்கும் என செய்திகள் வருவதாகக் கூறி அமைச்சர் ரகுபதி புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். அதிமுகவில் பிளவை உண்டாக்கும் வேலையை திமுக செய்யாது என்று கூறிய அவர், பாஜக தான் அதைச் செய்யும் எனவும் சாடினார். ஏற்கெனவே, செங்கோட்டையன், வேலுமணி பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
RCB-DC இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற உள்ளது. இது விராட் கோலியின் 250ஆவது ஐபிஎல் போட்டி ஆகும். இதுவரை எந்தவொரு அணிக்கும் மாறாமல், ஒரே அணிக்காக 250 போட்டிகளில் விளையாடிய முதல் வீரர் என்ற பெருமையை இன்று அடையப் போகிறார் விராட் கோலி. நடப்பு ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் அவர், இன்று சதம் அடிப்பாரா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.
அன்னையர் தினத்தை முன்னிட்டு நடிகரும், தவெக தலைவருமான விஜய் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரின் வாழ்த்துக் குறிப்பில், “அன்பின் முழு உருவமாய் திகழ்ந்து, குழந்தைகளுக்காகவும், குடும்பத்திற்காகவும் தம் வாழ்நாளையே தியாகம் செய்யும் தாய்மார்களுக்கு என் அன்னையர் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னையரை இன்று மட்டுமல்ல, எந்நாளும் போற்றி வணங்குவோம்” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.
புகழின் உச்சத்தில் இருந்தபோது ODI, T20 போட்டிகள் விளையாட மாட்டேன் என்று அறிவித்தவரை பார்த்திருக்கிறீர்களா? அவர்தான் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் (ஜிம்மி) ஆண்டர்சன். டெஸ்ட் கிரிக்கெட்டின் மீது கொண்டிருந்த காதல் காரணமாக 2015ஆம் ஆண்டுமுதல் அவர் ODI விளையாடவில்லை. கிரிக்கெட்டின் அழகான அம்சமான ஸ்விங் பவுலிங்கை ஜிம்மி போல நேர்த்தியாக கையாண்டவர்கள் மிகக்குறைவு.
தமிழகத்தில் கடந்த 3 ஆண்டுகளில் ₹3,198 கோடியில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகளை திறந்து மாநில அரசு புதிய சாதனை படைத்துள்ளது. திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை 37,720 அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில், 92 திட்டப் பகுதிகளில் 28,824 அடுக்குமாடி குடியிருப்புகளை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மக்கள் பயன்பாட்டிற்கு வழங்கியதாகக் கூறப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைதாகி, இடைக்கால ஜாமினில் சிறையில் இருந்து வெளியே வந்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், தீவிர பிரசாரத்தில் ஈடுபடவுள்ளார். அதற்கு முன்னதாக, அவர் ஆம் ஆத்மி எல்எல்ஏக்கள் உடன் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். காலை 11 மணியளவில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பிரசாரம் குறித்து பல்வேறு வியூகம் வகுக்க அக்கட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.