India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியாகிறது. தமிழகத்தில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட 9 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நேற்று காங்கிரஸ் மத்திய குழு கூட்டத்தில் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் அஜய்குமார் வெளியிடுகிறார்.
மக்களவைத் தேர்தலுக்கு முன் அனைத்து வழிகளிலும் எதிர்க்கட்சிகளை பலவீனப்படுத்த பாஜக முயற்சித்து வருவதாக காங்கிரஸ் கட்சி தலைவர் கார்கே குற்றம்சாட்டியுள்ளார். கெஜ்ரிவால் கைது குறித்து தனது X பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர், ‘தேர்தல் முடிவுகளை பற்றி தெரிந்து, பாஜக முன்பே பயந்து போய் விட்டது. அந்த அச்சத்தினால் எதிர்க்கட்சிகளுக்கு அனைத்து வழிகளிலும் தொந்தரவுகளை கொடுத்து கொண்டே இருக்கிறது’ என்றார்.
◾பால்: அறத்துப்பால்
◾ இயல் : இல்லறவியல்
◾அதிகாரம்: பொறையுடைமை
◾குறள்: 155
ஒறுத்தாரை ஒன்றாக வையாரே வைப்பர்
பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.
◾விளக்கம்: தனக்குத் தீமை செய்தவரைப் பொறுக்காமல் தண்டித்தவரைப் பெரியோர் ஒரு பொருட்டாக மதிக்கமாட்டார்; பொறுத்துக் கொண்டவரையோ பொன்னாகக் கருதி மதிப்பர்.
அதிக தேர்தல் பத்திரங்கள் வாங்கிய நிறுவனங்களில் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமான பியூச்சர் கேமிங் நிறுவனம் (ரூ.1,368 கோடி) முதலிடம் பிடித்துள்ளது. அதில் அந்நிறுவனம் அதிகபட்சமாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.542 கோடியும், திமுகவுக்கு ரூ.503 கோடியும், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிக்கு ரூ.154 கோடியும், பாஜகவுக்கு ரூ.100 கோடியும், காங்கிரஸ் கட்சிக்கு ரூ.50 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளது.
உலகம் முழுவதும் மின்னணு கழிவுகள் கற்பனைக்கு எட்டாத அளவுக்கு அதிகரித்து வருவதாக புதிய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. UTI & UNITAR அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், 2022இல் மட்டும் உலகளவில் 62 மில்லியன் டன் மின்னணு கழிவுகள் உருவாகியுள்ளன. இது 6,000 ஈபிள் டவர் எடைக்கு சமம். மேலும் மின்னணு கழிவுகள் ஆண்டுக்கு 2.6 மில்லியன் டன் அதிகரித்து, 2030க்குள் 82 மில்லியன் டன்னாக அதிகரிக்குமென கூறப்பட்டுள்ளது.
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது. டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து செல்லப்பட்ட கெஜ்ரிவாலுக்கு, டாக்டர்கள் மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனர். இதனிடையே, அமலாக்கத்துறையால் சட்டவிரோதமாக கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் இன்று முறையிட இருப்பதாக அம்மாநில அமைச்சர் அதிஷி தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 22) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். பிறந்தநாள் கொண்டாடுபவர்களின் தெளிவான புகைப்படங்களை அனுப்பி, உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள்.
சர்வதேச டேபிள் டென்னிஸ் தொடரில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் சத்யன் ஞானசேகரன் சாம்பியன் பட்டம் வென்றார். லெபனானில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சக இந்திய வீரரான மானவ் தாக்கரை எதிர்கொண்ட சத்யன், 3-1 (6-11, 11-7, 11-7, 11-4) என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றார். ஒரே நாளில், ஆடவர் ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் இறுதிப்போட்டியில் விளையாடிய மானவ் தாக்கர் மூன்றிலும் தோல்வியடைந்தார்.
இந்திய அரசியல் வரலாற்றில் முதல்முறையாக இரண்டு மாதத்தில், 2 மாநில முதல்வர்கள் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர். நில மோசடி, சட்டவிரோத பணப்பரிமாற்ற குற்றச்சாட்டில் கடந்த ஜனவரி 31ஆம் தேதி ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை கைது செய்திருந்தது. இந்நிலையில், மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நேற்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 57 பேர் கொண்ட 3ஆவது கட்ட வேட்பாளர்கள் பட்டியலை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. புதுச்சேரியில் வைத்தியலிங்கம் வேட்பாளராக களமிறங்குகிறார். மே.வங்கத்தின் பெர்ஹாம்பூரில் மீண்டும் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தானில் போட்டியிடும் வேட்பாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.