India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகள் விரைவில் தொடங்கும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். சென்னையில் மழைநீர் வடிகால் பணிகளை பார்வையிட்டபின் பேசிய அவர், பல்வேறு இடங்களில் நடைபெற்றுவரும் மழைநீர் வடிகால் பணிகள் ஒரு மாதத்தில் முடிக்கப்படும் என்றார். மேலும், பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைச்சர்கள், எம்பிக்கள் அனைவரையும் களப்பணியாற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார்.

ஜூலை – 21 | ஆடி – 5 ▶கிழமை: ஞாயிறு ▶நல்ல நேரம்: 7:45 AM – 8:45 AM, 3:15 PM – 4:15 PM ▶கெளரி நேரம்: 1:45 AM – 2:45 AM, 1:30 PM – 2:30 PM ▶ராகு காலம்: 4:30 PM – 6:00 PM ▶எமகண்டம்: 12:00 PM – 1:30 PM ▶குளிகை: 3:00 PM – 4:30 PM ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶திதி: பவுர்ணமி

தமிழகத்தில் மின்கட்டணத்தை உயர்வை திரும்பப் பெறவேண்டும் என மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார். திருப்பூர், ஓசூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, கோவை உள்ளிட்ட நகரங்களில் மின் கட்டண உயர்வால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் முடங்கியுள்ளதாகக் கூறிய அவர், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் நடத்த முடியாத சூழல் நிலவுவதாக குற்றம் சாட்டினார். மின் கட்டண உயர்வால் ஏழை, எளிய மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளார் என்றார்.

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பவுர்ணமி தினமான நேற்று திருவண்ணாமலை தவிர்த்து பிற ஊர்களுக்கு போதிய பேருந்து வசதி இல்லை எனக்கூறி, அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இரவு 10 மணிக்கும் மேல் போராட்டம் நீடித்த நிலையில், போலீசார் அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் ‘கங்குவா’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அவரது பிறந்த நாளான ஜூலை 23ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு நடனம் அமைத்த பிரேம் ரக்ஷித் இப்பாடலுக்கு நடனம் அமைத்துள்ளதால் இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 10 மொழிகளில் உருவாகிவரும் இப்படம் அக்.10ல் வெளியாக உள்ளது.

➤ அறிவுத் தேவையைவிட கவனக்குறைவுதான் அதிக கஷ்டத்தை உண்டாக்குகிறது – வின்ஸ்டன்ட் சர்ச்சில்
➤ முடியாது என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்துகொண்டிருக்கிறார் – அப்துல் கலாம்
➤ அன்புதான் உங்கள் பலவீனம் என்றால், இந்த உலகின் மிகச்சிறந்த பலசாலி நீங்கள்தான் – அன்னை தெரசா
➤ பெரும் சாதனை செய்வதற்கு மூன்று நிலைகளை கடந்தாகவேண்டும். அவை ஏளனம், எதிர்ப்பு, அங்கீகாரம் – விவேகானந்தர்

இந்தியாவிலே தமிழகத்தில்தான் அதிக அளவில் அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். பல மாநிலங்களில் 20% அரசுப் பேருந்துகள் மட்டுமே உள்ளதாகக் கூறிய அவர், தமிழ்நாட்டில் சிறு கிராமங்களுக்கும் பேருந்து வசதி உள்ளதாகக் கூறினார். மேலும், நெருக்கடியான நிலையில் இருந்த போக்குவரத்து துறைக்கு முதல்வர் ஸ்டாலின் புத்துயிர் அளித்ததாகவும் நெகிழ்ச்சி தெரிவித்தார்.

இந்திய டி20 அணியின் புதிய கேப்டன் சூர்யகுமார் பவுலர்கள் கேப்டன் என ஆல்-ரவுண்டர் அக்சர் படேல் பாராட்டியுள்ளார். கடந்த காலங்களில் சூர்யாவுடன் விளையாடிய அனுபவத்தை பகிர்ந்த அவர், “சூர்யா, பவுலர்களின் வேண்டுகோளுக்கிணங்க களத்தை அமைத்து, நிலைமையை அமைதியாக கையாளுபவர். அருமையாக மிமிக்கிரி செய்பவர், மைதானத்தில் எப்போதும் கலகலப்பாக காணப்படுவார் என கூறியுள்ளார்.

சமீபத்தில் காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் பலத்தகாயமடைந்த கர்ப்பிணி ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சில மணி நேரங்களில் அவர் இறந்ததையடுத்து அவருக்கு மருத்துவர்கள் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் சோதனை செய்தனர். அதில் அவரது வயிற்றில் இருந்த குழந்தைக்கு இதய துடிப்பு இருந்ததையடுத்து, உடனடியாக அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுத்தனர். தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.

* 1965 – சிங்கப்பூரில் இன நல்லிணக்க நாள் கொண்டாடப்படுகின்றது.
* 1798 – கெய்ரோ போரில் நெப்போலியனின் படை வென்றது.
* 1929 – சோவியத் தமிழறிஞர் செமியோன் ரூதின் பிறந்தநாள்.
* 1954 – வியட்நாம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.
* 1969 – சந்திரனில் நடந்த முதல் மனிதர் என்ற புகழை நீல் ஆம்ஸ்ட்ராங் பெற்றார்.
* 2001 – நடிகர் சிவாஜி கணேசன் மறைந்தநாள்.
Sorry, no posts matched your criteria.