News July 18, 2024

தவெக நிர்வாகிகள் மீது புகார்

image

புதுச்சேரியில் தவெக சார்பில் பேனர்கள் வைத்த நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தன்னார்வலர்கள் போலீஸில் புகார் அளித்துள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் பேனர் வைக்கக்கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. ஆனால், இன்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்தநாளையொட்டி அவருக்கு ஆங்காங்கே வாழ்த்து பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. அது தொடர்பாக நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டுள்ளது.

News July 18, 2024

நடிகை ஜான்வி கபூர் மருத்துவமனையில் அனுமதி

image

பிரபல பாலிவுட் நடிகையும் ஸ்ரீதேவியின் மகளுமான ஜான்வி கபூர் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன் சென்னை வந்திருந்த அவர், மும்பைக்கு திரும்பிச் செல்லும்போது விமான நிலையத்தில் உணவருந்தியதாக தெரிகிறது. அதில் ஒவ்வாமை ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாளை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

News July 18, 2024

ஆயுட்காலத்தை அதிகரிக்கும் மருந்து கண்டுபிடிப்பு

image

ஆய்வக விலங்குகளின் ஆயுட்காலத்தை சுமார் 25% அதிகரிக்கும் மருந்தை இங்கிலாந்து விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மனிதர்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் பயன்படுத்த முடியும் என நம்பப்படுகிறது. இந்த மருந்து செலுத்தப்பட்ட எலிகள் ஆரோக்கியமாகவும், வலிமையாகவும், புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறைவாக கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த மருந்து தற்போது மனிதர்களிடம் பரிசோதிக்கப்பட்டு வருகிறது.

News July 18, 2024

சங்கராச்சாரியாரை வம்புக்கு இழுத்த கங்கனா

image

மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு துரோகம் நடந்துள்ளதாகவும், வஞ்சகம் செய்பவர் இந்துவாக இருக்க முடியாது எனவும் சங்கராச்சாரியார் பேட்டியளித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக எம்.பி கங்கனா ரனாவத், கட்சியின் கூட்டணியில் ஒப்பந்தங்கள், பிளவுகள் இருப்பது மிகவும் சாதாரணமானது எனவும், அரசியல்வாதி அரசியல் செய்யாமல் பானிப்பூரியா விற்பார்கள்? என கிண்டல் செய்துள்ளார்.

News July 18, 2024

EMI மூலம் செல்ஃபோன் வாங்குவோர் கவனத்திற்கு

image

EMI மூலம் மொபைல் வாங்குவோருக்கு நிபுணர்கள் தரும் சில டிப்ஸ்
*வட்டி விகிதம், ப்ராசசிங் கட்டணம் ஆகியவற்றை தெளிவாக தெரிந்துகொள்ள வேண்டும்
*கடன் வழங்கும் நிறுவனத்தின் பின்புலத்தை ஆராய வேண்டும்.
*பட்ஜெட்டுக்கு மீறி செல்ஃபோன் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
*கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்முன், ஒருமுறை நன்கு படித்து பார்க்க வேண்டும். *மாதாந்திர EMIஐ சரியாக செலுத்தும் அளவுக்கு வருமானம் இருக்க வேண்டும்.

News July 18, 2024

காதில் பேண்டேஜ் அணிந்து வந்த தொண்டர்கள்

image

அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் மீது கடந்தவாரம் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் அவரது வலதுபக்க காது காயமடைந்தது. இதனையடுத்து அவர் பேண்டேஜ் அணிந்து பொதுக்கூட்டங்களில் தோன்றினார். இதற்கு ஆதரவளிக்கும் விதமாக குடியரசுக் கட்சி தொண்டர்களும் காதில் பேண்டேஜ் அணிந்துகொண்டு பிரசாரக் கூட்டங்களுக்கு வருகின்றனர். இதனால் காதில் பேண்டேஜ் அணிவது தற்போது அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

News July 18, 2024

உ.பி. ரயில் விபத்தில் 4 பேர் பலி

image

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த ரயில் விபத்தில் 4 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோண்டா மாவட்டத்தில் உள்ள மோதிகஞ்ச் ஜிலாகி என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்த சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில், 4 ஏ.சி. பெட்டிகள் உள்பட 12 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் 4 பயணிகள் பலியான நிலையில், காயமடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News July 18, 2024

கல்வி நிறுவனங்களில் பீட்சா, பர்கர் விற்க தடை?

image

உயர்கல்வி நிறுவனங்களில் உடல் நலனுக்கு ஆரோக்கியமற்ற உணவுப் பொருள்களை விற்பனை செய்ய தடை விதிக்க UGC அறிவுறுத்தியுள்ளது. அதன் சுற்றறிக்கையில், இந்தியாவில் நான்கில் ஒருவர் உடல் பருமன், சா்க்கரை நோய்க்கு முந்தைய நிலையில் இருப்பதாக ICMR எச்சரித்துள்ளது. எனவே, மாணவர்களின் நலனுக்காக பீட்சா, பர்கர், சமோசா உள்ளிட்ட உடல்பருமனை அதிகரிக்கும் உணவு வகைகளை விற்க தடை விதிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 18, 2024

உலகின் மிகப்பெரிய நாடு, தீவு எது?

image

உலகில் ஆசியா, ஆப்பிரிக்கா, வடஅமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா என மொத்தம் 7 கண்டங்கள் உள்ளன. இதில் ஆசிய கண்டமே மிகப்பெரிய கண்டமாக கருதப்படுகிறது. ஆஸ்திரேலிய கண்டத்தை விட ஆசிய கண்டம் 5 மடங்கு பெரியது ஆகும். 7 கண்டங்களில் மொத்தம் 195 நாடுகள் உள்ளன. இதில் ரஷ்யாவே உலகின் மிகப்பெரிய நாடாகவும், க்ரீன்லாந்தே உலகின் மிகப்பெரிய தீவாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

News July 18, 2024

செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி

image

அமலாக்கத்துறை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய செந்தில் பாலாஜியின் மனுவை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தில், கைது செய்யப்பட்ட அவர் தற்போது புழல் சிறையில் உள்ளார். இந்நிலையில், ED வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி அல்லி, ஜூலை 22ஆம் தேதி செந்தில் பாலாஜியை நேரில் ஆஜர்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!