News May 12, 2024

மே 17 அன்று வெளியாகும் திரைப்படங்கள்

image

▶ஆனந்த் நாராயணன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘இங்க நான் தான் கிங்கு’, ▶வசந்தபாலன் இயக்கத்தில் கிஷோர், பரத் நடித்துள்ள ‘தலைமை செயலகம்’ ஆகிய 2 திரைப்படங்களும் வரும் மே 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதே நாளில், ▶தமிழ் இயக்கத்தில் உறியடி விஜய் குமார் நடித்துள்ள ‘எலெக்ஷன்’ (ஜீ) மற்றும் சாண்டி, கௌரி, கலையரசன், அபிராமி, ஜனனி ஐயர் நடித்த ‘ஹாட்ஸ்பாட்’ (ஆஹா) OTT தளங்களில் வெளியாகிறது.

News May 12, 2024

நாடு முழுவதும் 200 யூனிட் இலவச மின்சாரம்: கெஜ்ரிவால்

image

‘I.N.D.I.A’ கூட்டணி ஆட்சிக்கு வந்தால், நாடு முழுவதும் 24 மணிநேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வாக்குறுதி அளித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஏழைகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக, நாடு முழுவதும் அரசுப் பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் என அவர் அறிவித்துள்ளார்.

News May 12, 2024

பாஜகவுக்கு எதைக் கண்டும் பயமில்லை: அமித் ஷா

image

மோடி ராமர் கோயிலை மட்டுமல்ல, முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் காலத்தில் அழிக்கப்பட்ட காசி விஸ்வநாத் வழித்தடத்தையும் கட்டியுள்ளதாக, மத்திய அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் பிரதாப்கரில் பிரசாரம் செய்த அவர், எதிர்க்கட்சிகள் வாக்கு வங்கியைக் கண்டு பயப்படுவதாகவும், ஆனால், பாஜகவுக்கு எதைக் கண்டும் பயமில்லை எனவும் கூறினார். காஷ்மீரில் தீவிரவாதத்தை ஒழித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

News May 12, 2024

தேவைப்பட்டால் அணுகுண்டு தயாரிப்போம்

image

போர் பதற்ற சூழலில், இஸ்ரேலுக்கு ஈரான் அணுகுண்டு எச்சரிக்கை விடுத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலியின் உதவியாளர் கமால் கராசி, அணுகுண்டை உருவாக்கும் முடிவு இதுவரை தங்களிடம் இல்லை எனவும், ஆனால், ஈரானுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால் தங்கள் ராணுவக் கோட்பாட்டை மாற்றுவதைத் தவிர வேறு வழி இல்லை எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

News May 12, 2024

டெல்லி அணியின் கேப்டன் அக்சர் பட்டேல்

image

RCB-DC இடையேயான ஐபிஎல் போட்டி, இன்றிரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற உள்ளது. டெல்லி கேப்டன் ரிஷப் பண்டுக்கு 3 முறை அபராதம் விதிக்கப்பட்டதால், இன்றைய போட்டியில் விளையாட அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், அவருக்கு பதிலாக அக்சர் பட்டேல் அணியை வழிநடத்துவார் என்று அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். இதனால், டெல்லி அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

News May 12, 2024

முன்னாள் பாஜக எம்.பி காங்கிரஸில் இணைந்தார்

image

ஹரியானா மாநிலம் குருஷேத்ரா தொகுதி முன்னாள் எம்.பி கைலாஷோ ஷைனி பாஜகவில் இருந்து விலகி அம்மாநில முன்னாள் முதல்வர் பூபேந்தர் சிங் முன்னிலையில் காங்கிரஸில் இணைந்துள்ளார். ஏற்கெனவே, அங்கு 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் பாஜக அரசுக்கு அளித்த வந்த ஆதரவை வாபஸ் பெற்று, காங்கிரஸில் இணைந்தனர். தொடர்ந்து, பாஜக அரசு பெரும்பான்மையை இழந்துள்ளதாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரி எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

News May 12, 2024

கார் டயர்களை பாதுகாத்திடுங்க

image

நெடுஞ்சாலையில் கார் டயர்கள் வெடித்த விபத்தில் நேற்று தஞ்சையைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். கார்களுக்கு டயர்கள் மிகவும் முக்கியமானவை. அதனை முறையாக பராமரித்து மாற்றாவிட்டால் மிகப்பெரிய ஆபத்தில் கொண்டுபோய் விடும். டயர்களின் threads சரியாக இருக்கிறதா என்று செக் செய்ய வேண்டும், bloating ஆகாமல் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், அதிக சூடாகிறதா என்று செக் செய்ய வேண்டும்.

News May 12, 2024

சர்ச்சையான பட்டணப் பிரவேசம் மீண்டும் அறிவிப்பு

image

மே 30ஆம் தேதி தருமபுரம் ஆதீனத்தின் ‘பட்டணப் பிரவேசம்’ நடைபெறும் என்று ஆதீன நிர்வாகம் அறிவித்துள்ளது. ஞானபுரீஸ்வரர் கோயிலில் ஆதீனத்தை சீடர்கள் பல்லக்கில் தூக்கி சுமக்கும் நிகழ்வே பட்டணப் பிரவேசம் ஆகும். 2022ஆம் ஆண்டு ‘மனிதனை மனிதனே சுமப்பதா’ என்று இந்நிகழ்வுக்கு கடுமையான எதிர்ப்புகள் கிளம்பியது. இந்நிலையில், மீண்டும் பட்டணப் பிரவேச நிகழ்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

News May 12, 2024

ஜிம்பாப்வே அணிக்கு ஆறுதல் வெற்றி

image

வங்கதேசத்திற்கு எதிரான 5ஆவது டி20 போட்டியில், 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணி வெற்றி பெற்றுள்ளது. முதலில் ஆடிய வங்கதேச அணி, 20 ஓவர்கள் முடிவில் 157/6 ரன்கள் எடுத்தது. 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணி, 19ஆவது ஓவர்களிலேயே இலக்கை எட்டியது. அதிரடியாக விளையாடிய, சிக்கந்தர் ராசா (72*), பிரையன் பென்னட் (70) இருவரும் அணியை வெற்றி பெறச் செய்தனர்.

News May 12, 2024

எவரெஸ்ட் சிகரம் ஏற கட்டுப்பாடு

image

எவரெஸ்ட் உள்ளிட்ட சிகரங்களில் ஏறுவோரின் எண்ணிக்கையை குறைக்குமாறு, அரசுக்கு நேபாள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வசந்த காலத்தில் நூற்றுக்கணக்கான சாகசப் பயணிகள் சிகரங்களில் ஏறுவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இந்நிலையில், மலைகளின் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், கழிவு மேலாண்மை மற்றும் மலைகளின் சுற்றுச்சூழலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!