India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
போர் பதற்ற சூழலில், இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலியின் உதவியாளர் கமால் கராசி, அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை தங்களிடம் இல்லை எனவும், ஆனால், ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
RCB-DC இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற உள்ளது. டெல்லி கேப்டன் ரிஷப் பண்டுக்கு 3 முறை அபராதம் விதிக்கப்பட்டதால், இன்றைய போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியை வழிநடத்துவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதனால், டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதி முன்னாள் எம்.பி கைலாஷோ ஷைனி பாஜகவில் இருந்து விலகி அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். ஏற்கெனவே, அங்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரஸில் இணைந்தனர். தொடர்ந்து, பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
நெடுஞ்சாலையில் கார் டயர்கள் வெடித்த விபத்தில் நேற்று தஞ்சையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கார்களுக்கு டயர்கள் மிகவும் முக்கியமானவை. அதனை முறையாக பராமரித்து மாற்றாவிட்டால் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடும். டயர்களின் threads சரியாக இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும், bloating ஆகாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், அதிக சூடாகிறதா என்று செக் செய்ய வேண்டும்.
மே 30ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தின் ‘பட்டணப் பிரவேசம்’ நடைபெறும் என்று ஆதீன நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆதீனத்தை சீடர்கள் பல்லக்கில் தூக்கி சுமக்கும் நிகழ்வே பட்டணப் பிரவேசம் ஆகும். 2022ஆம் ஆண்டு ‘மனிதனை மனிதனே சுமப்பதா’ என்று இந்நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், மீண்டும் பட்டணப் பிரவேச நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கதேசத்திற்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 157/6 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 19ஆவது ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய, சிக்கந்தர் ராசா (72*), பிரையன் பென்னட் (70) இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களில் ஏறுவோரின் எண்ணிக்கையை குறைக்குமாறு, அரசுக்கு நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த காலத்தில் நூற்றுக்கணக்கான சாகசப் பயணிகள் சிகரங்களில் ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், மலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கழிவு மேலாண்மை மற்றும் மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
வெயில் காலங்களில் பலரால் ஏசி இல்லாமல் தூங்க முடியாது. ஆனால், ஏசியில் இருந்து பரவும் நுண் துகள்கள் ஆஸ்துமா நோயாளிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். அதற்கு, பில்டரை அவ்வப்போது சுத்தம் செய்ய வேண்டும். தலைவலி, சோர்வு உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்கொள்பவர்கள் ஏசியின் வெப்பநிலையை படிப்படியாக உயர்த்த வேண்டும். ஏசியை பயன்படுத்துவதால் தசைகளில் இறுக்கத்தை உணர்பவர்கள், போர்வையை போர்த்தி சருமத்தை பாதுகாக்கலாம்.
KKR-க்கு எதிரான நேற்றைய ஐபிஎல் போட்டியில், மும்பை வீரர் பும்ரா புதிய சாதனை படைத்துள்ளார். 4 ஓவர்களில் 39 ரன்கள் கொடுத்து, சுனில் நரைன், ரிங்கு சிங்கின் விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனால் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்களுக்கான (20 Wickets) பர்பிள் கேப்பை பெற்றார். மேலும், ஒரு சீசனில் 4 முறை 20 விக்கெட்டுகளுக்கு மேல் எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றார்.
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, நெல்லை, குமரி மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும், சென்னையில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.