India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2ஜி வழக்கில், கனிமொழி, ஆ.ராசா உள்ளிட்ட 14 பேர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகோரும் மனு மீது டெல்லி உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கவுள்ளது. 14 பேரையும் விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017ல் உத்தரவிட்டது. இதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதிகோரி சிபிஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுக்கள் மீது இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தமிழகத்தில் பாஜக நேரடியாக 19 தொகுதிகளில் களம் காண்கிறது. ஐஜேகே, புதிய நீதிக் கட்சி, தமமுக, இந்திய மக்கள் முன்னேற்றக் கழகம், அதிமுக உரிமை மீட்புக்குழு ஆகிய கட்சிகள் தாமரை சின்னத்தில் தலா ஒரு தொகுதியில் போட்டியிடவுள்ளன. பாமக – 10, தமாகா – 3, அமமுக – 2 என தொகுதிகள் பிரித்தளிக்கப்பட்டுள்ளன. இந்த மூன்று கட்சிகள் அவரவர் சொந்த சின்னத்தில் தேர்தலை சந்திக்கவுள்ளன.
உலகின் முன்னணி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமை பல கோடி பேர் பயன்படுத்தி வருகின்றனர். அதன் சேவை தற்போது பல்வேறு நாடுகளில் பாதிக்கப்பட்டுள்ளது. இன்ஸ்டாகிராமை பயன்படுத்துவோர் பலருக்கு அதன் கணக்கு தானாகவே லாக் அவுட் ஆகி வருகின்றன. இதுகுறித்து எக்ஸ் தளத்தில் இன்ஸ்டாகிராம் பயன்பாட்டாளர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். உங்களது கணக்கு வேலை செய்கிறதா?
விஜயகாந்தின் மகன் சண்முகப்பாண்டியனை வைத்து இயக்குநர் பொன்ராம் புதிய படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்படத்திற்கான முதல்கட்ட பேச்சுவார்த்தை நடக்கும் நிலையில், விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது. வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் உள்ளிட்ட வெற்றி படங்களை தந்த பொன்ராம், சிவகார்த்திகேயனின் வளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகித்தார் என்றே கூறலாம்.
தமிழகத்தின் நான்கு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நேற்று இரவு முதல் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில், காலை 10 மணி வரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரத்யங்கரா தேவியை, ‘அதிஸௌம்ய அதி ரௌத்ராயை’ என ஞானநூல்கள் கூறுகின்றன. அதன் பொருள் ‘மென்மையானவள் அதேநேரம் மிகவும் உக்கிரமானவள்’ என்பதே ஆகும். அத்தகைய உக்கிர தெய்வங்களான பிரத்யங்கரா, துர்க்கை ஆகியோரை சிலை வடிவமாக (6 இன்ச் அளவில்) வீட்டில் வைத்து வணங்குவதில் தவறேதும் இல்லை. சாக்த விதிப்படி, தினமும் தீபம் ஏற்றி, மலர் சூட்டி, நிவேதனம் செய்து வழிபட்டால் தீயவை வீட்டை விட்டு விலகும் என்பது ஐதீகம்.
தமிழகத்தில் பாஜக தனித்துக் களம் காண இருப்பதால் டெல்லி தலைமை உற்சாகத்தில் இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனால் மீண்டும் ஒருமுறை தமிழகத்தில் பிரச்சாரம் செய்ய பிரதமர் மோடி முடிவு செய்திருக்கிறார். தேர்தலுக்கு முன் தமிழகத்திற்கு வருகை தர இருக்கும் அவர், நீலகிரி, பெரம்பலூர், கோவை, வேலூர் ஆகிய தொகுதிகளில் பொதுக் கூட்டங்களில் பங்கேற்க இருக்கிறார். பாஜகவுக்கு இது பலனளிக்குமா?
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள ஜி.கே.வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு, சைக்கிள் சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது. முன்னதாக, பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவுக்கும் நேற்றைய தினம் குக்கர் சின்னம் ஒதுக்கப்பட்டது. பாஜக கூட்டணியில் உள்ள 2 கட்சிகளுக்கு கேட்ட சின்னம் கிடைத்துள்ளது. நாதக நீண்ட நாட்களாக கரும்பு விவசாயி சின்னத்திற்கு போராடி வருவது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற உத்தரவையடுத்து ஆளுநர் ஆர்.என்.ரவி, பொன்முடிக்கு இன்று அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இருக்கிறார். பொன்முடியின் குற்ற வழக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டபோதிலும் அவரை அமைச்சராக்க முடியாது என்று ஆளுநர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து “அவருக்கு சட்டம் தெரியுமா தெரியாதா” என்று உச்சநீதிமன்றம் கடும் கண்டனங்களை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான CSK அணியும், டுப்ளெசிஸ் தலைமையிலான RCB அணியும் இன்று சென்னையில் களம் காண்கின்றன. எப்போதும் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும் இந்த இரு அணிகளுக்கு இடையேயான போட்டி, இந்த முறையும் அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Sorry, no posts matched your criteria.