News July 20, 2024

கூட்டு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும்: அமித் ஷா

image

தேசத்தைப் பாதுகாப்பதில் அரசின் கூட்டு நடவடிக்கைகளை முகமைகள் பின்பற்ற வேண்டும் என மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவுறுத்தியுள்ளார். உள்நாட்டு பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடும் முகமைகளின் உயர்நிலைக் கூட்டத்தில் பேசிய அவர், “பயங்கரவாத அமைப்புகளை ஒழிக்கவும், உள்நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்யவும் IP, MAC உள்ளிட்ட அனைத்து முகமைகள் இடையே பெரிய அளவில் ஒத்துழைப்பு இருக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

News July 20, 2024

6ஜியில் உலகை இந்தியா வழிநடத்தும்: சிந்தியா

image

6ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா வழிநடத்தும் என்று மத்திய தொலைதொடர்பு துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். கருத்தரங்கில் பேசிய அவர், மோடி தலைமையின்கீழ் 4ஜி தொழில்நுட்பத்தில் உலகை இந்தியா பின் தொடர்ந்ததாகவும், 5ஜியில் உலகோடு சேர்ந்து நடைப்போட்டதாகவும் கூறினார். தொழில்நுட்ப நுகர்வோர் என்பதில் இருந்து, விநியோகஸ்தர் என்ற நிலைக்கு இந்தியா உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.

News July 20, 2024

ஒலிம்பிக்ஸில் இதுவரை இந்தியா வென்ற பதக்கங்கள்

image

இந்தியா 1900ம் ஆண்டு முதல் ஒலிம்பிக்ஸில் பங்கேற்று வருகிறது. இதுவரை 35 பதக்கங்கள் இந்தியாவுக்கு கிடைத்துள்ளன. அவற்றில் தனிநபர் பிரிவுகளில் 2008 பீஜிங் ஒலிம்பிக்ஸில் துப்பாக்கி சுடுதலில் அபிநவ் பிந்த்ரா, 2020 டோக்கியோ ஒலிம்பிக்ஸில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா வென்ற தங்க பதக்கங்களும் அடங்கும். இதையடுத்து தற்போது அதிக பதக்கம் வெல்லும் முனைப்புடன் பாரீஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியா பங்கேற்கிறது.

News July 20, 2024

நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

image

நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக, 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் தாலுகாக்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 4 நாள்களாக அங்கு கனமழை பெய்து வரும் நிலையில், இன்றும் மிக கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News July 20, 2024

திருவண்ணாமலை கிரிவலம் செல்ல உகந்த நேரம்

image

நினைத்தாலே முக்தி தரும் தலமாக கருதப்படும் திருவண்ணாமலையில் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் மலையை சுற்றி கிரிவலம் வந்து சிவனை வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்று ஆன்மிகம் கூறுகிறது. அதன்படி, பெளர்ணமியான இன்று கிரிவலம் செல்ல உகந்த நேரம் குறித்து கோயில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில், இன்று மாலை 6:05 முதல் நாளை மாலை 4.48 மணி வரை உகந்த நேரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News July 20, 2024

ஆச்சரியம் அளிக்கும் உச்சி பிள்ளையார் ஆலயம்

image

திருச்சியில் உள்ள மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோயில் உலகப்புகழ் பெற்ற திருத்தலம் ஆகும். இந்த கோயிலின் ஆயிரங்கால் மண்டபம் சிறப்பு வாய்ந்தது. 275 அடி உயரம் கொண்ட மலை மீது இந்த விநாயகர் அமர்ந்துள்ளார். இங்குள்ள விநாயகரை தரிசிக்க பக்தர்கள் 417 படிக்கட்டுகள் ஏறி கோயிலுக்கு செல்கின்றனர். 6-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோயிலில் தாயுமானவர் சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

News July 20, 2024

இன்றைய தலைப்புச் செய்திகள்

image

➤ தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்?
➤ ஆம்ஸ்ட்ராங் கொலை: பாஜக முன்னாள் நிர்வாகி கைது
➤ 13 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்
➤ தமிழகத்தில் சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
➤ கர்நாடக இட ஒதுக்கீடு மசோதா முட்டாள்தனம்: சசி தரூர்
➤ சூர்யா பிறந்தநாளில் ரீ-ரிலீசாகும் ‘வேல்’?
➤ இந்திய மகளிர் அணி அபார வெற்றி

News July 20, 2024

குரூப் 2: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

image

குரூப் 2 மற்றும் 2ஏ பிரிவில் பல்வேறு துறைகளில் 2,327 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அது இன்று இரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. www.tnpsc.gov.in இணையதளத்தின் வாயிலாக தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

News July 20, 2024

இஸ்லாமியர்கள் குறித்து அசாம் முதல்வர் சர்ச்சை பேச்சு

image

அசாமில் இஸ்லாமியர்களின் மக்கள் தொகையை கட்டுப்படுத்துவோம் என அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறியுள்ளார். 2041க்குள் அசாம், இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் மாநிலமாக மாற வாய்ப்புள்ளதாகக் கூறிய அவர், 10 வருடத்தில் அசாம் மக்கள் தொகையில் இஸ்லாமியர்கள் எண்ணிக்கை 40% உயர்ந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சுக்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

News July 20, 2024

ஸ்டாலினுக்கு எதிரான வழக்கில் நாளை மறுநாள் தீர்ப்பு

image

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் நாளை மறுநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. குட்கா எடுத்துச் சென்றதற்காக சட்டப்பேரவை உரிமைக்குழு ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்த அவர் தொடர்ந்த வழக்கில், உரிமை குழுவின் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் நாளை மறுநாள் தீர்ப்பு வெளியாகிறது.

error: Content is protected !!