India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

1900 முதல் இந்தியா ஒலிம்பிக்ஸில் விளையாடி வருகிறது. இதுவரை 35 பதக்கங்களையே வென்றுள்ளது. அதில் தனிநபர் பிரிவில் இதுவரை 2 முறை இந்தியாவுக்காக பதக்கம் வென்று தந்தது யார் என இங்கு பார்க்கலாம். 1) நார்மன் பிரிட்சேர்ட் (ஓட்டப்பந்தய வீரர்) – 1900 ஒலிம்பிக்கில் 2 வெள்ளி 2) சுஷில்குமார் (மல்யுத்தம்) – 2008 வெண்கலம், 2012 வெள்ளி 3) பி.வி. சிந்து (பேட்மிண்டன்) – 2016 வெள்ளி, 2020 வெண்கலம்.

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நேற்று திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டதையடுத்து அவர் ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று காலை அவரை இருதயவியல் மூத்த மருத்துவர்கள் பரிசோதனை செய்ய உள்ளனர். அதன் பின்னரே அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

➤ டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு மொத்தம் 7.90 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தகவல்
➤ ஒடிஷா மாநில காங்கிரஸ் கமிட்டியை கூண்டோடு கலைக்கப்பட்டது.
➤ தமிழகத்தில் கடந்த 200 நாட்களில் 595 கொலைகள் நடைபெற்றுள்ளது – இபிஎஸ்
➤ ராஜஸ்தான் மாநிலத்தில் சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது
➤ பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது ➤ நாடாளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்கிறார். கடந்த நிதியாண்டில் பொருளாதார செயல்பாடு, பண வீக்கம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவை இந்த அறிக்கையில் இடம்பெறும். மக்களவையில் பிற்பகல் 1 மணிக்கும், மாநிலங்களவையில் பிற்பகல் 2 மணிக்கும் இது அறிமுகப்படுத்தப்படும். அதன் பிறகு செய்தியாளர் சந்திப்பு நடைபெறும்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று நடைபெற உள்ள நிலையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில் மக்களவைத் துணை தலைவர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என ‘INDIA’ கூட்டணி காட்சிகள் கோரிக்கை வைத்தன. மேலும், நீட் தேர்வு, மணிப்பூர் நிலவரம், ரயில் விபத்துகள், வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு குறித்தும் விவாதிக்க எதிர்க்கட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 12 வரை நடைபெறுகிறது. இரண்டாம் நாளான நாளை (ஜூலை 23) மத்திய நிதி அமைச்சர் நிர்மலா முழுபட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்தக் கூட்டங்களில் 6 மசோதாக்களை அரசு ஒப்புதலுக்குக் கொண்டுவரும் என கூறப்படுகிறது. அதேநேரம், நீட் தேர்வு வினாத்தாள் கசிவு, ரயில் விபத்துகள், மணிப்பூர் கலவரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிளம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் கடந்த 6 மாதமாக நடைபெற்று வருகிறது. அங்கு நடைபெறும் பணிகளை நேரில் சென்று ஆய்வு செய்த பின் பேசிய அமைச்சர் சேகர் பாபு, பணிகளை விரைவாக முடிக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தென்னக ரயில்வேக்கு அழுத்தம் கொடுத்து வருகிறோம் என்றார். மேலும், அடுத்த ஆண்டு மார்ச் மாதத்திற்குள் பணிகளை முடிப்பதாக அவர்கள் உறுதியளித்துள்ளதாகக் கூறினார்.

ஜூலை – 22 | ஆடி – 6 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:00 AM – 7:00 AM, 4:45 PM – 5:45 PM ▶கெளரி நேரம்: 9:15 AM – 10:15 AM, 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶திதி: திதித்துவம்

கடந்த அதிமுக ஆட்சியில் முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற வழக்கில் நாளை மறுநாள் உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது. குட்கா எடுத்துச் சென்றதற்காக சட்டப்பேரவை உரிமைக்குழு அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதை எதிர்த்த அவர் தொடர்ந்த வழக்கில், உரிமை குழுவின் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.

தமிழகம் முழுவதும் பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று காலை தொடங்குகிறது. அரசுப் பள்ளி சிறப்பு இட ஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு இன்றும், நாளையும் (ஜூலை 22, 23), பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஜூலை 25 – 27 வரையும் கலந்தாய்வு நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் ஆன்லைன் மூலம் நடைபெறும் கலந்தாய்வு குறித்து <
Sorry, no posts matched your criteria.