India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

தமிழகம் முழுவதும் புதிய கட்டிடத்திற்கான அனுமதியை ஆன்லைனில் பெறும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப, அரசின் அனைத்து திட்டங்களுக்கும் ஆன்லைனில் அனுமதி கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கட்டிடத்திற்கான அனுமதியை நாளை முதல் <

நடப்பு கல்வி ஆண்டில், 11-ஆம் வகுப்பு பயிலும் 4.89 லட்சம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டம் நேற்று தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கு நாளை முதல் இலவச சைக்கிள் வழங்கப்படவுள்ளன. பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சைக்கிளின் 2 சாவிகள் வழங்கப்படும் என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானதால், பயணிகள் ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது. சமீப நாள்களாக ரயில் கவிழும் சம்பவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 3 நாள்களுக்கு முன், உ.பி.யில் பயணிகள் ரயில் கவிழ்ந்ததில் 3 பேர் பலியாகினர். இதேபோல, நேற்று முன்தினம் குஜராத்திலும், நேற்று உ.பி., மாநிலம் மொரதாபாத்திலும் சரக்கு ரயில்கள் தடம் புரண்டது குறிப்பிடத்தக்கது.

குறைவான டெஸ்ட் இன்னிங்க்ஸ்-களில் 32 சதங்கள் அடித்த மூன்றாவது வீரர் என்ற ராகுல் டிராவிட்டின் சாதனையை இங்கிலாந்தின் ஜோ ரூட் முறியடித்தார். மே.இ.தீவுகளுக்கு எதிரான தனது 260ஆவது இன்னிங்க்ஸ்-இல் ஜோ ரூட் 32ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். இதன் மூலம் 261 இன்னிங்க்ஸ்-களில் 32 சதங்கள் அடித்த டிராவிட்டின் சாதனை தகர்க்கப்பட்டது. முதல் இரண்டு இடங்களில் ஜெயவர்தனே (235), ஸ்டீவ் வாக் (251) உள்ளனர்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளை தொடங்கிவிட்டதாக அதிமுக அறிவித்துள்ளது. தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. குறிப்பாக 2026 தேர்தலுக்கான திமுக தேர்தல் ஒருங்கிணைப்புக் குழு நேற்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், திமுகவுக்கு போட்டியாக தற்போது, அதிமுகவும் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டியுள்ளது.

இந்தியாவின் இரண்டாவது பெரும் பணக்காரரான கௌதம் அதானி, கடந்த நிதியாண்டில் மட்டும் ₹9.26 கோடியை சம்பளமாக பெற்றிருக்கிறார். இது சக நிறுவன CEOக்களின் சம்பளத்தை விட குறைவு. 10 நிறுவனங்களுக்கு மேல் அதானி தன்வசம் வைத்திருக்கும் நிலையில், இரண்டு நிறுவனங்களில் இருந்து மட்டுமே சம்பளம் வாங்கியிருக்கிறார். அவருடைய சொத்து மதிப்பு பங்கு விலையை மையப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

மின் விபத்துகளை தவிர்க்க, குடியிருப்புகளில் RCD பாதுகாப்பு கருவியை பொருத்துமாறு, பொதுமக்களுக்கு தமிழக மின்சாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மின்சார வயர்களில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், தானாகவே மின்சாரத்தை துண்டிக்கும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டது RCD பாதுகாப்புக் கருவி. இது பியூஸை விட அதிவேகமான திறன் கொண்டது பருவமழை தொடங்க உள்ளதால் மக்களின் பாதுகாப்பு கருதி, மின் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பாக பங்கேற்கும் வீரர்களுக்காக பிசிசிஐ ₹8.5 கோடி வழங்க முன் வந்துள்ளது. இதனை, செயலாளர் ஜெய் ஷா இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பாரீஸ் நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் தொடரில் இந்தியா சார்பில் 117 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். அவர்களின் பயண செலவு, பயிற்சி செலவு ஆகியவற்றுக்காக இந்த தொகை வழங்கப்பட்டுள்ளது.

உலகின் மிக இளம் கோடீஸ்வரர் என்ற பெருமையை பிரேசில் நாட்டைச் சேர்ந்த லிவியா வோய்க்ட் (20) பெற்றுள்ளார். இவர் WEG நிறுவனர் (மோட்டார் உற்பத்தி) வெர்னர் ரிக்கார்டோவின் பேத்தியாவார். அவருக்கு அந்நிறுவனத்தில் ₹10,020 கோடி மதிப்பு கொண்ட 3.1% பங்குகள் இருப்பதாக தெரியவந்துள்ளது. அண்மையில், ஃபோர்ப்ஸ் வெளியிட்ட 2024 உலக பில்லியனர்ஸ் பட்டியலில் இவர் 2,468ஆவது இடத்தைப் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் இன்று கோவை (LKK)-திண்டுக்கல்(DD) அணிகள் மோதின. முதலில் விளையாடிய LKK, 172/5 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய DD அணி 19.2 ஓவர்களில் இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. DD வீரர் பாபா இந்திரஜித் 96 (49) ரன்கள் குவித்தார். மற்றொரு ஆட்டத்தில் திருப்பூர்-சேலம் அணிகள் மோதுகின்றன. முதலில் பேட்டிங் செய்யும் திருப்பூர் அணி தற்போதுவரை 16 ஓவர்களில் 162/2 ரன்கள் எடுத்துள்ளது.
Sorry, no posts matched your criteria.