India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஐபிஎல் தொடரை முன்னிட்டு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ்நாட்டு வீரர்களுக்காக சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த சீசனில் தமிழர்களின் திறமை என்ன என்பதை காட்ட 12 வீரர்கள் தயாராக உள்ளனர். இத்தொடரில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அஷ்வின், தினேஷ் கார்த்திக், நடராஜன், ஷாருக் கான், சாய் சுதர்சன், விஜய் சங்கர், சாய் கிஷோர், சுந்தர், வெங்கடேஷ், வருண், சித்தார்த், ஜாதவேத் சுப்ரமணியன் ஆகியோர் விளையாடுகின்றனர்.
தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மற்றும் கோயம்புத்தூர்தான் பாஜகவுக்கு என்றைக்குமே செல்வாக்கு மிகுந்த மாவட்டங்கள். தமிழக பாஜக வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த எண்ணிக்கையிலான எம்.எல்.ஏக்களை கோவைதான் கொடுத்திருக்கிறது. அதனாலேயே, கோவையில் அண்ணாமலையை களம் இறக்க பாஜக தலைமை முடிவு செய்திருக்கிறது. ஜாதி ஓட்டும் அவருக்கு சாதமாக விழும் என்று கணிக்கப்பட்டிருப்பதால் அண்ணாமலை கோவையில் போட்டியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகள் சின்னம் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், சின்னம் இல்லாமல் நாதக பரப்புரையில் ஈடுபட்டது. தேர்தல் ஆணையத்திடம் அரிக்கேன் விளக்கு, மைக் உள்ளிட்ட சின்னங்களை நாதக கேட்ட நிலையில், மைக் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை நாதக வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவர் எனத் தெரிகிறது.
மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை, ‘தமிழர் உரிமை மீட்போம், தமிழ்நாடு காப்போம்’ என்ற கொள்கை பிரகடனத்தோடு வெளியானது. இதில், மத்திய அரசுடன் இணைந்து விவசாயிகளுக்கு ஆண்டு ஓய்வு ஊதியமாக ₹5,000 வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், ஆளுநர் பதவியை நியமிக்கும்போது மாநில அரசின் கருத்துகளை கேட்க வேண்டும், கூட்டாட்சி மொழிகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடக்க விழா கலைநிகழ்ச்சியை கீழ்காணும் தளங்களில் காண முடியும். 1) ஜியோ சினிமா செயலி மற்றும் இணையதளம் 2) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 தொலைக்காட்சி 2) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 தொலைக்காட்சி 3) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 தொலைக்காட்சி 4) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 1 ஹெச்.டி. தொலைக்காட்சி 5) ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 2 ஹெச்.டி தொலைக்காட்சி
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தனித்து நின்று, அரசியல் அங்கீகாரம் பெறும் திராணி பாஜகவிடம் இருக்கிறதா என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் நடந்த கூட்டத்தில் பேசிய அவர், “எந்த சின்னத்தை ஒதுக்கினாலும், நான் போட்டியிடுவேன். வெற்றி பெற்று அங்கீகாரம் பெறுவேன். மக்களவைத் தேர்தலில் 8 கோடி மக்களுடன் நாங்கள் கூட்டணி அமைத்திருக்கிறோம்” எனத் தெரிவித்தார்.
மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ளார். சென்னையில் பேசிய அவர், “ஸ்ரீ பெரும்புதூரில் வி.என். வேணுகோபாலும், ஈரோட்டில் விஜயகுமாரும் போட்டியிட உள்ளனர். தூத்துக்குடி வேட்பாளர் பின்னர் அறிவிக்கப்படுவார். தமாகா சார்பில் சைக்கிள் சின்னத்தில் நேரடியாக போட்டியிட உள்ளனர்” எனத் தெரிவித்தார்.
தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து தேர்தலில் பாஜகவுக்கு எதிராக அதிமுக பிரசாரம் செய்யுமா என கேள்வி எழுந்துள்ளது. தேசிய அளவில் பாஜகவும், தமிழ்நாட்டில் திமுகவும் அதிக நன்கொடை பெற்றுள்ளன. மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக தனித்தனி அணிகளாக களம் காண்கின்றன. இந்நிலையில், தேர்தல் பத்திர விவகாரத்தை முன்வைத்து பாஜக, திமுகவுக்கு எதிராக அதிமுக பிரசாரம் செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கையை இபிஎஸ் வெளியிட்டுள்ளார். அதில், 100 நாள் வேலை திட்டத்தை 150 நாளாக உயர்த்தி தினக் கூலியாக ரூ.450 வழங்க நடிவடிக்கை எடுக்கப்படும், மாநில அரசின் நிதிச் சுமையை குறைக்க நிதிப்பகிர்வை 75:25 என்று மாற்றி அமைக்க வேண்டும், கோவையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும், நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.
ப்ராக் சர்வதேச செஸ் தொடரில் இந்தியாவின் இளம் வீரர் ஆன்ஷ் நந்தன் (11) சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். செக் குடியரசில் 6 ஆவது ப்ராக் சர்வதேச செஸ் தொடர் நடந்தது. இதில் எதிர்கால வீரர்கள் பிரிவில் 9 சுற்றில் 7இல் வென்ற ஆன்ஷ் நந்தன் 8.0 புள்ளியுடன் முதலிடம் பிடித்து கோப்பையைத் தட்டிச் சென்றார். அத்துடன் கேண்டிடேட் மாஸ்டர் டைட்டிலைப் பெறவும் ஆன்ஷ் நந்தன் தகுதி பெற்றிருக்கிறார்.
Sorry, no posts matched your criteria.