India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தங்க நகைகள் பிடிக்காத பெண்களே இல்லை எனலாம். அவர்களுக்கான டிப்ஸ்தான் இவை. பழைய தங்க நகைகள் புதிதுபோல் பளபளவென ஜொலிக்க இந்த டிப்ஸ்களை கடைபிடிக்கலாம் 1) பல்துலக்கும் பேஸ்டை நகைகள் மீது பூசி, பிரஸ் கொண்டு தேய்த்தால் அழுக்கு நீங்கி ஜொலிக்கும் 2) இளஞ்சூடான தண்ணீரில் சோப் பவுடரை கரைத்து ஊற வைத்து துடைத்தாலும் நகை பளபளக்கும் 3) நகை செய்வோரிடம் உள்ள பேஸ்ட்டை பயன்படுத்தியும் அழுக்கை நீக்கலாம்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 7ஆவது மத்திய பட்ஜெட்டை நாளை மறுநாள் தாக்கல் செய்யவுள்ளார். இதன் மூலம் 7 மத்திய பட்ஜெட்டை தொடர்ந்து தாக்கல் செய்த நிதியமைச்சர் என்ற சாதனையை அவர் படைக்கவுள்ளார். முன்னதாக, 1959 முதல் 1964ஆம் ஆண்டு வரை மத்திய நிதியமைச்சராக இருந்த மொரார்ஜி தேசாய், 6 பட்ஜெட்டை தொடர்ச்சியாக தாக்கல் செய்திருந்தார். அவரது சாதனையை நிர்மலா சீதாராமன் தற்போது முறியடிக்கவுள்ளார்.

நிஃபா வைரஸால் பாதிக்கப்பட்ட கேரளாவைச் சேர்ந்த 14 வயது சிறுவன் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலப்புரத்தைச் சேர்ந்த சிறுவன் கடந்த வெள்ளிக்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நிஃபா வைரஸ் பாதிப்பால் கேரளாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் தற்போதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நாடாளுமன்றத்தில் அனைத்து பிரச்னைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார். மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டு பொறுப்பு எனக் குறிப்பிட்டுள்ள அவர், டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் ஆக்கப்பூர்வ விவாதம் நடைபெற்றது என்றார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது.

டோக்கியோ ஒலிம்பிக் ஈட்டி எரிதல் போட்டியில் தங்கம் வென்ற தடகள வீரரான நீரஜ் சோப்ரா, பாரிஸ் ஒலிம்பிக்கில் 2ஆவது தங்கம் வெல்வாரா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இது குறித்து பேசிய அவர், கடுமையான அழுத்தத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளார். இதே மாதிரியான அனுபவத்தை கடந்த ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டில் எதிர்கொண்டதாகவும், இருந்தாலும், ஒலிம்பிக்கை ஆசிய போட்டிகளுடன் ஒப்பிட முடியாது என்றும் கூறினார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிறையில் வைத்து கொல்ல பாஜக சதி செய்துள்ளதாக ஆம் ஆத்மி எம்.பி., சஞ்சய் சிங் குற்றஞ்சாட்டியுள்ளார். கெஜ்ரிவாலின் உடல்நிலை குறித்து துணை நிலை ஆளுநர் சக்சேனா & பாஜகவினர் தவறான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகக் கூறிய அவர், சதியில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்ஸில் அலைச்சறுக்கு வீரர்கள் ஒவ்வொரு முறை அலைச்சறுக்கில் ஈடுபடும்போதும் (5) நடுவர்கள் குழு அவர்களுக்கு 1-லிருந்து 10-க்குள் மதிப்பெண் வழங்கும். வீரர்களின் வேகம், பயணிக்கும் விதம், அலையின் கடினத்தன்மை ஆகியவை கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். முடிவில் அவற்றின் அடிப்படையில் ஒட்டுமொத்தமாக அவர்கள் பெற்ற மதிப்பெண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பதக்கங்கள் வழங்கப்படும்.

*கிழங்குகளை வேக வைக்க, அரிசி கழுவிய நீரை பயன்படுத்தினால், சீக்கிரம் வெந்துவிடும். *ஆம்லெட் செய்யும் போது, ஒரு ஸ்பூன் மைதா மாவு கலந்து செய்தால், உப்பி வரும். *கத்திரிக்காய் வேக வைக்கும் போது, ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்தால், நிறம் மாறாமல் இருக்கும். *பீங்கான் ஜாடியில் தயிர் உறை ஊற்றினால் சீக்கிரம் புளிக்காது. *ரசம் கொதிக்கும் போது 5 புதினா இலைகளை போட்டு இறக்கினால், வாசனை தூக்கலாக இருக்கும்.

மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் இன்றும், நாளையும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. தொடர்ந்து, அடுத்த 7 நாள்களுக்கு தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. சென்னையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளது.

சாதியை முன்னிறுத்தி சிலர் சுய லாபம் காண துடிப்பதாக இயக்குநர் பேரரசு விமர்சித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங்க் கொலைக்கு நீதி கேட்டு பா.ரஞ்சித் தலைமையில் பேரணி நடைபெற்றது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள பேரரசு, ஒரு கட்சி மற்றொரு கட்சி மீது பழி சுமத்துவதும், இறந்தவர் மீது சாதிய வளையம் வைத்து சாதி கொலையாக மாற்றுவதும் சமூக ஆரோக்கியம் இல்லை எனவும், நாட்டை பின்னோக்கி இழுத்துவிடும் என்றும் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.