India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, அதிமுகவுக்கு தேர்தல் பத்திர நன்கொடை எதுவும் கிடைக்கவில்லை. மக்களவைத் தேர்தலுக்கு முன்புவரை, அதிமுகவுக்கு அதிக நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணி தோல்வியடைந்ததை வைத்து, சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சி பின்னடைவை சந்திக்கும் என நிறுவனங்கள் கணித்துள்ளன. இதனால் மக்களவைத் தேர்தலுக்கு பிறகு எந்த நன்கொடையும் அளிக்கவில்லை.
பொன்முடியை அமைச்சராக்குவதற்கு ஆளுநர் மாளிகையில் இதுவரை எந்த ஒரு ஏற்பாடும் செய்யப்படவில்லை. பொன்முடியை அமைச்சராக்க பரிந்துரைத்து முதல்வர் அளித்த கடிதத்தை ஆளுநர் நிராகரித்திருந்தார். இந்நிலையில், ஆளுநர் சட்டத்தை மீறி செயல்படுவதாக உச்சநீதிமன்றம் நேற்று கண்டனம் தெரிவித்து பொன்முடியை அமைச்சராக்க 24 மணி நேர கெடுவும் அளித்திருந்தது. ஆனால், ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே மற்றும் ஆர்.சி.பி அணிகள் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சி.எஸ்.கே 20 முறையும், ஆர்.சி.பி 10 முறையும் வென்றுள்ளன. ஒரு போட்டி ‘டை’ ஆனது. இந்தாண்டு ஐபிஎல் தொடரில் சி.எஸ்.கே, ஆர்.சி.பி இடையேயான முதல் போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும் என நீங்கள் நினைக்கிறீர்கள்? என்று இங்கே தெரிவிக்கவும்.
தமிழகத்தில் ஏப்.19ஆம் தேதி ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி ஏப்.17ம் தேதி மாலை 6 மணி முதல் 19ஆம் தேதி மாலை 6 மணி வரை டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் காரணமாக பள்ளித் தேர்வுகளும் முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2019 மக்களவைத் தேர்தலுக்கு பிறகு, தமிழ்நாட்டில் திமுகவுக்கு மட்டுமே தேர்தல் பத்திர நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது. 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இதில் சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு திமுகவுக்கு மட்டும் தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ.632 கோடி அளிக்கப்பட்டுள்ளது. அதில் ரூ. 106 கோடி, சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பு அளிக்கப்பட்டுள்ளது.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மருத்துவ பரிசோதனை நடந்து வருகிறது. நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட உள்ள நிலையில், அமலாக்கத்துறை அலுவலகத்திலேயே இந்த சோதனை நடக்கிறது. அவரது கைதைக் கண்டித்து நாடு முழுவதும் ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எதிர்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
தமிழ்நாட்டு மக்களுக்கு குல தெய்வ வழிபாடு மிக முக்கியமானதாகும். வேலை நிமித்தமாக பலர் இடம்பெயர்வதாலும், சரிவர விவரம் தெரியாததாலும், சிலருக்கு தங்களது குல தெய்வம் எது என்பது தெரியாமல் இருக்கும். அதுபோல குழப்பத்தில் இருப்போர் கவலைப்பட வேண்டாம். தமிழர்களின் கடவுளான முருகனை வழிபட்டால், குல தெய்வத்தை வழிபட்டதற்கான அனைத்து பலன்களும் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் கூறுகின்றனர்.
ஆன்லைன் உணவு டெலிவரி அப்ளிகேஷன் மூலம் டெலிவரிக்கு வந்தவர் இளம் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் இரவு 8 மணியளவில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்துள்ளார். அதனை டெலிவரி செய்ய வந்த நபர், பெண்ணிடம் தண்ணீர் கேட்டிருக்கிறார். அதனை எடுக்க கிச்சனுக்கு சென்றபோது பின்தொடர்ந்து வந்து பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார் அந்த நபர்.
பின்னணி பாடகராக நடிகர் விஜய் சேதுபதி புதிய அவதாரமெடுத்துள்ளார். திரைப்படங்களில் நாயகன், வில்லன், குணச்சித்திரம் என பல பரிணாமங்களில் விஜய் சேதுபதி கலக்கி வருகிறார். இதையடுத்து பின்னணி பாடகராகவும் அவர் புதிய அவதாரமெடுத்துள்ளார். மாஸ்டர் மகேந்திரன் கதாநாயகனாக நடிக்கும் கரா படத்தில், அச்சு ராஜாமணி இசையில் “காதல் குமாரு, வைரல் ஆனாரு” என்ற பாடலை விஜய் சேதுபதி பாடியுள்ளார்.
அதிமுக கூட்டணியில் தேமுதிக- 5, எஸ்டிபிஐ, புதிய தமிழகத்திற்கு தலா 1 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. 33 தொகுதிகளில் அதிமுக நேரடியாக போட்டியிடுவதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், கூட்டணியில் உள்ள புரட்சி பாரதத்திற்கு ஒரு சீட் கூட ஒதுக்கப்படவில்லை. இதையடுத்து, அக்கட்சி சார்பில் இன்று அவசர ஆலோசனை நடைபெற உள்ளது. இதில் அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து முடிவு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Sorry, no posts matched your criteria.