India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகியிருக்கிறது. 14 பேர் கொண்ட பட்டியலில் விருதுநகரில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தென்காசி – ஜான் பாண்டியன், சிவகங்கை – தேவநாதன், நாகை – ரமேஷ், தஞ்சை – முருகானந்தம் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர். இதோடு, தமிழகத்தில் 23 வேட்பாளர்களை பாஜக அறிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. அதன்படி வடசென்னை – பால் கனகராஜ், திருவள்ளூர் – பால கணபதி, திருவண்ணாமலை – அஸ்வத்தாமன், நாமக்கல் – கே.பி.ராமலிங்கம், திருப்பூர் – ஏ.பி.முருகானந்தம், பொள்ளாச்சி – வசந்தராஜன், கரூர் – செந்தில் நாதன், சிதம்பரம் – கார்த்தியாயினி, மதுரை – ராம சீனிவாசன் ஆகியோர் தாமரை சின்னத்தில் போட்டியிடுகின்றனர்.
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் அமலாக்கத்துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார். இதற்கு நாடு முழுவதும் எதிர்கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். சென்னையில் கெஜ்ரிவால் கைதை கண்டித்து திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த படங்களை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின், டெல்லியில் ஜனநாயகத்தின் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.
➤2011 பிப். 2: ஆ.ராசா கைது. ➤ 2011 மார்ச் 14: 2ஜி வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. ➤2011 மார்ச் 16: சாதிக் பாட்சா மரணம். ➤2011 அக். 23: கனிமொழி கைது. ➤2012 பிப். 2: உரிமங்கள் ரத்து செய்யப்பட்டது. ➤2014 ஏப். 25: குற்றப்பத்திரிகையை ED தாக்கல் செய்தது. ➤2015 ஜூன் 1: கலைஞர் டி.வி-க்கு 200 கோடி கிடைத்ததாக ED குற்றம்சாட்டியது. ➤2017 டிச. 21: ஊழல் வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், குடும்ப அட்டை உள்ள அனைவருக்கும் ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர்களை வழங்க மத்திய அரசுக்கு வலியுறுத்தப்படும், பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசே நிர்ணயிக்க வேண்டும், பிரதமரின் வீடு கட்டும் திட்ட மானியத்தை ₹2.70 லட்சத்தில் இருந்து ₹5 லட்சமாக உயர்த்த வலியுறுத்தப்படும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
➤2008 அக் 20: டாடா போன்ற நிறுவனங்கள் தங்களுடைய பங்குகளை ஈடிசாலட், டோகோமோ போன்ற நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தன. ➤2009 நவ 20: ஒதுக்கீட்டில் கார்ப்பரேட்களின் தலையீடு இருந்ததை IT உறுதி செய்தது. ➤2010 மே 6: ஆ.ராசா – நீரா ராடியா பேசிய ஆடியோ வெளியானது. ➤2010 நவ 10: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் அரசுக்கு ரூ.1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது என்று சி.ஏ.ஜி குற்றம்சாட்டியது.
ரிலீஸூக்கு முன்பே ராம் சரணின் கேம் சேஞ்சர் படம் ரூ.420 கோடி ஈட்டியுள்ளது. ரூ.400 கோடி பட்ஜெட்டில் படத்தை சங்கர் இயக்கியுள்ளார். ஒரு சண்டை காட்சியை படமாக்க மட்டுமே ரூ.70 கோடி செலவிடப்பட்டுள்ளது. டிரைலரோ, ரிலீஸ் தேதியோ இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும் தமிழ் பதிப்பை பிரைம் ஓடிடி ரூ.150 கோடிக்கும், தெலுங்கு பதிப்பை ஜீ5 ரூ.270 கோடிக்கும் வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள டிடிவி தினகரனின் அமமுகவிற்கு குக்கர், ஜி.கே.வாசனின் தமாகாவிற்கு சைக்கிள் சின்னங்களை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. இந்த வரிசையில், சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு தற்போது மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மதிமுகவுக்கு இன்னும் சின்னம் ஒதுக்கப்படவில்லை. திமுக கூட்டணியில் திருச்சி தொகுதியில் தனிச் சின்னத்தில் மதிமுக போட்டியிட உள்ளது குறிப்பிடத்தக்கது.
பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி. பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்துவைக்க ஆளுநர் மறுத்ததால் உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. அதனையடுத்து, பொன்முடிக்கு அழைப்பு விடுத்திருக்கும் ஆளுநர், உச்சநீதிமன்றத்தில் மன்னிப்பும் கேட்டார். ஆளுநரின் பதிலை ஏற்றுக் கொண்ட உச்சநீதிமன்றம், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டது.
➤2007 மே 16 : ஆ.ராசா தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானார். ➤2007 ஆக 1 : 2G உரிமம் ஒதுக்கீடு செய்யும் நடவடிக்கை தொடங்கியது. ➤2007 செப் 25 – 2008 ஜன 10: விண்ணப்பங்கள் பெற்றப்பட்டன. ➤2008 ஜன 10: முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை வழங்க முடிவு செய்யப்பட்டது. ➤2008 ஜன 11: ஸ்வான் டெலிகாம், டாடா, யுனிடெக், லூப், ஸ்பைஸ், ஐடியா, டேட்டாகாம், வீடியோகான், ஷ்யாம் ஆகிய நிறுவனங்கள் 2ஜி அலைக்கற்றை உரிமம் பெற்றன.
Sorry, no posts matched your criteria.