News July 19, 2024

இரவு 7 மணி வரை மழை பெய்யும் மாவட்டங்கள்

image

தமிழகத்தில் இரவு 7 மணி வரை 27 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, நெல்லை, குமரி உள்ளிட்ட மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழையும், ஈரோடு, சேலம், நாமக்கல், செங்கல்பட்டு, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்யும் என தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், வேலூரில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

News July 19, 2024

மைக்ரோசாஃப்ட் முடங்கியதால் பங்குச்சந்தைகளிலும் பாதிப்பு

image

உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியதால் இந்திய பங்குச்சந்தைகளிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. 5 பைசா, ஏஞ்சல் ஒன் மாதிரியான ஆன்லைன் ப்ரோக்கர் சேவைகளிலும், மோதிலால் ஆஸ்வால் AMC சேவைகளிலும் பாதிப்பு இருந்தது. ஆனால், NSE, BSE மாதிரியான exchange சேவைகளில் பாதிப்பு ஏற்படாததால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

News July 19, 2024

பல கோடி ரூபாய் முடங்கும் அபாயம்

image

மைக்ரோசாஃப்ட் நிறுவன சாஃப்ட்வேர்களில் ஏற்பட்டிருக்கும் கோளாறு காரணமாக உலகம் முழுவதும் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல நாடுகளின் GDP இன்று குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐடி நிறுவனங்கள், விமான சேவைகள், வங்கி சேவைகள் ஆகியவை முடங்கியுள்ளதால், அவர்களுக்கு வரும் வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் முடங்கியுள்ளன.

News July 19, 2024

நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட்

image

நீலகிரி மாவட்டத்தில் இன்று தீவிர கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் ரெட் அலர்ட் விடுத்துள்ளது. அதேபோல, கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்று எச்சரித்து ஆரஞ்சு நிற அலர்ட் விடுத்துள்ளது. அதோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புண்டு.

News July 19, 2024

ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

image

நான் முதல்வன் திட்டத்தில் UPSC முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஊக்கத்தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தேர்வுக்கு தயாராக ஒவ்வொரு மாணவருக்கும் 10 மாதங்களுக்கு தலா ₹7500 வழங்கப்படுகிறது. இத்கொகையை பெற நடப்பாண்டில் UPSC முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் இன்று முதல் ஜூலை 28ஆம் தேதி வரை <>nanmudhalvan<<>> என்ற தளத்தில் விண்ணப்பிக்கலாம்.

News July 19, 2024

மைக்ரோசாஃப்ட் நிறுவன கோளாறு கண்டறியப்பட்டது

image

மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்க காரணமான Crowdstrike இயங்குதள கோளாறு கண்டறியப்பட்டுள்ளதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார். உடனடியாக அது சரி செய்யப்பட்டு மாற்று ஃபைல்கள் அப்லோடு செய்யப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளித்துள்ள அவர், படிப்படியாக சேவைகள் சரியாகும் என்று தெரிவித்துள்ளார். Mac, Linux ஆகிய Operating Systemஇல் இயங்கும் கம்ப்யூட்டர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 19, 2024

இன்று மாலை ‘விடாமுயற்சி’ படத்தின் அப்டேட்

image

மகிழ்திருமேனி இயக்கத்தில் அஜித், அர்ஜுன், த்ரிஷா, ஆரவ் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘விடாமுயற்சி’. பல மாதங்களாக இப்படத்தின் அப்டேட் வராமல் இருந்த நிலையில், சமீபத்தில் அடுத்தடுத்து இப்படத்தின் இரண்டு போஸ்டர்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு விருந்தளித்தது படக்குழு. இந்நிலையில், இன்று மாலை 5:05 மணிக்கு இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

News July 19, 2024

9 துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

image

வங்கக் கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறியது. இதனால், சென்னை, கடலூர், எண்ணூர், தூத்துக்குடி, பாம்பன், நாகை, காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் துறைமுகங்களில் 1ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. மேலும், சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ள மீனவர்கள் பத்திரமாக இருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News July 19, 2024

ஒரு நபரால் முடங்கிய உலகம்

image

CrowdStrike என்னும் இயங்குதளத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக உலகம் முழுவதும் மைக்ரோசாஃப்ட் சேவைகள் முடங்கியுள்ளன. இதன் காரணமாக ஐடி பணிகள், விமான சேவைகள், வங்கி சேவைகள் உள்ளிட்ட பல்வேறு ஆன்லைன் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. யாரோ ஒரு Crowdstrike ஊழியர் தவறான ப்ரோகிராமை அப்டேட் செய்ததே இந்த பிரச்னைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அவரை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தேடி வருகிறது.

News July 19, 2024

பூஜா கேட்கருக்கு வாழ்நாள் தடை: UPSC

image

ஐஏஸ் தேர்வில் முறைகேடு செய்த புகாரில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பூஜா கேட்கர் மீது, UPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த விவகாரத்தில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் அவர் UPSC தேர்வு எழுதுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், ஐஏஎஸ் தேர்வில் போலி ஆவணங்களை சமர்ப்பித்த புகார் தொடர்பாக குற்றவியல் விசாரணை மேற்கொண்டு வருவதாக UPSC தெரிவித்துள்ளது.

error: Content is protected !!