India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் நடைபெற்ற சவுண்ட் ரன்னிங் டிராக் ஃபெஸ்ட் சர்வதேச தடகளப் போட்டியில், இந்திய வீராங்கனை தீக்ஷா புதிய சாதனை படைத்துள்ளார். மகளிருக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயப் போட்டியில், 4:04.78 வினாடிகளில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றார். இதனால், 2021இல் நடந்த தேசிய சாம்பியன்ஷிப் தடகளப் போட்டியில் 4:05.39 வினாடிகளில் ஓடிய ஹர்மிலன் பெயின்ஸின் முந்தைய தேசிய சாதனையை தீக்ஷா முறியடித்துள்ளார்.
‘ரோமியோ’ படம் பார்த்த ரசிகர் ஓருவர், நடிகர் விஜய் ஆண்டனியிடம் மன்னிப்பு கேட்டுள்ள சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது. X பக்கத்தில் பதிவிட்ட அவர், இனிமேல் ஆன்லைனில் பணம் வாங்கிக் கொண்டு அல்லது படங்களை பாரபட்சமாக விமர்சிப்பவர்களின் கருத்துக்களைக் கேட்க மாட்டேன் என்றும், ட்ரெய்லரும் முன்னோட்டமும் தனக்குப் பிடித்திருந்தால் மட்டுமே தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா (92) உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. 1999 முதல் 2004 வரை கர்நாடக முதல்வராக பதவி வகித்த இவர், மத்திய வெளியுறவு அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் இருந்துள்ளார். காங்கிரஸ் உடனான தனது 50 ஆண்டுகால தொடர்பை முறித்துக் கொண்டு, 2017ல் பாஜகவில் இணைந்த அவர், தற்போது தீவிர அரசியலில் இருந்து விலகி இருக்கிறார்.
இந்தியாவில் மின் நுகர்வு தொடர்ந்து புதிய உச்சத்தை எட்டி வருகிறது. மின் தேவையைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனிடையே, இந்த ஆண்டிற்கான கோடை காலத்தில் உச்சபட்ச மின் தேவை 260 ஜிகா வாட்டாக இருக்கும் என மின்துறை அமைச்சகம் கணித்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் உச்சபட்ச மின் தேவை 224 ஜிகா வாட்டாக இருந்த நிலையில், இம்மாதம் 235 ஜிகாவாட்டாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
சென்னை அசோக் நகரில் சாலையில் தூங்கியவர்கள் மீது காரை ஏற்றிய வட இந்தியப் பெண் ஷில்பா மது போதையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஒடுக்கமான முட்டு சந்துக்குள் காரை ஓட்டி வந்த அவர், கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதாக வாக்குமூலம் அளித்திருந்தார். பின்னர், அவருக்கு போதைப் பொருள் பரிசோதனை செய்யப்பட்டதில், அவர் மது அருந்தியிருந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விதி மீறலில் ஈடுபட்டதாக KKR வீரர் ரமன்தீப் சிங்கிற்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஐபிஎல் நடத்தை விதி 2.20இன் கீழ் ரமன்தீப் சிங் லெவல் 1 குற்றத்தைச் செய்துள்ளார். குற்றத்தை ஒப்புக்கொண்ட அவருக்கு, போட்டி சம்பளத்தில் இருந்து 20% அபராதம் செலுத்தும்படி நடுவர் உத்தரவிட்டார். இது KKR அணிக்கு விதிக்கப்படும் 2ஆவது அபராதம் ஆகும்.
சூரியப் புயல் பூமியைத் தாக்கும்போது காந்தவிசையின் காரணமாக அவை வட மற்றும் தென் துருவங்களை நோக்கி பாயும். முடிவில், அந்த இரண்டு துருவங்களிலும் வண்ணமயமான காட்சிகள் தோன்றும். அப்படியான ஒரு அதிசய நிகழ்வுதான் மூன்று நாள்களாக நிகழ்ந்து வருகிறது. 10ஆம் தேதி ஐரோப்பிய நாடுகளில் தெரிந்த இந்த ஆரோரா என்னும் வண்ண வானம், நேற்று இரவு நியூசிலாந்து நாட்டில் தென்பட்டது.
ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழை, வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஆக அதிகரித்துள்ளது. காபூல், பாஹ்லான் உள்ளிட்ட மாகாணங்களில் பெய்த கனமழையால் அங்கு கடும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால், நேற்று ஒரே நாளில் 200 பேர் உயிரிழந்த நிலையில், இன்று உயிரிழப்பு அதிகரித்துள்ளது. தொடர்ந்து, மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மகேந்திர சிங் தோனி ஓய்வை அறிவிக்காமல் ஐபிஎல் தொடர்களில் விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அதேநேரம், நடப்பு தொடரிலேயே அவருக்கு காலில் காயம் ஏற்பட்டு ஓடமுடியாத நிலை உள்ளது. கடந்த ஆண்டு, அவரிடம் ஓய்வு குறித்து கேட்கையில், “ரசிகர்களை குஷிப்படுத்த விளையாடுவேன்” என்று கூறினார். இந்த ஆண்டு அவர் என்ன சொல்வார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் இருக்கிறது.
Sorry, no posts matched your criteria.